Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஈரான் அமைதி நிலைக்கு திரும்பாவிடில் தாக்குதல் தொடரும்.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
    உலகம்

    ஈரான் அமைதி நிலைக்கு திரும்பாவிடில் தாக்குதல் தொடரும்.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 22, 2025Updated:June 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250622 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸை அழிக்கும் வரை ஓயப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போர் தொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

    இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்திருந்த நிலையில், திடீரென “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

     

    இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், “உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளதாகவும், இந்திய நேரப்படி இன்று காலை வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஈரானில் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவத் தாக்குதலைப் பற்றிப் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடன் துணை ஜனாதிபதி வான்ஸ், வெளியுறவுத் துறை மந்திரி மார்க் ரூபியோ உள்ளிட்டோர் உடனிருந்ததாகச் செய்தி கூறுகிறது.

    #WATCH | US strikes Iran’s three nuclear facilities

    President Donald Trump says, “This cannot continue. There will be either peace or there will be tragedy for Iran, far greater than we have witnessed over the last eight days. Remember, there are many targets left. Tonight’s… pic.twitter.com/koWkXYjXBA

    — ANI (@ANI) June 22, 2025

    டிரம்ப் பேசுகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததாகவும், ஈரான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக உள்ளதாகவும், இந்த நிலை தொடரக் கூடாது, அமைதி நிலவ வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்துள்ளதாகவும், இதற்காக அமெரிக்க ராணுவத்தினருக்கு நன்றிகள் தெரிவிப்பதாகவும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

     

    மேலும், “ஈரான் அமைதியை விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து, அதனை ஊக்குவித்து வருகின்றனர். இதனால், ஈரான் மீது தாக்குதல் தொடரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒன்று அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும். ஈரானில் உள்ள அணு உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவை தகர்க்கப்பட்டு உள்ளன. ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம்” என டிரம்ப் சூளுரைத்ததாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

    Attack Benjamin Netanyahu donald trump Geopolitics Hamas Iran Israel Middle East conflict Nuclear facilities Operation Rising Lion US War அணு உலைகள் அமெரிக்கா ஆபரேஷன் ரைசிங் லயன் இஸ்ரேல் ஈரான் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் புவிசார் அரசியல் பெஞ்சமின் நெதன்யாகு போர் மத்திய கிழக்கு மோதல் ஹமாஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“உங்கள் அன்புக்காகவே வந்தேன்; இது எல்லோருக்குமான ஆட்சி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article தமிழ்நாடு சாலை மற்றும் பாலத் திட்டங்கள்: இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறையில் புதிய அத்தியாயம்!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.