Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விறுவிறுப்பாக நடந்து வரும் குடியரசு துணை தலைவர் தேர்தல்
    இந்தியா

    விறுவிறுப்பாக நடந்து வரும் குடியரசு துணை தலைவர் தேர்தல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 9, 2025Updated:September 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vice presidential election india live voting for indias next vice president underway in parliament nda mps express confidence in cp radhakrishnan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை குடியரசு தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவி வருகிறது.

    துணை குடியரசு தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை துணை குடியரசு தலைவர் பட்டியலுக்கு போட்டியிடுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டது. அதன்படி பாஜக கூட்டணியில் மகராஷ்டிர மாநில ஆளுஅர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் இருவரும் துணை குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இருவரும் நாடாளுமன்ற எம்பிக்களிடம் தங்களுக்கான ஆதரவை திரட்டினர்.

    இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் வைத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
    ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவரது ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் யாருக்கு வாக்களிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கேட்டபோது தமிழர் என்ற முறையில் சிபி இராதாகிருஷ்ணனை தாங்கள் ஆதரித்ததாகவும் அதனால்தான் அவருக்கு தர்மர் வாக்களித்திருப்பார் என கூறியதாக சொல்லப்படுகிறது.

    BJP nda vice president Vice President Election 2025
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்டதற்கு விஜய் கண்டனம்
    Next Article தேர்தல் வரை பசி – தூக்கம் – ஓய்வை மறந்து உழைக்க வேண்டும்.. திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.