Close Menu
    What's Hot

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விறுவிறுப்பாக நடந்து வரும் குடியரசு துணை தலைவர் தேர்தல்
    இந்தியா

    விறுவிறுப்பாக நடந்து வரும் குடியரசு துணை தலைவர் தேர்தல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 9, 2025Updated:September 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vice presidential election india live voting for indias next vice president underway in parliament nda mps express confidence in cp radhakrishnan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை குடியரசு தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவி வருகிறது.

    துணை குடியரசு தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை துணை குடியரசு தலைவர் பட்டியலுக்கு போட்டியிடுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டது. அதன்படி பாஜக கூட்டணியில் மகராஷ்டிர மாநில ஆளுஅர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் இருவரும் துணை குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இருவரும் நாடாளுமன்ற எம்பிக்களிடம் தங்களுக்கான ஆதரவை திரட்டினர்.

    இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் வைத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
    ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவரது ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் யாருக்கு வாக்களிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கேட்டபோது தமிழர் என்ற முறையில் சிபி இராதாகிருஷ்ணனை தாங்கள் ஆதரித்ததாகவும் அதனால்தான் அவருக்கு தர்மர் வாக்களித்திருப்பார் என கூறியதாக சொல்லப்படுகிறது.

    BJP nda vice president Vice President Election 2025
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்டதற்கு விஜய் கண்டனம்
    Next Article தேர்தல் வரை பசி – தூக்கம் – ஓய்வை மறந்து உழைக்க வேண்டும்.. திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.