Author: Editor TN Talks
மழைக்கால கூட்டத்தொடருக்கான சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மறைந்த கேரள முதலமைச்சர் பிஎஸ் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன் இறந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது நாள் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்…
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுரணர்கள் சோதனையிட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான ஐடி வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரடல் விடப்பட்டது. இதை தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 11ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரடல் விடடப்பட்டது. நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு செல்போன்…
சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்றிலிருந்து 17ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் கூடுதல் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்தும், கேள்விகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய முதல் நாள் கூட்டத்தில் கரூர் துயரத்தில் இறந்த 41 பேருக்கும், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இன்றுடன் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டனர். பேரவை தொடங்குவதற்கு முன்னதாக சட்டமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அதிமுக அறையில் எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவையில் அடுத்த மூன்று நாட்களிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கை…
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், கரூர் துயரத்தில் உயிரிழந்த 42 பேருக்கும் இரங்கல் அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பின்னர், கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளார் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் கூறி தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் இன்றைய கூட்டம் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நாளை 2025-2026ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவையில் அறிவிக்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளும் கூட்டம் தொடங்கியதும்…
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நீதி வெல்லும்’ என தவெக தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக…
ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்கள் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன்.என்நேரு, ஐ.பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த 3 துறைகளில் கீழ்…
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது முதலமைச்சர் சிபிஐ விசாரணை கேட்டதாகவும், தற்போது சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று உள்நோக்கத்துடன் சொல்கிறார் எனவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. டி.ஆர்.பாலுவினை குறுக்கு விசாரணை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “குறுக்கு விசாரணையில் இரண்டு மூன்று வாதங்களை செய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு மெமோ ஃபைல் செய்திருக்கிறோம், அடுத்த வாய்தாவில் நானே வழக்கை நடத்துகிறேன் என நீதிபதியிடம் கூறினோம். அதற்கு பால் கனகராஜ் உதவி புரிவார்கள் என முறையீடு செய்ததாகவும், அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர்…
கரூர் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கரூர் சம்பவத்தில் வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், இதை கூற வார்த்தைகள் இல்லை. இதற்கு முன்பாக பல ஊர்களுக்கு தவெக தலைவர் விஜய் பயணம் மேற்கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத எழுச்சியை மக்கள் பதிவு செய்தனர். ஆனால் சில மாவட்டங்களை விடுத்து பிற அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. அசம்பாவிதம் நடந்த கரூருக்கு சென்ற போது காவல்துறை எங்களை வரவேற்றது, இது எங்கும் நடக்காதது. காவல்துறையே எங்களை உரிய இடத்துக்கு அழைத்து கொண்டு சென்றனர். எங்கெல்லாமல் மக்கள் வந்தனரோ அங்கெல்லாம் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார். கரூரை பொறுத்த வரைக்கும் அந்த சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன விவகாரங்கள் நடைபெற்றதோ, அது அனைத்தையும் தலைமை நீதிபதியிடம் நாங்கள்…
தமிழ்நாட்டில் 2018 முதல் 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்லலாம் ஆனால் அதனை அரியர் தேர்வாக தொடர்ந்து எழுதி வெற்றி பெற வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தான் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பதினொன்றாம் வகுப்பு படித்து பதினொன்றாம் வகுப்பிலே தோல்வி அடைந்தவர்களுக்கு அந்த அரியர் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது அவையும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் இருந்து வந்தது… கடந்த ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வி துறையின்…
நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பாண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கேன் என் நேரு, ஐ பெரியசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார், பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். முதல் நாளில் கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அண்மையில் மறைந்த சிபு…