Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி நியமனம்… யார் இந்த பி.ஆர் கவாய்?
    இந்தியா

    உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி நியமனம்… யார் இந்த பி.ஆர் கவாய்?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Justice BR Gavai1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார்.

    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிறந்த பி.ஆர் கவாய், கேரளா மற்றும் பிகார் மாநில ஆளுநராக இருந்த ஆர்.எஸ் கவாயின் மகன் ஆவார். இவரது முழுபெயர் பூஷன் ராமகிருஷ்ண கவாய் ஆகும். இவர் அட்டவணை இனத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி ஆவார். வழக்கறிஞராக பணியாற்றிய பி.ஆர் கவாய், நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக்கழகத்திற்கும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2003-ம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 14 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் பி.ஆர் கவாய் வழங்கியுள்ள தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கு, ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளர் உட்பட 6 பேரை விடுவித்த வழக்கு, தேர்தல் பத்திரத் திட்டம், அட்டவணைப் பிரிவினருக்கான உள்ஒதுக்கீடு விதி அறிமுகம் உள்ளிட்ட வழக்குகளின் அமர்வில் பி.ஆர் கவாய் இடம்பெற்றவர் ஆவார். உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது என்று கருத்து தெரிவித்து கடுமையாக எதிர்த்தவர் பி. ஆர் கவாய்.

    தற்போது பதவியேற்றுள்ள பி.ஆர் கவாய், 65 வயதில் ஓய்வு பெற உள்ளதால் 6 மாத காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    52-வது தலைமை நீதிபதி இந்தியா உச்ச நீதிமன்றம் சட்ட வரலாறு பி.ஆர். கவாய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சபரி மலையில் நாளை முதல் தரிசனம்!
    Next Article காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்… இயக்குநர் கௌதமன் பதிலளிக்க நோட்டீஸ்…
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    October 10, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.