அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும். இதனால் அரிய உயிரினங்களை கடத்தி கள்ளச்சந்தையில் கோடிக்கணக்கான மதிப்பில் விற்க வழிவகுக்கிறது.
இதே போல், பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயம் மற்றும் பல மாநிலங்களில் காணப்படும் விஷமற்ற ரெட் சாண்டு போவா பாம்பும் உள்ளது. “இரண்டு தலை பாம்பு” என்று அறியப்படும் இந்த பாம்புக்கு நீண்ட காலமாக பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள், இதனை சட்டவிரோதமாக கடத்தும் போக்கை அதிகரித்துள்ளன. ரெட் சாண்டு போவாவுக்கு உண்மையில் இரண்டு தலைகள் இல்லை. அதன் வால் பாம்பின் தலையை ஒத்திருப்பதால் வேட்டையாடுபவர்களை குழப்பி தாக்குதல்களைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் திட்ட மேலாளரும் வனவிலங்கு நிபுணருமான அபிஷேக், “டபுள் எஞ்சின் பாம்புகள்” என்று அறியப்படும் இவை முற்றிலும் பாதிப்பில்லாதவை என்றும், அவை அடக்கமானவையாய் தொந்தரவு செய்யப்படாவிட்டால் மனிதர்களுடன் அரிதாகவே தொடர்பு கொள்ளும் என்றும் விளக்குகிறார். துரதிர்ஷ்டவசமாக, அரிதாக காணப்படுவது மற்றும் அதன் மாய தன்மை காரணமாக அவற்றின் சட்டவிரோத வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!
ஆதாரமற்ற நம்பிக்கைகளால் ரெட் சாண்டு போவாவுக்கான தேவை கள்ளச்சந்தையில் அதிகரித்துள்ளது. கடத்தல்காரர்கள், இந்த பாம்புக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாக கூறி ரூ.2 கோடி முதல் ரூ.25 கோடி வரை விற்பனை செய்கிறார்கள். மேலும், இதை வைத்திருப்பது செல்வத்தையும் வெற்றியையும் பெற உதவும் என்று நம்பப்படுகிறது. சிலர் இதனால் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் குணமாகும் என்று கூறுகின்றனர்.
ஆனால், வனவிலங்கு நிபுணர்கள் இந்தக் கூற்றுகளை மறுத்து, ரெட் சாண்டு போவாவுக்கு உண்மையான வணிக அல்லது மருத்துவ மதிப்பு எதுவும் இல்லை என்பதை விளக்குகின்றனர். இது மூடநம்பிக்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பல இடங்களில், தொழில் வளர இந்த பாம்புகள் பலியிடப்படுவதாகவும், அவற்றை அமானுஷ்ய நடைமுறைகள், சூனியம் மற்றும் தாந்த்ரீக சடங்குகளுடன் இணைத்துள்ளதும் கூறப்படுகின்றன.
மருந்துத் தொழில்களில் இதன் பயன்பாடு குறித்த வதந்திகளும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் தேவை அதிகரித்துள்ளதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. ரெட் சாண்டு போவா சுற்றுச்சூழலில் எலிகள், தவளைகள் மற்றும் சிறிய பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அபிஷேக் விளக்குகிறார்.
இதையும் படிக்க: தக்காளியை தினமும் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் முற்றிலும் வெளியேறுமா?!
ரெட் சாண்டு போவாவை வேட்டையாடுவது, பிடிப்பது அல்லது கடத்துவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தகத்தை குறைத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான அபராதமும் ஆயுள் சிறைத்தண்டனையும் விதிக்கின்றனர். இருப்பினும், பேராசை மற்றும் கட்டுக்கதைகள் காரணமாக கள்ளச் சந்தை வர்த்தகம் இன்னும் தொடர்கிறது.