Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக்… தடுப்பு சுவரில் மோதி விபத்து…
    தமிழ்நாடு

    13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக்… தடுப்பு சுவரில் மோதி விபத்து…

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bike accident 16601105114x3 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைசன்ஸ் பெற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியும் என போக்குவரத்து சட்டம் சொல்கிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    அந்த வகையில் சென்னை பூந்தமல்லி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது 13-வயது மகன் பிரியன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலைவாணன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

    தந்தை இல்லாத நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற பிரியன், தனது நண்பர்களான 10வயது சிறுவர்கள் கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகியோருடன் சுற்றியுள்ளார். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினர்.

    இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 13-வயது பிரியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் காயமடைந்த 10 வயதேயான கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகிய இரண்டு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு….
    Next Article ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.