Close Menu
    What's Hot

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொள்ளிடம் ஆற்று நீர் தொழிலகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது – எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு !
    தமிழ்நாடு

    கொள்ளிடம் ஆற்று நீர் தொழிலகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது – எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு !

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025Updated:July 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250715 WA0004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமான அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    வழக்கின் பின்னணி:

    திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரிகளே நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்குச் செல்லவும், நீர் பற்றாக்குறைக்கும் காரணம். தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அதிகமாக விவசாயம் செய்யப்படும் பகுதி என்பதால், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை கட்டக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. திருச்சி ஆனந்தமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீரேற்று குழாய்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீரேற்று பைப்புகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

    நீதிமன்ற விசாரணை:

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அரசுத்தரப்பில், “மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்கும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.

    அரசுத்தரப்பில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது” என விளக்கமளிக்கப்பட்டது.

    நீதிபதிகளின் உத்தரவு:

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு” உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    Drinking Water Groundwater Industrial Use Jal Jeevan Mission Kollidam River Madurai High Court PIL Public Interest Litigation Sand Mining Shanmugam Water Dispute குடிநீர் கொள்ளிடம் ஆறு சண்முகம் தொழிலகப் பயன்பாடு நிலத்தடி நீர் நீர் தகராறு பொதுநல வழக்கு மணல் குவாரி மதுரை உயர் நீதிமன்றம் ஜல்ஜீவன் திட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத DSP… சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
    Next Article வெளிநாடு செல்ல அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    April 4, 2026

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    April 4, 2026

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.