Author: editor5

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னித்தலா, இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். கேரள அரசு ஏற்கனவே போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக “ஆபரேஷன் துஃபான்” என்ற சிறப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்புக்காக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்…

Read More

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக பல உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ஜூலை 15 முதல் 17-ஆம் தேதி வரை தமிழகத்தின் 17 மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் காணப்படும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை நீடிக்கும். மேலும் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாமக்கல், கரூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும்…

Read More

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், ஓம் சக்தி கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அமைதியான குடியிருப்பு பகுதியாக உள்ள இந்தத் தெருவில், கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் வீடு வீடாகச் சென்று கதவுகள் மற்றும் இரும்பு கேட்களை தட்டிவிட்டு உடனடியாக மறைந்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிவிட்டு சற்று தூரத்தில் நின்று அந்த வீட்டிலிருந்து யாரேனும் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்தது பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராதபட்சத்தில், அந்த வீட்டில் யாரும் விழித்திருக்கவில்லை அல்லது வீட்டில் யாரும்…

Read More

சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே செயல்பட்டு வரும் மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தரப்பில் கிடைத்த தகவலின்படி, 12-ஆம் வகுப்பில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே சில நாட்களாக இருந்து வந்த தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக பள்ளி நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்த இந்த பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. அப்போது மாணவர்களில் ஒருவர் தன்னிடம் வைத்திருந்த கத்தியை எடுத்துத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக காயமடைந்த மாணவருக்கு முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் சிவகங்கை அரசு…

Read More

தென்பெண்ணை ஆற்றின் நீர்மாசு பிரச்சினை தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் அண்மையில் நுரை பொங்கி நீர் மாசடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துறை உறுப்பினர் பிரஷாந்த் கார்கவா அடங்கிய அமர்வு, மாசுபாட்டை கட்டுப்படுத்த இரு மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. பெங்களூரு மாநகரிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத அல்லது போதுமான அளவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதே கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அணையில் நுரை உருவாகி, நீரின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை, ஆற்றை நம்பி வாழும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற…

Read More

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அமைப்புகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கேற்பாளராக உள்ளார். ஜூன் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர், தற்போது 17 நாட்களைத் தொட்டுள்ளார். உண்ணாவிரதத்தின் விளைவாக அவர் ஏற்கெனவே 8.5 கிலோ எடையை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 109/70 என்ற அபாயகரமான நிலையில் உள்ளது. உட்காரவோ எழுந்து நிற்கவோ முடியாத அளவுக்கு மயக்கம், கடும் வலி மற்றும் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக அவரது உடல்நிலையை கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கழிவறைக்குச் செல்லக் கூட சிரமப்படும் நிலையில் அவர் படுக்கையில்…

Read More

தமிழகத்தில் ஜூலை 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கவுள்ள நிலையில், பல ஜவுளிக் கடைகள் ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பாகவே ஆடித் தள்ளுபடி விற்பனையை தொடங்கிவிட்டன. இந்தச் சீசன் சலுகை இன்று தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் பெருக்கு, அம்மன் கோயில் திருவிழாக்கள் என பல விழாக்கள் இம்மாதத்தில் நடைபெறும். ஆனால், திருமணம், காதுகுத்து, வீடு கட்டுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படும். புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைக்கும் சம்பிரதாயங்களும் உண்டு. இதனால் ஜவுளி, நகை உள்ளிட்ட விற்பனை பெருமளவில் குறையும். முந்தைய காலங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. “ஆடிப் பட்டம் தேடி விதை” எனும் பழமொழி இதைச் சுட்டும். ஆடி மாதத்தில் நெல் நடவு, கரும்பு நடவு போன்ற பணிகளுக்காக விவசாயிகள் தங்கள் கையிருப்பை முழுவதுமாகச்…

Read More

ஊழலை அறவே ஒழிப்பேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் செயல்களுக்கு எதிராக மக்களுக்கு எளிதான புகார் அளிக்கும் வழியை உருவாக்கியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், முதல்வர் விஜய்யின் உறுதியான நடவடிக்கைகளில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கோரினால், உடனடியாகப் புகார் அளிக்க 94981 80936 என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மின்னஞ்சல் மூலமும் புகார்களைப் பதிவு செய்யலாம். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் மின்னஞ்சல் முகவரி dvac@nic.in. தொலைபேசி எண்களான 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ள முடியும். நேரடியாகப் புகார் அளிக்க விரும்புவோர், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம், எண் 293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர், சென்னை – 600016 என்ற…

Read More

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் திமுக சார்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் பரந்தாமன், அண்மையில் நடைபெற்ற சபரிவர்மன் மரணம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் கைது செய்தது. கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அவர் உடல்நலத்துடன் இருந்ததாகவும், உறவினர்களும் அவரை நலமாகவே பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்த நிலையில், குடும்பத்தினருக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், பின்னர் அவரது உடல் பிணவறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்…

Read More

தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியில் முன்னணியில் திகழும் ஈரோடு மாவட்டம், அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதால் “மஞ்சள் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு விளையும் மஞ்சள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதுடன், ஏற்றுமதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை உள்ளிட்ட நான்கு முக்கிய மஞ்சள் மார்க்கெட்டுகளில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து வேலை நாட்களிலும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அதிகளவில் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், மஞ்சளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17,300-க்கு விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.400-க்கும் அதிகமாக உயர்ந்து ரூ.17,777-க்கு விற்பனையாகியுள்ளது. இதனால் ஒரே நாளில்…

Read More