Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொலைநகரமாக மாறும் ஆன்மீக நகரம் திருவண்ணாமலை..
    தமிழ்நாடு

    கொலைநகரமாக மாறும் ஆன்மீக நகரம் திருவண்ணாமலை..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1802828 tiruvannamalaitemple
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட தாமரை நகர் கோரிமேடு 5-வது தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை பார்ப்பதற்காக தேனி மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோட்டை முத்து என்பவர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களும் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் கோட்டை முத்து என்ற வாலிபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுனில்(16). என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கத்தியால் குத்திய இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த மாணவனும் , கத்தியால் குத்திய இளைஞனும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் அது குறித்து கைரேகங்களையும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்தப்பட்ட மாணவர் சுனில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    திருவண்ணாமலை நகர காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து எந்தத் தகவலும் வெளியே கசிய விடாமல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோன்று திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ராமு (31) ஆட்டோ ஓட்டுநர் இவரை நேற்று இரவு காந்திநகர் மைதானம் அருகில் மர்ம கும்பல் ஒன்று கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து அப்பகுதியில் சிசிடிவி காட்சியின் அடிப்படையிலும் கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக கட்டிட மேஸ்திரி ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் நேற்று இரவு பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்காத நாட்களே இல்லை எனக் கூறிவரும் நிலையில் தற்பொழுது ஆன்மீக நகரமான திருவண்ணாமலைகொலை கொலைநகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணி இல்லை என்று பாஜகவுடன் சேர்ந்து விட்டது அதிமுக..” கோவையில் 10 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் – செந்தில் பாலாஜி
    Next Article சிவகங்கை அஜித்குமார் படுகொலை.. தவெக சார்பில் 3-ந் தேதி கண்டன ஆர்பாட்டம்..
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.