Author: Editor TN Talks

கோவை மாவட்டம் பொள்ளாச்சி –  பல்லடம் சாலையில் ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் என்ற பெயரில் பாலியல்  தொழிலில் ஈடுபட்டு வந்த இளம் பெண்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஷும், அவருடன் இளம்பெண் ஒருவரும்  கேரள ஆயுர்வேதிக் பிசியோதெரபி, அக்குபஞ்சர் கிளினிக் என்னும் பெயரில் இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்துள்ளனர். ஆன்லைன் வாயிலாக இதற்கு கஷ்டமர்களையும் வரவழைத்துள்ளனர். இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை எடுத்துஅவர்கள், வாடிக்கையாளர்களைப் போல அங்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசாஜ் பெயரில் அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததது. இதனையடுத்து சென்னை,சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற அந்த மூன்று இளம் பெண்களை கைது செய்த போலீசார், அவர்களில் ஒருவரை நீதிமன்ற காவலுக்கும்…

Read More

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார் அளித்து நான்கு நாட்களுக்கு பின் வழக்கு பதிவு செய்ததும், புகார் கிடைக்கப் பெறும் முன்பே ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதும், பேரம் பேசியதாக கூறப்படும் நிகழ்வு ஊத்தங்கரையில் நடந்த போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உள்ள போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தது; மதிமுக-வைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யக் கூறும்படி முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ பேட்டியளித்தது; திமுக…

Read More

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட கட்டாயமாக எழுத வேண்டிய FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார். தேர்வின் கடினத்தன்மை திடீரென உயர்த்தப்பட்டது, வினாத்தாள் அமைப்பில் முன்னறிவிப்பின்றி மாற்றங்கள் செய்யப்பட்டன, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தேர்வர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்வுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம்தான். ஆயினும்,  தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முன்கூட்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதும் அதே அளவிற்கு முக்கியமானது என வலியுறுத்தியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் (NBEMS) உரிய விளக்கங்களையும், தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More

குஷி தமிழ் சினிமா பாணியில் லியோனல் மெஸ்சி வாழ்க்கையில் நடந்து வரும் அந்த சம்பவம் மெஸ்சி ரசிகர்களை உணர்ச்சிப் பூர்வமாக்கி உள்ளது. இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த குஷி திரைப்படத்தில், பச்சிளம் குழந்தையாக இருக்கும் விஜய்யும், ஜோதிகாவும் தங்கள் விரல்களால் ஒருவரையொருவர் தொடுவார்கள். அதனைத் தொடர்ந்து இவர்கள் எப்படி வளர்ந்து பெரியவர்களாகி ஜோடி சேர்கிறார்கள் என்பதை திரைக்கதையாக விவரித்திருப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் கால்பந்தாட்ட சாம்பியன் லியோனல் மெஸ்சி வாழ்வில் நடந்து வருவது அவரது ரசிகர்களை வியப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அந்த  சம்பவம் நடந்தது கடந்த 2007ஆம் ஆண்டுதான். பார்சிலோனாவில் நடைபெற்ற யுனிசெஃப் தொண்டு நிறுவனத்துக்கான காலண்டர் புகைப்படப் படப்பிடிப்பில், அப்போது 20 வயதாக இருந்த லியோனல் மெஸ்சி ஒரு குழந்தையைக் குளிப்பாட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் கால ஓட்டத்தில் அந்த வியப்பு சம்பவம் நடந்திருக்கிறது. ஆம், அப்போது லியோனல் மெஸ்சியால் குளிப்பாட்டப்…

Read More

சென்னை மாநகராட்சியில்  லஞ்சம் மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல் மற்றும் பொதுப்பணத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களில் 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேரை பணியிடை நீக்கம்  செய்து மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் 4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதற்கும் மாநகராட்சி ஆணையர்  சமீரன் உத்தரவிட்டுள்ளார். டாக்டர் தேவிகாலா (மண்டல சுகாதார அதிகாரி): ₹9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி பில்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக ஜூலை 9 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவ பொற்கொடி (மூத்த பூச்சியியல் வல்லுநர்): மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ஒரு இளைஞரிடம் ₹6 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஜூலை 11 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (பணத்தை திருப்பித் தந்த போதிலும், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது). ஆனந்தராவ் (உதவி செயற்பொறியாளர்): கட்டிட உரிமையாளர் ஒருவரிடம் ₹2.5 லட்சம்…

Read More

தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று  2-வது முறையாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. முதல்முறை கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுகு அறிவுறுத்தப்பட்டதோடு, அது தொடர்பாக அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது. இன்று 2-வது முறையாக நடைபெறும்  இந்தக் கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தாக்கலின் போது அறிமுகப்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் புதிதாக செயல்படுத்தப்பட உள ஒவ்வொரு திட்டத்திற்கு வெற்றி தமிழகம் என்ற பெயர் சூட்டவுள்ளதாகவும் அதற்காக இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எண்ணூரில் தொடங்கி  செங்கல்பட்டு , ஈசிஆர் உள்ளிட்டவைகளை இணைக்கும்  வெளிவட்ட சாலையை அமைக்க  ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் நிர்வாக ரீதியாக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது..

Read More

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தின் 19-வது நாளை எட்டியுள்ளார். ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் வெளியிட்ட வீடியோவில், “என் உடல்நிலை நல்ல நிலையில் இல்லை. ஆனால் மிகவும் மோசமாகவும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 59 வயதான வாங்சுக் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஜூலை 15 நிலவரப்படி அவரது உடல் எடை 57.15 கிலோவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 400 கிராம் குறைந்துள்ளதுடன், உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து மொத்தம் 8.9 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 105/76 mmHg, ரத்தச் சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்சிஜன் செறிவு 97% என பதிவாகியுள்ளது.…

Read More

உத்தரகாண்ட் மாநில காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), கேதார்நாத் நடைபயணப் பாதையில் ஆழமான பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது. இந்த சம்பவம், கௌரிகுண்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோடி (Chhodi) பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. ருத்ரபிரயாக் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் (DEOC), ஜூலை 15-ஆம் தேதி இரவு இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக எஸ்டிஆர்எஃப் குழுவை மீட்புப் பணிக்காக அனுப்பியது. கௌரிகுண்ட் எஸ்டிஆர்எஃப் முகாமிலிருந்து அஷீஷ் திம்ரி தலைமையிலான மீட்புக் குழுவினர், சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அவர்கள் உள்ளூர் காவல்துறை, மாவட்ட பேரிடர் மீட்புப் படை (DDRF) மற்றும் YMF பணியாளர்களுடன் இணைந்து, இரவு நேரத்திலும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடுமையான மலைப்பகுதி, மோசமான வானிலை உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு, பள்ளத்தாக்கிற்குள் இறங்கிய எஸ்டிஆர்எஃப்…

Read More

சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு  திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள சமூகநீதி விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தினார், இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள அரசு கல்லூரி பெண்கள் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு மாணவியரிடம் உணவு, தங்கும் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்து அவர்களோடு அமர்ந்து உணவுருந்தினர். ஆய்வின்போது செயற்பொறியாளர் நவநீதகிருஷ்ணன்,  மாவட்ட தாட்கோ மேலாளர் அனீத்விமலி மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் சமூக நீதித்துறையின் கீழ் கட்டி வரும் விடுதிகளை ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே கோவையில் கட்டி வரும் விடுதியை ஆய்வு செய்துள்ளோம். தற்பொழுது திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டி வரும்  விடுதி ஆய்வு செய்துள்ளோம். மாணவர், மாணவிகளின் நலன் கருதி அவர்களுக்கு வசதியாக தங்கி படிப்பதற்கான…

Read More

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி படையே நடுங்கும் பாம்புகளின் பாதுகாப்பையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 3500க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 351 வகையான பாம்புகள் காணப்படுவதாகவும் அவற்றில் 141 பாம்புகள் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 62 வகையான பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளன. கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டு விரியான் ஆகிய 4 வகையான பாம்புகள்தான் இந்தியாவில் மனித இறப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. உலகின் மிகச்சிறிய பாம்பு பார்படாஸ் நூல் பாம்பு ஆகும். இந்தப் பாம்பு, சுமார் 4 அங்குல நீளத்தில், ஒரு மண்புழுவை விடச் சிறியது. மிக நீளமான பாம்பு வலைப்பின்னல் மலைப்பாம்பு, மற்றும் மிகக் கனமானது பச்சை அனகோண்டா. பாம்புகள் தங்கள்…

Read More