Author: Editor TN Talks

பழனி கோயில் தொடர்பான 100 கோடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக வன்மத்தோடு அவதூறு பரப்புவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை, அமைச்சர் ரமேஷின் உறவினருக்கு குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து கூறியதாவது;- குறிப்பிட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனக் கூறி மாவட்ட பதிவுத் துறைக்கு தகவல் தெரிவிகப்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பதிவை ரத்து செய்ததோடு, இது தொடர்பான வழக்கிலும் நிலத்தை மீட்டெடுக்க உறுதி தரப்பட்டுள்ளது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை…

Read More

ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத்துறை  தொடர்பாக ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் விஜய் எழுப்பியுள்ளார். தனியாருக்கு இணையாக பால் கொள்முதல் செய்வது, பால் கொள்முதலில் உள்ள இடர்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகப்படுத்தக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், ஆவின் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் இதற்கு முன் இருந்த குறைபாடுகளை முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக…

Read More

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்தது குறித்து சாமானியருக்கு ஒரு சட்டமா? தவெக நிருவாகிக்கு ஒரு சட்டமா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். சமூக வலைத்தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றதாகத் தெரிவித்துள்ளார். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தேக் கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையை தனதுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின்,  சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த…

Read More

சின்னத்திரை நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தரப்பில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தக் கோரிக்கை தீர்மானம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த தீர்மான விவரம் வருமாறு;- 1.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை: சின்னத்திரை தொடர்களில் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாமல் நடித்து வருபவர்களை  கண்காணிக்க ‘ஸ்குவாட்’ (Squad) குழுக்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு உறுப்பினராக இல்லாதவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை பெற 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள்ளும் அவர்கள் கார்டு பெறவில்லை எனில், அவர்கள் நடிப்பதற்கான அனுமதி மறுக்கப்படும் 2. சிறு கதாபாத்திரங்களிலும் சங்க உறுப்பினர்களே நடிக்க வேண்டும்: ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டுகள் (Junior Artist Agents) கூட்டத்தை (Crowd) மட்டுமே வழங்க வேண்டும்; வசனம் பேசி நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆட்களை அனுப்பக் கூடாது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற ஒரு நாள், இரண்டு நாள் வரக்கூடிய…

Read More

தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர், விவசாயம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதால் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 -ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் , ஆற்று மணலுக்கு பதிலாக கட்டுமான பணிகளுக்கு குவாரி மணல் ( M sand ) பயன்படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாட்டு ஆறுகளில் முழுமையாக ஆற்று மணல் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் தான் பொதுநல வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர், 2017 ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி, அன்றைய தமிழக தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசு செயலர்கள்…

Read More

பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேல்–பாலஸ்தீன் பிரச்சினைக்கு அவ்விரு நாடுகளின் பேச்சுவார்த்தை மட்டுமே நிலையான தீர்வை அளிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் (Palestine Donor Group) அமைச்சர்மட்ட கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை (MEA) செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் (EU), அதன் உறுப்பு நாடுகள், பாலஸ்தீன், சர்வதேச கூட்டாளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பாலஸ்தீன ஆணையத்திற்கு நிதி உதவி மற்றும் அந்நாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய ஸ்ரீப்ரியா ரங்கநாதன், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா நீண்டகால நண்பராக இருந்து வருகிறது என்றும், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்க இந்தியா தொடர்ந்து…

Read More

அமெரிக்காவில் ஒரே செலபஸ் எனக் கூறியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து, படிப்புக்கும் லாட்டரி மாஃபியாவுக்கும் என்னதான் சம்பந்தம் என யூடியூபர் மாரிதாஸ் விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,  அமெரிக்காவில் ஒரே பாடத்திட்டம்தான் எனவும்,  இந்தியாவைப் பொறுத்தவரை கல்வியில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அமைச்சரின் பேச்சு பொய் எனக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் 50 மாநிலமும் தனி தனி வகையில் செயல்படும். ஒற்றை கல்விக்கான அமைப்பு கூட கிடையாது. ஏன் என்றால் எல்லாம் வெவ்வேறு காலத்தில் பல ஆண்டுகள் இடைவெளியில் ஒரு நாடாக மாறியவை எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அனைத்து மாநிலத்திலும் எல்லாவிதமான கல்வி முறைகளும் அங்கீகரிக்கப்படுவதாகவும் IB , Montessori, Cambridge என அனைத்தும் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கட்டமைப்பு மிக சிக்கலான சுமார் 240…

Read More

ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் நவீன கால கொத்தடிமை அராஜகத்தை தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த ‘எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம், 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணியாளர்கள் அரசின் எந்த சலுகையையும் கேட்கக்கூடாது; இஎஸ்ஐ (ESI), பிஎஃப் (PF) போன்ற அடிப்படை உரிமைகளைக் கோரக்கூடாது எனப் பத்திரத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது. பணி நிரந்தரம் கேட்டு எந்த சங்கமும் போராட்டம் நடத்தக்கூடாது; மீறினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியை விட்டு விலக வேண்டும் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. இந்த அராஜக ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் இந்தச் செயல், தவெக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகியிருப்பதாக திமுக ஐ.டி.விங் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்புரவுப்…

Read More

சி.ஐ.டியூ அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை அரசுத்துறைகளே அமல்படுத்த மறுக்கின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்த போது, தமிழகத்தில் உள்ள ஒரு கோடி முறை சாரா தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரினோம். இதனால் மக்களின் பணப் புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளரும். ஆலைகளில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. கூட்டுபேர உரிமை என்பதை கூட்டு பிச்சை எடுப்பதாக அரசு கருதக்கூடாது. ஊழலற்ற ஆட்சிக்கான முயற்சிகளுக்குத் துணை நிற்போம்; அதே நேரம் உரிமைகள் பறிக்கப்படும்போது போராடுவோம். அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட…

Read More

முதலமைச்சரிடம் கேட்டு வாரத்தில் 5 நாட்களிலும் உடற்கல்வி வகுப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக  பெஞ்ச் டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 18 பள்ளிகளுக்கு, 70 லட்சம் மதிப்பில் 900 இருக்கைகள் (bench-desk) மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகம் முழுவதும் 7 கோடி ரூபாய்க்கு ஹூண்டாய் நிறுவனம் கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளது என்றார். மேலும் மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் நினைத்ததை அடைய…

Read More