Author: Editor TN Talks

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 17 சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384  ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, 18 சொத்துக்களை முடக்கம் செய்தது. முடக்கத்தை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 18…

Read More

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நன்றி தெரிவித்துள்ளார். ஈரானிய வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா–ஈரான் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தியக் குடியரசின் மதிப்பிற்குரிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, புனித ஈத் அல்-அத்ஹா பண்டிகையை முன்னிட்டு தாங்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை பெற்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் உருவான நமது இரு நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு, இரு அரசுகளின் முயற்சியால் மேலும் வலுப்பெற்று விரிவடையும் என்று நம்புகிறேன். இந்திய அரசும், இந்திய மக்களும் தொடர்ந்து…

Read More

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என, தமிழக சட்டமன்ற செயலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். த.வெ.க. அரசு, கடந்த மே 13 ஆம் தேதி பெரும்பான்மை  வாக்கெடுப்பு கோரிய போது, கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு  ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள்  மதுராந்தகம்- மரகதம் குமாரவேல், பெருந்துறை – ஜெயக்குமார், தாராபுரம் – சத்தியபாமா, அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா ஆகியோரின்  ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி  அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி…

Read More

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இந்த  சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என கூறமுடியாது; பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள்…

Read More

இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் திமுகவை மக்கள் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி என தவெக விமர்சித்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து தவெகவை விமர்சித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக ஐ.டி.விங்க் பதிலடி கொடுத்துள்ளது. உளறல்நிதியின் மற்றொரு நாள். மற்றுமொரு உளறல் எனப் பதிவிட்டுள்ள தவெக ஐ.டி.விங்க்,  ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும் எனக் கூறியுள்ளது. புதிதாகத் தொடங்கியுள்ள Sofa, table, chair, teapoy வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே sofamodel என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார் எனவும், தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுவதாகவும் விமர்சித்துள்ளது. தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார…

Read More

சொந்த கட்சி. தன்னை முதலமைச்சராக, பொதுச்செயலராக்கி அழகு பார்த்த கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், சாரி சாரியாக மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். அது குறித்து கிஞ்சித்தும் கவலையோ அக்கறையோ இல்லாமல் அவர்கள் அதிமுகவிலிருந்து வெளியேறுவதை மகிழ்ச்சியாக ரசிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாகத்தான் இருப்பார் என யூடியூபர் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், இந்த கட்சி கரைவதை அவர் விரும்புகிறார் என்றே புரிந்து கொள்ள் முடியும். அவருக்கு மிக நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர், எடப்பாடியிடம் ‘இப்படி வரிசையாக கட்சி நிர்வாகிகள் வெளியேறுகிறார்களே…. இதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னபோது, போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 பர்சென்ட் வாக்குகள் போதும்’ என்று சொல்லியிருக்கிறார். வேறு ஒருவரிடம், யார் போனாலும் போகட்டும். வைகோ 20 வருசமா மதிமுகவை நடத்தலையா. இருக்கும் ஆட்களை வைத்து இருக்கும் கட்சியை நடத்திக் கொள்கிறேன்’ என்று…

Read More

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலமாக தவெகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கரூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எனக் கூறியுள்ள உதயநிதி, ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுவதாக விமர்சித்துள்ளார். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் எனக் குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், “தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன் என வினா…

Read More

தமிழ் மற்றும் ஆஙில மொழிகளில் உருவாகும் திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக இன்று துவங்கியது! ஆங்கில மொழியில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது திருக்குறள் -2 காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம்  தயாராகிறது. ஆங்கிலத்தில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது. திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர்,…

Read More

முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார். சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அதுல்யா முதியோர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையை ஆளுநர் அர்லேகர் திறந்து வைத்தார். இவ்விழாவில் உரையாற்றிய ஆளுநர், முதியோர் சுகாதார சேவை என்பது மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தைத் தாண்டி, கருணை, மரியாதை மற்றும் மனிதநேயத்தை சமமாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு , சிறப்பு முதியோர் சிகிச்சை சேவைகளின் தேவையை அவர் எடுத்துரைத்ததுடன், சுகாதார அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதையும் குறிப்பிட்டார். முதியோரின் உடல் மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்கும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் முயற்சியை ஆளுநர் அவர்கள் பாராட்டினார். மேலும், முதியோருக்கு மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பராமரிப்பு வழங்குவது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

Read More

குறைந்த விலை​யில் தங்கம் வழங்குவதாகக் கூறி 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவ​காரத்​தில் பெண் காவல் ஆய்​வாளருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​ ஷீலா மேரி தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம், குறைந்த விலை​யில் தங்க காசுகள்  என பல்​வேறு முதலீட்டு திட்​டங்​களை அறி​முகம் செய்​துள்​ளார். கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்​கும் மேற்​பட்​டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். பிரபு மணி பெரும்​பாலும் ஆய்​வாளர் ஷீலா மேரி​யின் காவல்​துறை வாக​னத்​தில் வைத்​து, தங்​கக் காசுகளை வழங்​கி​யுள்​ளார். குறிப்​பாக  இவர்களிடம் போலீ​ஸாரும், போலீஸ் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில், இந்​நிறு​வனத்தை 2024 இறு​தி​யில் மூடி​விட்டு பிரபுமணி தலைமறை​வாகி​விட்​டார். இவரிடம் முதலீடு…

Read More