Author: Editor TN Talks
ஆற்காடு அருகே அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிகழ்வில், 45 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 மகளிர் விடியல் பயணப் பேருந்து சென்று கொண்டிருந்தது. 45 பயணிகளுடன், சக்கரமல்லூர் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதோடு பயணிகளை கீழிறங்குமாறு கூறி அறிவுறுத்தி அவரும் இறங்கிவிட்டார். இதையடுத்து பயணிகள் அவசரகதியில் அலறியபடி பேருந்துவிட்டு கீழிறங்கினர். அடுத்த சில நிமிடங்களில், என்ஜினின் முன்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இது மளமளவென பேருந்து முழுவதும் பரவி நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையின் விரைந்து வந்து நெருப்பை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. எலும்புக்கூடாய்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போனை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. பேருந்து நிலையத்தில் பொருட்கள் வாங்குவதுபோல் வந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் கண்ணாடி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை, கடைக்காரருக்கு தெரியாமல் லாவகமாகத் திருடிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த போனை தேடும் போது காணாமல் போகவே சிசிடிவி காட்சியை ஆராய்ந்த போது இந்தக் காட்சிகள் பதில் பதிவாகி இருந்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி, உத்திரமேரூர் பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது.
வேளாண்மைத்துறை & நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவது தொடர்பாகவும், காவிரி நீர் விவகாரம், குறுவை சாகுபடி, விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு, நீர்நிலைகள் தூர்வாருதல் ஆகியவைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவரும் நிலையில் இதுகுறித்தும் முதலமைச்சர் விஜய் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் கட்ட வலியுறுத்தி வருகிற ஜூன் 5-ஆம் தேதி அன்று வாசுதேவநல்லூரில் வைகோ உண்ணாவிரத அறப்போர் மேற்கொள்கிறார். மதிமுக நிறுவனர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக (Unesco heritage site) ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட் டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தொன்மையான ஆறுகளுள் ஒன்று செண்பகவல்லி. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளை யம் வட்டாரத்தில் பாசனத்திற்கும், குடி நீருக்கும் செண்பகவல்லி ஆற்றுத் தண்ணீர்தான் ஊற்றாகத் திகழ்கின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முதன்மையான குடிநீர் ஆதாரமும் செண்பகவல்லித் தண்ணீர் தான். ஆற்றுத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில், செண்பகராமன் பிள்ளை அவர்கள், ஒரு சிறிய அணையைக் கட்டினார்கள். அந்த அணை தற்போது கேரள மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கின்றது. 1773ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணையில் தேக்கப்படுகின்ற தண்ணீர், ஆண்டு…
வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் உழைத்துக்கொண்டே இருப்போம் என அமைச்சர் வெங்கட் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவர் ஆட்சியில்… பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெரியாரின் கனவு மேலும் மேலும் நனவாகிக்கொண்டே இருக்கும். சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் மனம் விரும்பிய சமநீதி,சம வாய்ப்பு எங்கும் நிலைபெறும். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மக்களுக்கான மட்டுமே இயங்கும் நிர்வாகம் நீடித்து நிலைக்கும். வீரமங்கை வேலு நாச்சியாரின் மண் சார்ந்த உழைப்பையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த உழைப்பையும் பின் தொடர்வோம். காரணம்… நம் வெற்றித் தலைவர் சட்டமன்றத்தில் சொன்னதுபோல, “இது அனைவருக்குமான அரசு. இது சாதி,மதங்களைக் கடந்த அரசு. இது பாகுபாடு காட்டாத அரசு. இது பண்பாடு காக்கும் அரசு. இது பண்பட்ட அரசு.” என் போன்ற வெற்றித் தலைவரின் தொண்டன் ஒவ்வொருவரும் இதில் இருந்து…
அதிமுக கரூர் மாவட்ட புதிய செயலாளர் அலுவலக பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை சென்ற அவர், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு எதிராக தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால், இவரை அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவருக்கு பதிலாக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலக் கண்ணன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த கமலக்கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு கட்சி அலுவலகத்தின்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை 50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான்…
சிபிஐ இயக்குநர் பதவியை ஓராண்டு காலம் நீட்டித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட்டுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கியிருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், பிரவீன் சூட் போன்ற அதிகாரிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கவே அவருக்கு பாஜக அரசு பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2026 மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி, வரும் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று மறுதேர்வு நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பழைய பதிவுகளே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு மாணவர்கள் தனியாகக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், மே மாதம் நடந்த தேர்விற்காகச் செலுத்தப்பட்ட கட்டணத்தைத் திரும்ப வழங்கவும் NTA நடவடிக்கை எடுத்துள்ளது. மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீடு புகுந்து மர்மநபர்கள் 36 சவரன் நகை மற்றும் ரூ.2 இலட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். துரையரசபுரம் அருகே உள்ள சிலம்பாவை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி – பொய்யாமுத்து தம்பதி. இவர்களுக்கு ராசிகா மற்றும் ராமநாதன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ராமநாதன் வெளிநாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது திருமணத்துக்காக நகை மற்றும் பணம் சேமித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பெரியசாமி விவசாயப் பணிக்காக காலையில் வெளியில் சென்றவர் மதியம் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 36 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல்துறை கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார்…