Author: Editor TN Talks

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு! – இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!

Read More

பிரபலங்களின் அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறிவிட்டதாகவும், மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம் எனவும் நடிகை ராதிகா வேதனை தெரிவித்துள்ளார். இயக்குநர் இமயம் பாக்யராஜின் மரணம் தொடர்பாக எக்ஸ்தளத்தில் பதிவிட்டு அவர், 50 ஆண்டுகளாக நீடித்த மிகவும் சிறப்பான நட்பிற்கு இன்று இறுதி விடை. மிகச் சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர், திரைப்பட உலகில் தனக்கென அற்புதமான எல்லைகளை உருவாக்கியவர். எண்ணற்ற சிரிப்புகளையும், மறக்க முடியாத படைப்புகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டவர். என் குடும்பத்திற்கு எப்போதும் அமைதியாகவும், உறுதியான விசுவாசத்துடனும் துணையாக நின்றவர். அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார். அதே நேரம்,  அமைதியாக அஞ்சலி செலுத்தவும், துயரத்தை மௌனமாக பகிரவும் வேண்டிய இடம், அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் ஒரு கேளிக்கைக் காட்சியாக மாறிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார். இந்த அளவுக்கு மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம்?…

Read More

NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல் NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க முதலமைச்சரையும் வலியுறுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் NLC நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடிரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடுவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2006-ஆம் ஆண்டு NLC நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு…

Read More

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க உள்ள விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,  பதவியை ஏற்க அல்ல, பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தலைவனாக அல்ல… உங்கள் தம்பியாகவும், அண்ணனாகவும், தோழனாகவும் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன் எனக் கூறியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மகத்தான இயக்கம். அந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. 2026-ல் ஆட்சியில் பங்கு பெற்றோம். இப்போது நம் அடுத்த இலக்கு – 2029. இந்தியாவின் ஆட்சியை மக்களுக்கு மீட்டுத் தந்து, நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம் எனக் கூறியுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி, வாங்க…. இயக்கத்தை பலப்படுத்துவோம். மக்களோடு இணைந்து பயணிப்போம். 2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம்.…

Read More

அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி  கடிந்துரைத்துள்ளார். பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது. கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

Read More

அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், 6-வதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் தொடங்கிய நாள் முதல் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபிரியா, இசக்கி சுப்பையா, ஆகிய 4  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைந்துள்ளனர். டாக்டர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தவெகவில் இணையவில்லை. இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை மெய்ப்பிப்பதுபோல் அவர் காலை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார். பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் அறைக்கு…

Read More

திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த ரோட்டரியின் பாசறை நிகழ்வின் வெற்றி விழாவில், அழகிகள் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்போட்ட ஃபேஸ்புக் லைவால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தன்னார்வ தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் பாசறை நிகழ்வு 2 நாட்களாக, தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிகழ்வில், கவிப்பேரரசு வைரமுத்துவும் பங்கேற்று சிறப்புரையாற்றினார். திருப்பூரின் முக்கிய தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள சொர்க்கம் மனமகிழ் மன்றத்தில் ரோட்டரி சார்பில் வெற்றி விழா கொண்டாடியுள்ளன.ர் இதில் மது விருந்து மற்றும் கலை  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இளம் பெண்களின் ஆபாச நடனங்களும் அரங்கேறியுள்ளது. இதனை சிலர் பேஸ்புக்…

Read More

கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்  தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;- அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘ஆசிரியர் தேர்வு வாரியம்,’ கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக,   தமிழ் -முதல்…

Read More

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதுதில் முதலமைச்சரின் முடிவு தவறாக இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  மேகதாது விவாகரத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதாகவும்,  பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதே காவிரி பிரச்சினையை பேசி தீர்த்து இருக்க வேண்டும் எனவும் கூறினார். காவிரி சிக்கல் தொடர்பாக நேரடியாகப் பேசவேண்டும் எனவும், சட்டரீதியாகப் பேச வேண்டும் எனவும் இருவேறு கருத்துக்களை சொல்வதாகவும், இதில் எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார். டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் விவகாரம் குறித்த கேள்விக்கு,  தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது தமிழகத்தை சேர்ந்தவரை ஏன் மத்திய பிரதேசத்தில் போட்டு இருக்கின்றீர்கள் என யாரும் கேட்கவில்லை எனக் கூறியவர்,  இந்தியாவில்…

Read More

ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் பகுதியில். தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல்  போன நிலையில், பக்கத்து வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – செல்வி தம்பதியினருக்கு சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா என்ற ஐந்து வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளது. சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் தனது பெற்றோருடன்  வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு  மதுரையில் இருந்து செல்வி தனது இரு மகள்களையும்  வார விடுமுறையையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து  வந்துள்ளார். ராமநாதபுரம் எம்எஸ்கே நகரில்  உள்ள அவரது தாத்தா முத்து முருகன் வீட்டிற்கு வந்த சாரு நித்திகா, சாய் தீப்தி மற்றும் செல்வி ஆகியோர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை சுமார் மூன்று…

Read More