Author: Editor TN Talks
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒருபக்கமும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சிலர் இன்னொரு பக்கமும் பிரிந்து நிற்கின்றனர். இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், எஸ்பி வேலுமணி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள…
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியும் இதனை சூசகமாக கூறியிருந்தார். வழக்கம் போல 5 மாநிலங்களின் தேர்தல் முடிந்த பிறகு தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.100.84 ஆக விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.3.14 உயர்த்தப்பட்டு, ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போல ரூ.92.39க்கு விற்பக்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் ரூ.3.11 அதிகரித்து ரூ.95.50க்கு விற்பனையாகிறது. வணிக சிலிண்டர் விலையை தொடர்ந்து பெட்ரோல்,…
நீட் மறு தேர்வு நடத்தும் முடிவை கைவிடவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்படி நடப்பது முதல்முறையல்ல, 2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது. 2016-ஆம்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, முறையான இந்திய குடியுரிமை இல்லாத நிலையில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குத் திரும்ப முயன்றபோது, இவர்களது விரலில் இருந்த அழியாத மை அடையாளத்தை வைத்து சென்னை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில், குடிவரவு அதிகாரிகள் இவர்களைப் பிடித்து கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள், பிரிட்டன், கனடா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என 25 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எவ்வாறு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தச் சம்பவம்,…
மே 14ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் கருப்பு திரைப்படம் மே 15ஆம் தேதியான இன்று வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா – த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணப் பிரச்சினை காரணமாக மே 14ஆம் தேதி தமிழ்நாட்டில் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. அதே நேரம் வேறு மாநிலத்தில் வெளியானதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படம் போன்று கருப்பு திரைப்படமும் இணையத்தில் வெளியானதாக பரபரப்பு நிலவுகிறது. படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புள்ள அனைவருக்கும்… எங்களுடன் இருந்ததற்கு நன்றி! #கருப்பு #வீரபத்ருடு இன்றிலிருந்து எனப் பதிவிட்டு கருப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
பெட்ரோல், டிசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;- சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.10 உயர்ந்து 103.90க்கும் டீசல் லிட்டருக்கு ரூ. 3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆகிறது. ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலையுயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலையுயர்ந்தபோது அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்தியுள்ளது. இதன் தாக்கம் தொடர்வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக்…
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை நட்சத்திர வீரர் திலக் வர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரியான் பராக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி மற்றும் நிஷாந்த் சிந்து போன்ற திறமையான பேட்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்கள் ஹர்ஷ் துபே, விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் முறையீடு. அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏக்கள் 2 குழுவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று பெஞ்சமின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் சேர்ந்து விசுவாசமாக இருந்து கட்சியின் பொறுப்பை சிறப்பாக செய்த என்னை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணம் என்ன என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என பெஞ்சமின் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை தீவிரமாக செய்ததாகவும் அமைச்சராகவும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ததாகவும் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா…
தனது இரண்டாவது சிம்பனி விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி 50 ஆண்டு ஆனதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உங்களுக்குத்தான் ஐம்பது வருடம், எனக்கு அப்படியில்லை. வருடங்கள்தான் சென்றுக் கொண்டிருக்கிறதே தவிர நான் அதே இடத்தில்தான் இருக்கிறேன். நான் எப்பொழுது எப்படி வந்தேனோ இன்றும் அப்படியேதான் இருக்கிறேன், அதே தவிர வேறு எனக்கு எதுவும் தெரியாது என்றார். எனது 50 வருட பயணத்தை நினைவில் வைத்து நீங்கள் அனைவரும் என்னை வந்து சந்தித்து வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் என்னை கொண்டாடுவது என் மீதான அன்பையே காட்டுகிறது. துக்கத்தை வெல்வதற்கு மனிதர்களிடம் எந்த ஆயுதமும் கிடையாது. ஆனால் இசையால் அதை செய்ய முடியும் நான் இசை அமைக்கும்போது எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. இயக்குனர்கள் சிச்சுவேஷனை சொன்னவுடன் நான் அதற்கான ட்யூனை போட்டு விடுவேன். எனது நோக்கம்…
உளவுத்துறை டிஜிபியில் இருந்து எஸ்பி வரை கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நேற்று உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க்கை நியமித்து முதல் உத்தரவை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இன்று உளவுத்துறையில் டிஜிபி முதல் எஸ்பிக்கள் வரை கூண்டோடடு மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 1. வேலூர் சரக டிஐஜியாக இருந்த பாதுகாப்பு பிரிவு டிஐஜிஜாக மாற்றம். 2. சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண் மாநிலத்தின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக மாற்றம். 3. நெல்லை சரக டிஐஜியாக இருந்த சரவணன் உளவுத்துறை டிஐஜியாக மாற்றம். 4. திருவாரூர் மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த கராட் கருண் உத்தவராவ் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றம். 5. தென்காசி காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த மயிவாகனன் உளவுத்துறை எஸ்பி (1) யாக மாற்றம். 6. தூத்துக்குடி…