Author: Editor TN Talks
ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பஹ்ரைன் அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதோடு, அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தொடர்ச்சியாக நடைபெறும் இந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், அதற்கு காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் பஹ்ரைன் வலியுறுத்தியுள்ளது. மேலும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க தனது இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் முழு உரிமை பஹ்ரைனுக்கு உள்ளது என்றும், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் ஏற்படும் எந்தவொரு பதற்ற…
இந்தியாவை போலியோ இல்லாத நாடாக்கும் முனைப்போடு ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சுமார் 53 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியொ சொட்டு மருந்து முகாமினை சென்னையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முகாமினைத் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதோடு, பொம்மைகளையும் பரிசளித்தார். சொட்டு மருந்து வழங்கும்போது இயல்பாகவே குழந்தைகளை வாயைத் திறக்கச் செய்வதற்காக முதலமைச்சரும் தனது வாயைத் திறந்து காட்டி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள்,…
விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் நீதி மய்ய விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் . E.T.அரவிந்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- .சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபாடி வீராங்கனையை, பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், வீராங்கனைகள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், உரிய மரியாதையுடனும் பயிற்சி பெறக்கூடியச் சூழலை உருவாக்க வேண்டியது அரசு மற்றும் விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பாகும். அரசு மற்றும் தனியார் விளையாட்டு அகாடமிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேகக் குழுவை அமைத்து,…
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். குரூப் ‘எல்’ பிரிவின் கடைசி லீக் போட்டியில், பனாமாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்த ஹாரி கேன், உலகக்கோப்பை போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி, இதற்கு முன் கேரி லினேக்கர் பெயரில் இருந்த 10 கோல்கள் என்ற சாதனையை முறியடித்தார். முதல் பாதி கோல் இன்றி முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 62-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 68-வது நிமிடத்தில் பெல்லிங்ஹாம் துல்லியமாக வழங்கிய கிராஸை ஹெடர் மூலம் கோலாக மாற்றிய…
சென்னையில் காலமான இயக்குநர் கே.பாக்யராஜின் இறுதிப் பயணம் தொடங்கியது. தமிழ்த் திரையுலகில் இயக்குநராக, நடிகராக கோலோச்சியவர் கே.பாக்யராஜ். திரைக்கதை அமைக்கும் இவரது தனித்துவ பாணியினால், இவர் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்டார். அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைசிறந்த சீடராக இருந்து, அவரால் மிகவும் பாராட்டப்பட்டவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என புகழப்பட்டவர் பாக்யராஜ். நேற்று (ஜூன் 27) காலை நடைபயிற்சி சென்றவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பாக்யராஜின் திடீர் மரணம் குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட திரைத்துறையினர் அனைவரும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்னும் ஏராளமானோர் வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். திரைத்துறையில் அவர் புரிந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் உடலுக்கு அரசுதரப்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாக்யராஜின் உடல் இன்று நண்பகல் 12 மணி…
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து,முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது அயர்லாந்து அணி. சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை குழு சுற்றின் கடைசி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் வழியே அயர்லாந்து அணி இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 129 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து, ஆர்லா பிரெண்டர்காஸ்ட் விளாசிய அபார அரைசதம் (63) மற்றும் ஏமி ஹண்டர் (28) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இன்னும் 11 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியை வசப்படுத்தியது. அயர்லாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தாலும், இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் அரையிறுதி கனவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு, நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும். முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சைத்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வருமாறு:- தமிழ்த் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறன் படைத்த கே.பாக்யராஜ் அவர்கள் இன்று உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இயக்குநர் பாக்யராஜ் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி, தனது நடிப்பாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர். கிராமிய வாழ்க்கையை மையமாக கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு கருத்துக்களையும், விழுமியங்களையும் எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சென்றவர். தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது…
இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பாகும். தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் 2007ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 3.5% இடஒதுக்கீடு வழங்கினார். தமிழ்நாட்டில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) அந்தஸ்து வழங்கலாம்…
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுக்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அ. அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள விஜயஸ்ரீ மஹாலில் இன்று நடைபெற்றது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு மத்தியில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) இடம்பெற்றிருந்த பல கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உள்ளிட்ட முன்னாள் கூட்டணிக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:- திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தனது படைப்பாற்றலால் நகைச்சுவை உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கவை. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.