Author: Editor TN Talks

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என ஒரு பிரிவும், எஸ்.பி.வேலுமணிதான் என மற்றொரு பிரிவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள தனக்கு அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், சி.வி.சண்முகம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கடிதம் அளித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவுதான் அதிமுக சட்டமன்ற தலைவர் யார் என்பதை இறுதி செய்யும். ஒருவேளை எடப்பாடி தரப்புக்கு ஆதரவான முடிவாக இருந்தால், அதிமுக கொறடா உத்தரவுப்படி அனைத்து எம்.எல்.ஏக்களும் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஒருவேளை அதனை மீறினால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி, அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை வரலாம். எஸ்.பி.வேலுமணிதான் அதிமுக சட்டமன்ற தலைவர் என சபாநாயகர் தெரிவித்தால், அதிமுக எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோர் தவெகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சபாநாயகர் எந்தமுடிவுமே எடுக்காவிட்டால், விதிப்படி கட்சியின் கொறடா எடுக்கும் முடிவுக்கு எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும்.…

Read More

தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார். நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது எனக் கூறியுள்ளார். ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி,  அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் -…

Read More

17-வது சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 108 இடங்களைக் கைப்பற்றியதால், ஆட்சி அமைக்க முற்பட்டது. அப்போது பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இதன்பின்னர் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார். முன்னதாக 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் தெரிவித்தபோதும், அதனை ஏற்க மறுத்த ஆளுநர் 13ஆம் தேதிக்குள் (இன்று) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இன்று முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவெகவுக்கான 108 இடங்களில் திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்தார். திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ ஒரு ஓட்டில் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கு நிலுவையில் இப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது. இதனால் தவெகவின் பலம் 106ஆகக் குறைந்துள்ளது. அதே…

Read More

ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கடிந்துரைத்துள்ளார்.  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? என வினா எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து…

Read More

தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் ஜாமின் மனுவினை மீண்டும் தள்ளுபடி செய்து, சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின், மறு ஆய்வு குழு முன்பாக ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்ரீநாத், இரண்டாவது முறையாக ஜாமீன்  கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, 22 ஆவது கூடுதல் அமர்வு  நீதிபதி எஸ். ரம்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில், இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில்,…

Read More

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகத்துக்கு பதவி அரிப்பு காரணமாக இல்லாததைச் சொல்வதாக ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக சி.வி.சண்முகம், தெரிவித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விடையளித்தவர், திமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என திமுக தலைவர் தெளிவுபடுத்தி விட்டதாகவும், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது, சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தது என ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவேண்டியவற்றை திமுக தலைவர் செய்துவிட்டார் எனக் கூறினார். சி.வி.சண்முகம் பதவியிலேயே இருந்து பழக்கப்பட்டவர் எனவும், தனது பதவி அரிப்புக்காக அதிமுகவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக இல்லாததைக் கூறுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். தமிழக வெற்றி கழகத்திற்கு போக வேண்டும் என்ற காரணத்திற்காக எங்களை காரணம் காட்டி சி.வி.சண்முகம் எதையும் செல்ல வேண்டாம் எனக் கூறினார். …

Read More

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அமமுக எம்.எல்.ஏ காமராஜை, பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த நேரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ் எம்.எல்.ஏ, விஜய்க்கு தனது ஆதரவை அளித்து கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனை டிடிவி தினகரன் மறுத்த நிலையில், தவெக தரப்பில் வீடியோவும் வெளியிடப்பட்டது. ஆனால் இதனை ஏ.ஐ. வீடியோ என மறுத்ததோடு, தவெகவுக்கு எதிராகவும் விஜய்க்கு எதிராகவும் டிடிவி தினகரன் கடுமை காட்டி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று சபாநாயகரை வாழ்த்திப் பேசிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ், இந்த அரசு ஐந்தாண்டு இடம்பெறவேண்டும். முதலமைச்சர் இளைஞராக இருக்கின்ற காரணத்தால் நிச்சயமாக ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி தருவார் என்கிற நம்பிக்கை…

Read More

கோடை காலத்தில் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல், எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்…

Read More

 முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- #NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட…

Read More

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்  நடந்து கொள்ளும் தவெகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும்…

Read More