U20 சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா தனது பதக்கப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் பசந்த் குமார் மேக்வால், உயரம் தாண்டுதல் போட்டியில் அபாரமாகச் செயல்பட்டு நாட்டின் முதல் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவர் இந்தப் போட்டியில் 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். எனினும், தங்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நூலிழையில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே சர்வதேசத் தடகளத் தொடரில் இந்தியா ஏற்கனவே வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. முன்னதாக நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் அபாரமாகச் செயல்பட்டு நாட்டிற்காக முதல் தங்கப் பதக்கத்தைக் குவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது பசந்த் குமார் மேக்வாலின் இந்த வெள்ளிப் பதக்கமும் இணைந்திருப்பது இந்திய தடகள ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மற்றொரு இந்திய வீரரான ஷாநவாஸ் கான் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்று மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் இத்தொடரில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஈட்டி எறிதலில் தங்கம், உயரம் தாண்டுதலில் வெள்ளி மற்றும் நீளம் தாண்டுதலில் வெண்கலம் என அடுத்தடுத்து பதங்களைக் குவித்து இந்திய வீரர்கள் சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்து வருகின்றனர்.
