Author: Editor web3
2026-ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அறிமுக அணியான கேப் வெர்டேவை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேப் வெர்டேவை போராடி வீழ்த்தியது. வெறும் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கேப் வெர்டே, உலக சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கால்பந்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக கேப் வெர்டே வீரர் ஒருவர் அடித்த சொந்தக் கோல் (Own Goal), அர்ஜென்டினாவின் வெற்றிக்கு வழிவகுத்தது. முதல்முறையாக உலகக்கோப்பையில் களம் கண்ட கேப் வெர்டே அணியின் இந்த வீரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. இதற்கிடையில், இந்த போட்டி இந்திய கால்பந்து ரசிகர்களிடையே ஒருவிதமான ஆதங்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா,…
2026-ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கானா அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டங்களில் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்தின. இரு தரப்பும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தாலும், முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தது. இரண்டாம் பாதியில், கொலம்பியா அணி தங்களுக்குக் கிடைத்த மிக முக்கியமான வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு கானா அணி ஆட்டத்தைச் சமன் செய்யத் தொடர்ந்து பதிலடி கொடுத்தாலும், கொலம்பியாவின் உறுதியான தற்காப்பு அரணை அவர்களால் தகர்க்க முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்த கொலம்பியா அணி, அடுத்த…
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, சாட்சிகளின் வாக்குமூல நகல்களை வழங்கக் கோரி முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஏற்கனவே பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழங்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ஜார்ஜின் கோரிக்கையை நிராகரித்தார். சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு சரியானது என்று கூறி மனுவை அவர் தள்ளுபடி செய்தார். அதேவேளையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா முறைகேடு வழக்கை இழுத்தடிக்காமல், அடுத்த 12 வாரங்களுக்குள் விசாரணையை முழுமையாக முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தவெக அரசு ஆட்சியில் அமர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. அக்கட்சி தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம் போன்றவை எல்லாம் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்து வெளியிலிருந்து ஆதரவு தருவதாக விசிக தெரிவித்தது. அதனை தொடர்ந்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்ற அறிவித்தப்படியே விசிகவுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைத்தது. வன்னியரசு அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில், விசிக மாவட்டச் செயலாளர் சாமுராய்குரு தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், வெற்றி பெற்று தவெக அரசில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும்…
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வரும் 33 வயது இளம்பெண் ஒருவரை, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில் அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர், அந்தப் பெண்ணிடம் நட்பாகப் பழகி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு வருடமாகத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தோணி மரிய ராபினுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தோணி மரிய ராபின் தனது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் என்பவரை அழைத்துக்கொண்டு, சமாதானம் பேசுவது போல அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து,…
தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஊழல் விவகாரங்களில் சமரசம் செய்யப்போவதில்லை என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் முழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தியது. தற்போது மேலும் ஏழு முக்கிய திமுக தலைவர்களைக் குறிவைத்து விசாரணை வளையம் விரிவடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பேரன் இன்பநிதி, இங்கிலாந்தின்…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். பொழுது புலர்ந்தாலே, எல்லோருக்கும் புத்துணர்ச்சி பிறக்கும். எனக்கோ, அந்தப் புத்துணர்ச்சியோடு புது உற்சாகமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதற்கு உடன்பிறப்புகளான நீங்களன்றி வேறு காரணமில்லை. தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை என்றாலும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தலைமைப் பொறுப்பு என்னிடம் உள்ள கடமையை உணர்ந்து, நாள்தோறும் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினேன். “மக்கள் பணியே எல்லாவற்றையும் விட மகத்தானது. மக்களுக்காக உழைப்பதே நம் கடமை” என்று அங்கு திருவுருவச் சிலையென நிற்கும் பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் நிதமும் அறிவுறுத்துகின்றனர். “சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா” என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் தினமும் வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் உன்னை…
திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விடுதியின் முதலுதவிப் பெட்டியில் காலாவதியான மாத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த அமைச்சர், இது குறித்து விடுதிக் காப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்தார். மேலும், கழிப்பிடங்களில் கதவுகள் இல்லாத அவல நிலையை நேரில் பார்த்த அவர், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். தொடர்ந்து விடுதியின் உணவகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கிருந்த மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுவது குறித்தும், அறைகளில் மின்விசிறிகள் வசதி இல்லாதது குறித்தும் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் தேவைகளை நிறைவேற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், “முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் அந்தக் கட்சிக்கு இல்லை. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது தவெக. தவெகவின் அந்த ஆதரவு கோரிக்கையை உடனடியாக ஏற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. மேலும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களையும், தற்போது மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யையும் பெற்றுள்ளது. இதேபோல், விசிகவும், ஐ.யு.எம்.எல். ஆகியை முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனும் நிலைபாட்டை எடுத்து பின்னர் இரண்டு கட்சிகளும் தலா ஒரு அமைச்சர்களை தவெக அரசில் பெற்றுள்ளன. சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியை நிபந்தனையற்ற ஆதரவை தவெக அரசுக்கு வழங்கிவருகிறது. அதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்களும், அமமுக…
சிவகங்கை மாவட்டம் கல்லல் காவல் நிலையத்தில், மணல் கடத்தலைத் தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் அருகே உள்ள சாத்தம்பத்தி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை காரணமாக, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாக, அன்று இரவு கல்லல் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் துரைசிங்கத்திடம், திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் மதுபோதையில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “இப்பகுதியில் மணல் கடத்துவது எனது தொழில், இதுவரை யாரும் என்னைக் கேள்வி கேட்டதில்லை, நீ வந்ததிலிருந்துதான் பிரச்சினை” என மிரட்டிய அவர், திடீரென எஸ்.ஐ. துரைசிங்கத்தின் கையைப் பிடித்து முறுக்கித் தாக்கியுள்ளார். ஏற்கனவே விபத்து ஒன்றில்…