Author: Editor web3
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள், அதிமுகவுக்குள் மிகப்பெரிய பிளவையும் அதிகாரப் போராட்டத்தையும் உருவாக்கியுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உட்கட்சி மோதல் வீதிக்கு வந்துள்ளது. தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான எஸ்பி வேலுமணி அணியினர் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர். அந்தவகையில், தேர்தல் தோல்வி குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் வேலுமணி இறங்கியுள்ளார். இதற்காக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து, பொதுக்குழுவைக் கூட்டக் கோரி ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்து வாங்கி வருகிறார் வேலுமணி. அதேசமயம், பொதுக்குழு கூடினால் வேலுமணி தரப்பு…
நாட்டின் தற்போதைய சூழலால் லாக்டவுன் போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், மறுபக்கம் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களில் தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், மக்களின் இயல்பான வாழ்க்கை முறையும், அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு “லாக்டவுன் போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் விளைவாக…
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் விஜய், முதல் நாளிலேயே தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு அவர் கையெழுத்திட்டார். இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் நிவாரணத்தை அளிக்கும். ஆனால் இதில் பெரும் குழப்பம் காலையில் முதல் இருந்து வந்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அனைத்து மாவட்டங்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், மே 10-ஆம் தேதி முதல் நுகர்வோருக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடும் போது, தவெக அரசின் புதிய இலவச மின்சாரத் திட்டத்தின் விதிகளின்படி கணக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தபடி, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்…
தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது X தள பதிவில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. கழகத்தினரை மனதுவிட்டுப் பேச…
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். இதையடுத்து விவாகரத்துக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம்வருவது இணையத்தில் வைரலாகி வந்தது. குறிப்பாக, அண்மையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷா மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.…
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் சாதனை வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. சூர்யாவிற்கு இதுவொரு மிகச்சிறந்த ‘கம்பேக்’ படமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால், அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை பிரபல பாக்ஸ் ஆபீஸ் இணையதளமான Sacnilk வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் நேற்று முதல் நாளில் இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.16.66 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.4 கோடி வசூலாகியுள்ள நிலையில், உலக அளவில் ஒட்டுமொத்தமாக முதல் நாளிலேயே ரூ.20.66 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. படம் பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருவதாலும், இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட சிறப்பு நிலவரக் குழுவுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத பின்னடைவு, 15 அமைச்சர்களின் தோல்வி மற்றும் கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. தோல்விக்கான கள நிலவரங்களையும், அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிய, இந்த 36 பேர் கொண்ட குழுவினர் விரைவில் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து இக்குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க…
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு பிறகு சற்றே தணிந்திருந்த உட்கட்சிப் பூசல், தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே புதிய அதிகார மோதலாக வெடித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனராக இதுவரை எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், இன்று வெளியான நாளிதழில் இபிஎஸ்-ன் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கட்சி நிர்வாகத்தில் அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு ஏற்க மறுத்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் மூத்த தலைவர்கள் இடையேயான இந்த மோதல் தற்போது…
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 13-ம் தேதி காலை தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200 என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அதன் பிறகு விலை தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ,290-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 என்ற அளவில் அதிரடியாகக் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான களம் மளமளவென சூடுபிடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டன. கொல்கத்தா, டெல்லி அணிகளின் வாய்ப்புகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 4 இடங்களுக்காக 6 அணிகள் தீவிரமாகப் போராடி வருகின்றன. தற்போதைய புள்ளிகள் பட்டியல் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் எந்த 4 அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம். குஜராத் டைட்டன்ஸ் – வாய்ப்பு: 98% டேபிளில் வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு பிளே ஆஃப் செல்ல 98% வாய்ப்பு உள்ளது. 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் இருக்கும் இந்த அணி, தங்களின் அடுத்த 2 போட்டிகளில் (KKR, CSK அணிகளுக்கு எதிராக) இன்னும் ஒரே ஒரு வெற்றியைப் பெற்றால் கூட அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ரன் ரேட்டும் ப்ளஸாக இருப்பதால்…