Author: Editor web3
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்த போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நீடிக்கிறார். உலகக்கோப்பை அணியில் இருந்து ஒரேயொரு மாற்றம் மட்டுமே இந்த அணியில் செய்யப்பட்டுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்டர் யாஸ்திகா பாட்டியா அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜி. கமலினி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகே அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில்…
ஓடும் ரயிலில் தனக்கு ஆபாச சைகை காட்டிய நபரின் செயலை அந்த பெண் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ரூபாலி தீட்சித் என்ற என்ற பயனர், போல்பூர் சந்திப்பு மற்றும் டன்குனி இடையே இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், இவரை நோக்கித் தொடர்ந்து ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரூபாலி, உடனடியாகத் தனது மொபைல் போன் மூலம் அந்த நபரின் அநாகரிகச் செயலை வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், “இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறுவது கேட்கிறது. https://x.com/GhumakkadLaali/status/2071614986259202085? பின்னர் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ரூபாலி, “இன்று நான் விவேக் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது, ரயிலின் கதவருகே நின்றிருந்த என்னை நோக்கி…
மத்திய அமைச்சகங்களின் அனைத்து செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில். நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் எளிதாக வாழ்வதற்கான சூழல் மற்றும் தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் தங்களது துறைகளின் செயல்பாடுகள், சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கமளிக்க உள்ளனர். மக்களின் வாழ்க்கையை மேலும் வசதியானதாக மாற்றுவதற்கும், அரசுப் பணிகளில் தேக்கநிலை இல்லாமல் விரைவாக மக்கள் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கும் தேவையான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதாவது, நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாகவும், கடைசி காலாண்டில் 7.8 சதவீதமாகவும் உயர்ந்து வலுவான…
2026 பிஃபா உலகக்கோப்பையின் விறுவிறுப்பான 32-வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பெனால்டி சூட்-அவுட் முறையில் வீழ்த்தி மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் நெதர்லாந்து அணி தனது மிக மோசமான மற்றும் ஆரம்பக்கட்ட தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் கோடி காக்போ (Cody Gakpo) ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். நெதர்லாந்து அணியின் வெற்றி உறுதியாகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) மொராக்கோவின் இசா தியோப் (Issa Diop) தலையால் முட்டி ஒரு சிறப்பான கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேர…
மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிராண்ட்ஸ்லாம் தொடரில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அடைந்த தோல்வியால், இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை, ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி எளிதாக எட்டியது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய சேஸிங் சாதனை ஆகும். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன் பதவி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் விளக்கம் அளித்துள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், “ஹர்மன்பிரீத் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?” எனப் செய்தியாளர்…
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் கைதாகியுள்ள 8 நபர்களுக்காகவும் அயோத்தியில் உள்ள பைசாபாத் பார் அசோசியேஷன் (Faizabad Bar Association) வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடக் கூடாது என அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளோடு விளையாடி, சாமி காணிக்கையைத் திருடியவர்களுக்கு எவ்வித சட்ட உதவியும் செய்யக் கூடாது என்பதில் வழக்கறிஞர்கள் உறுதியாக உள்ளனர். இந்த உத்தரவை மீறி, கைதான நபர்களுக்காக நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கறிஞராவது ஆஜரானால், அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்களின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ராமர் கோவில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால்…
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற 2026 உலகத் துடுப்புப் படகு போட்டியில் (World Rowing Cup III) இந்திய அணி வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இத்தொடரின் வரலாற்றிலேயே இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆண்களுக்கான ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ (Lightweight Men’s Double Sculls) பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங் ஜோடி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் படகைச் செலுத்தினர். பரபரப்பான இந்த பந்தயத்தில், 6 நிமிடம் 26.09 வினாடிகளில் இலக்கை எட்டி இந்த ஜோடி தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது. இப்போட்டியில் ஹாங்காங் ஜோடி (6:27.14) வெள்ளிப் பதக்கத்தையும், நெதர்லாந்து ஜோடி (6:27.36) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. இந்திய வீரர்களான லக்ஷய் மற்றும் உஜ்வவ் குமார் சிங் ஆகிய இருவருக்குமே இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும். தங்களின் அறிமுகத் தொடரிலேயே, உலகத் துடுப்புப் படகு போட்டியின் முதல் சுற்றில்…
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (2024, ஜூன் 29) இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, இருவரும் உலகக்கோப்பை வெற்றிக் கோப்பையுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றனர். பார்படாஸில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சில நிமிடங்களிலேயே இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஏதும் வெல்லாமல் இருந்த இந்திய அணியின் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ஜாம்பவான்கள் இருவருக்கும் இது ஒரு கம்பீரமான விடைபெறுதலாக அமைந்தது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் தூணாக விளங்கினார். 8 இன்னிங்ஸ்களில் 257 ரன்கள் குவித்த அவர், 156.70 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் 3 அரைசதங்களை விளாசினார். 2022 சொதப்பலுக்குப் பிறகு ரோஹித் கையாண்ட அதிரடி பேட்டிங்…
டென்னிஸ் உலகின் மிகவும் மதிப்புமிக்க விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனடா நட்சத்திரம் கார்சன் பிரான்ஸ்டைன் இந்த ஆண்டு விளையாடும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்காவில் பிறந்து கனடா நாட்டுக்காக விளையாடி வரும் கார்சன், கடந்த 2024-ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார். கடந்த ஆண்டு தனது முதல் விம்பிள்டன் தொடரிலேயே, முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆண்ட்ரிஸ்குவை தகுதிச் சுற்றில் வீழ்த்தி, கிராண்ட்ஸ்லாம் முதன்மைச் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தார். விம்பிள்டனின் ‘மிகவும் அழகான அறிமுக வீராங்கனை’ என்று ரசிகர்களால் புகழப்பட்ட அவர், முதன்மைச் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவுக்கு (Aryna Sabalenka) எதிராகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இந்த விம்பிள்டன்…
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியாவின் 15 வயது இளம் அற்புதம் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை வென்ற ஜோடியான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரையே தொடக்க வீரர்களாகக் களம் இறக்கியது. இப்போட்டிகளில் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் வரிசையும் சொதப்பியதால், அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கில் இந்தியா அவமானகரமான தொடர் தோல்வியைச் சந்தித்தது. “வைபவ் சூர்யவன்ஷியை அணியில் எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்குமே” என ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் விளக்கம் அளித்துள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரியான் டென் டோஸ்கேட், “வைபவ் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முழுத் தகுதியோடு இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சஞ்சு சாம்சன் மூன்று மாதங்களுக்கு முன்பு நாம்…