Author: Editor web3
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலீ கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வந்த உச்ச தலைவர் அலீ கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முன்னதாக மார்ச் 4 முதல் மார்ச் 6-க்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் காரணமாக இந்த நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் ஜூலை 5 முதல் ஜூலை 9 வரை நடத்த ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. திட்டமிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, ஜூலை 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெஹ்ரான் மற்றும் கியோம் (Qom) ஆகிய நகரங்களில் இறுதி அஞ்சலி…
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் மற்றும் ஆட்சியரின் காலதாமதத்தால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று காலை பெரம்பலூர் பாலக்கரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் காலை 9.15 மணிக்கு பேரணியைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி, விடுதி மாணவ-மாணவிகள் காலை 8.15 மணிக்கே வரவழைக்கப்பட்டு, சாலையில் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் பேரணி தொடங்கப்படவில்லை. வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வந்த மாணவர்கள், சுட்டெரிக்கும் வெயிலிலும் புழுதியிலும் சுமார் 10.40 மணி வரை கால்கடுக்கக் காத்திருக்க வைக்கப்பட்டனர். பின்னர்தான், மாவட்ட ஆட்சியர் சரண்யாவுடன், கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் தாமதம் ஏற்பட்டது…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் ஆகியோர் புதிய சாதனைகளைப் படைத்து முதலிடத்தை அலங்கரித்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மாட் ஹென்றி இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 11 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த அசாத்திய ஆட்டத்தின் மூலம், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மாட் ஹென்றி. இதன் மூலம், கடந்த 36 ஆண்டுகளில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த 3-வது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், இங்கிலாந்து மண்ணில் ஒரு நியூசிலாந்து வீரரின் சிறந்த பந்துவீச்சாக இருந்த “டான் நாஷ்” (Dion Nash) சாதனையை (11/169) மாட் ஹென்றி முறியடித்துள்ளார்.…
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்டை மாநிலமான கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்ட எஸ்டேட் பகுதிகள் மட்டுமின்றி, சோலையார், முடிஸ், பன்னிமேடு, மஞ்சுக்கபாறை உள்ளிட்ட முக்கியச் சாலைகளிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி உலா வருகின்றன. குறிப்பாக, சாலக்குடி – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் மலைப்பாதையில் ஒற்றை யானைகள் மற்றும் கூட்டமாகச் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ‘கபாலி’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஒற்றை யானை, அந்த வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் துரத்துவதைத் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு கேரளா அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இந்த மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையின் நடுவே காட்டு யானைகள் கூட்டம் நின்றுகொண்டிருந்ததைக் கண்டு ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை…
கோயம்புத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் செயலிழந்த நிலையில், ஓட்டுநரின் அசாத்தியமான சமயோசித புத்தியாலும் பொதுமக்களின் உதவியாலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையிலிருந்து கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கிப் புறப்பட்ட அந்தத் தனியார் பேருந்து, வழக்கம்போல பயணிகளுடன் கோவில்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறியது. அந்தச் சமயத்தில் பேருந்துக்குள் நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கோவில்பாளையம் சாலையை பேருந்து கடக்க முயன்ற மிக முக்கியமான தருணத்தில், ஓட்டுநர் பிரேக் மிதிக்க முயன்றுள்ளார். ஆனால் பிரேக் ஒயர் துண்டிக்கப்பட்டு, வாகனம் தன் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்ததை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பேருந்து கட்டுப்பாடின்றி ஓடுவதை அறிந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிடத் தொடங்கினர். அந்த இக்கட்டான பதற்றமான விநாடிகளில், சற்றும் மனந்தளராத ஓட்டுநர், சாலையின் ஓரத்தில் இருந்த மண் திட்டு மற்றும் மேடான பகுதிகளை நோக்கிப் பேருந்தை லாவகமாகத் திருப்பி அதன்…
ஈரான் நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக அங்கு நிலவி வரும் சாதகமான சூழல் மற்றும் முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்ட போதிலும், மறு உத்தரவு வரும் வரை இந்தியப் பயணிகள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களை ஒத்திவைப்பதே நல்லது என்று தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக அங்குப் புதிதாகச் செல்லும் இந்தியக் குடிமக்கள் அனைவரும், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தங்களது முழு விவரங்களையும் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். https://x.com/India_in_Iran/status/2069631904727670841? மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டரைத் தற்போதைய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் கோரப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களை மறுஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த திமுக ஆட்சியின் போது, ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 500 அதிநவீன மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. மறுஆய்வுக் குழுவின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட இந்த டெண்டர் நடைமுறையானது அரசுக்குக் கடுமையான நிதியிழப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறி இந்த டெண்டரை தவெக அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதலே கடந்த கால டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் மற்றும்…
பிஃபா உலகக்கோப்பை 2026-ன் குரூப் ‘K’ பிரிவில் இன்று நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் டிஆர் காங்கோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத்த்ரில் வெற்றியின் மூலம் கொலம்பியா அணி உலகக்கோப்பையின் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொலம்பியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், டிஆர் காங்கோவின் கோல்கீப்பர் லியோனல் எம்பாசி முதல் பாதியில் கொலம்பியாவின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் மற்றும் ஜான் ஆரியாஸ் ஆகியோரின் சிறப்பான கோல் முயற்சிகளை அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி 0-0 என சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதியில் கொலம்பிய பயிற்சியாளர் நெஸ்டர் லோரென்சோ அதிரடி மாற்றங்களைச் செய்தார். 57-வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிற்குப் பதிலாக ஜான் கோர்டோபாவும், யுவான் குவாட்ரடோவும் களமிறக்கப்பட்டனர். பின்பு 76வது நிமிடத்தில்…
கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து கவிதை பதிவிட்டுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பல முகங்களை கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். தமிழ் சினிமாவில் 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். 6000க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 232 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் கவியரசு கண்ணதாசன். சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், 1969ஆம் ஆண்டு வெளியான குழந்தைக்காக படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார் கண்ணதாசன். இன்று கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் கண்ணதாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ் கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன்பாடல்…
சர்வதேச கால்பந்து வரலாற்றில் இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் நேருக்கு நேர் மோதியதே இல்லை. உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான மெஸ்ஸி – ரொனால்டோ இடையேயான இந்த உலகக்கோப்பை மோதல், நடப்பு 2026 பிஃபா உலகக்கோப்பைத் தொடரில் நிஜமாக அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மோதல் சாத்தியமாவது எப்படி? 2026 உலகக்கோப்பையின் புதிய 48 அணிகள் கொண்ட விதிகளின்படி, நடப்பு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி குரூப்-J பிரிவிலும், போர்ச்சுகல் அணி குரூப்-K பிரிவிலும் இடம் பிடித்துள்ளன. காலிறுதியில் இவர்கள் மோத வேண்டும் என்றால், பிஃபா விதிகளின்படி ஒரு அணி தனது பிரிவில் முதலிடமும், மற்றொரு அணி தனது பிரிவில் இரண்டாம் இடமும் பிடிக்க வேண்டும். (இரு அணிகளும் முதலிடம் பிடித்தால் இறுதிப்போட்டியில் மட்டுமே மோத முடியும்). அதன்படி, ஒரு அணி முதலிடமும் மற்றொரு அணி இரண்டாம் இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற…