Author: Editor web3
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை அதிரவைக்கும் வகையில், ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வீரர்களின் பரிமாற்றம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இன்று அதிகாரப்பூர்வமாக நடந்துள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ்க்கு திரும்பியுள்ளார். அதற்குப் பதிலாக டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார். கடந்த 2025 மெகா ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கியிருந்தது. ஆனால், லக்னோ அணியில் கடந்த இரண்டு சீசன்களாக (2025, 2026) பண்ட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை. மேலும், லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறவில்லை. சமீபத்தில் மே 29 அன்று அவர் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். தற்போது டெல்லி…
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை புழல் உள்ளிட்ட தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தேர்வு மோசடி மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்குத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையைத் தொடங்கினர். இந்த மாநிலம் தழுவிய சோதனையின் ஒரு பகுதியாக, சென்னை புழலை அடுத்த புத்தகரம், சிவாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ரகுபதி என்பவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். 3 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.…
சென்னையில் பிரபல நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிபுரிந்த பெண்களை, அவரது மகனுடன் சேர்த்து சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரவி மோகனின் இல்லம் சென்னை நீலாங்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வேலைக்காகச் சென்ற இரண்டு பணிப்பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலைத் தொடர்ந்து, நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பணிப்பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சில பொருட்களை அவர்கள் திருடிவிட்டதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. அதன் காரணமாகவே, அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வீட்டில்…
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம் பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கே.ஆர்.புரம் காவல் எல்லைக்குட்பட்ட சீகனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோமசுந்தர் (52), இவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இவர்களது இளைய மகள் சுப்ரியா (19) ஆகிய மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். இவர்களது மூத்த மகள், வாலிபர் ஒருவருடன் கடந்த இரண்டு மாதங்களாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிவ்-இன்’ உறவில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் சுப்ரியா ஆகியோர் மூத்த மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, பெற்றோருக்கும் அந்த வாலிபருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த வாலிபர், வீட்டில் இருந்த கத்தியை…
விழுப்புரம் அருகே அதிகாலையில் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக் கூறி, ஆம்னி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து, ஓட்டுநர்களை போதை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 45 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு சாலை குறுகலாக இருந்ததால், அனைத்து வாகனங்களும் மெதுவாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவியது. அப்போது, ஆம்னி பேருந்திற்கு பின்னால் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். குறுகிய சாலை என்பதால் பேருந்து உடனடியாக வழிவிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், திடீரென ஆம்னி பேருந்தை முந்திச் சென்று வழிமறித்தது. பேருந்தை நிறுத்திய அக்கும்பல், ஓட்டுநர்களை…
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ‘I’ மற்றும் ‘J’ பிரிவுகளில் நார்வே, அல்ஜீரியா அணிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. இன்று நடைபெற்ற I பிரிவு ஆட்டத்தில் நார்வே மற்றும் செனகல் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இந்த ஆட்டத்தின் முழுநேர முடிவில், நார்வே அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த செனகல் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘J பிரிவு ஆட்டத்தில் ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஜோர்டான் அணி 1 கோல் அடித்து முன்னிலையில் இருந்தபோதிலும், ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்த அல்ஜீரியா அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றியது. இறுதியில், 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி அல்ஜீரியா அணி…
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தன் வாழ்நாளில் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாத ஒரு பொன்னான நாள். இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில், அதன் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy) கோப்பையை முத்தமிட்டது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி. பர்மிங்காமில் பெய்த பலத்த மழையின் காரணமாக, 50 ஓவர்கள் கொண்ட இறுதிப் போட்டி 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இங்கிலாந்தின் பந்துவீச்சு கடும் சவாலாக இருந்தது. ஷிகர் தவான் (31), விராட் கோலி (43), மற்றும் ரவீந்திர ஜடேஜா (33*) ஆகியோரின் போராட்டத்தால், இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய…
விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது டிப்பர் லாரி மோதிய பயங்கர விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வில்சன், சாந்தமேரி, நிர்மலா மற்றும் அந்தோணி முத்து ஆகிய 4 பேரும், சிவகாசியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். விருதுநகர் சத்திரரெட்டியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி, காரின் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் வலதுபுறம் இருந்த மையத் தடுப்பிற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி இரு பக்கமும் பலமாக நசுக்கப்பட்டதில், சொகுசு கார்…
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ஆளும் தொழிற்கட்சிக்குள்ளேயே (Labour Party) அவருக்கு எதிராக எழுந்த கடுமையான உட்கட்சி நெருக்கடி மற்றும் எதிர்ப்புகள் காரணமாக அவர் இந்த தற்காலிக முடிவை எடுத்துள்ளார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ’10 டவுனிங் தெரு’ வாசலில் தனது மனைவியுடன் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ர் ஸ்டார்மர், தனது ராஜினாமா முடிவை உருக்கமாக வெளியிட்டார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் பேசுகையில், “அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் சரியான நபரா என்ற கேள்வி என் கட்சியினரிடையே எழுந்துள்ளது. நாடாளுமன்றக் குழுவின் அந்தப் பதிலுக்கு நான் தலைவணங்குகிறேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இந்த நாட்டின் நலனை மட்டுமே முன்வைத்து எடுக்கப்பட்டது. அதனால் தான் நான் தொழிற்கட்சியின் தலைவர்…
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டும், திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தும் நூதன முறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அத்திப்புலியூர் பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, தரையில் நுனி வாழை இலையிட்டு, அதில் மண்ணை வைத்து சோறாக பாவித்து சாப்பிட்டு விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் இறங்கினர். தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பருவமழை பொய்த்துப் போனதாலும், விவசாய இடுபொருட்களின்…