Author: Editor web3

நாகை மாவட்டம் கீழப்பிடாகை பகுதியில், அதிகாரப்பூர்வமாகப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தும் கூட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கு நின்று செல்வதில்லை என அப்பகுதி மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பிடாகை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் விவசாயிகள் எனப் பெரும்பாலானோர் தங்களின் வெளிவட்டாரப் பயணங்களுக்குப் பேருந்து சேவையையே முழுமையாக நம்பியுள்ளனர். மேலப்பிடாகை வரை நடக்கும் அவலம்: அரசு சார்பில் கீழப்பிடாகை பகுதியில் பயணியர் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியைக் கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் வேறு வழியின்றி நீண்ட தூரத்திலுள்ள மேலப்பிடாகை பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று பேருந்து ஏற…

Read More

தமிழகத்தில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தேனியில் விவசாயச் சங்கத்தினர் பல்வேறு நூதன முறைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் சமயத்தில் விவசாயக் கடன்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் குறைவான தொகையே தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனியில் ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வினோதமான போராட்டத்தின் தொடக்கமாக, தமிழக முதல்வருக்கு விவசாயச் சங்கத்தினர் கேக் வெட்டி விவசாயிகளுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தலையில் துண்டு போட்டு, கைகளில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிலை ஊதிவிட்டு, பின்னர் அதனை அறுத்துச் சாலையில் எறிந்தும், தங்கள் உடலிலேயே சாட்டையால் அடித்துக் கொண்டும் நூதன முறையில் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். தேர்தல் வாக்குறுதியில்…

Read More

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அளித்த விளக்கத்தின் மூலம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க ஐடி விங் தெரிவித்துள்ளது. சமீபத்தில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளி நிகழ்வின் போது, அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தானே தவிர, மதிப்பிற்குரிய சென்னை மேயர் பிரியா அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இதன் மூலம் மேயர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள் அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளன. அரசுப் புரோட்டோகால் என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு…

Read More

பிரபல நகைச்சுவை நடிகரும், சூப்பர் குட் மூவிஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாளருமான பாவா லட்சுமணன் உடல்நலக்குறைவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் மற்றும் நடிகரான ‘லெஜண்ட்’ சரவணன் அவருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரைத்துறையில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் பாவா லட்சுமணன். குறிப்பாக, வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுபவை. மேலும், ஆரம்பகாலத்தில் சூப்பர் குட் மூவிஸ் நிறுவனத்தின் மேலாளராகவும் திரைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். சமீபகாலமாக தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனின் தற்போதைய வறுமை மற்றும் அவல நிலை குறித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது. இதனையறிந்த ‘லெஜண்ட்’ சரவணன், உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளார். பாவா லட்சுமணனின் அவசர மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவியை அவர் வழங்கியுள்ளார். லெஜண்ட் சரவணனின் இந்த…

Read More

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் மடியில் 6 மாத குழந்தையாக இருந்த சிறுவன், இன்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது முதல் கோலை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் இளம் நட்சத்திரமான லாமின் யமால் (Lamine Yamal), சவூதி அரேபியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் மெஸ்ஸி மற்றும் யமால் ஆகிய இருவருக்கு இடையே ஆச்சரியமூட்டும் சில அரிய தற்செயல் நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு லியோனல் மெஸ்ஸி தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடினார். அதற்கு அடுத்த ஆண்டான 2007இல், யுனிசெஃப் (UNICEF) அமைப்பின் தொண்டு நிகழ்ச்சி ஒன்றில் 18 வயதான மெஸ்ஸி பங்கேற்றார். அப்போது அங்கு வந்த ஒரு 6 மாதக் குழந்தையை கைகளில் ஏந்தியபடி மெஸ்ஸி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் இருந்த குழந்தைதான் இன்றைய கால்பந்து உலகின் இளம் புயல்…

Read More

உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் இரண்டு புதிய முக்கிய அப்டேட்களைச் சோதித்து வருகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்ற ‘கிரீன் ஆன்லைன் இண்டிகேட்டர்’ (Green Online Indicator) மற்றும் மேம்படுத்தப்பட்ட ‘பேக்கப் மேனேஜ்மென்ட்’ (Backup Management) ஆகிய வசதிகளை கொண்டுவர சோதிக்கப்பட்டு வருகிறது, தற்போது நாம் ஒருவருடன் சாட் செய்யும் போது மட்டுமே அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பது தெரியவரும். ஆனால், இனி ஒரு பயனர் வாட்ஸ்அப் செயலியில் ஆக்டிவாகஇருந்தால், அவரது சுயவிவரப் படத்தின்  அருகில் சிறிய பச்சை நிறப் புள்ளி தோன்றும். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta version 2.26.24.5) பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் இந்த வசதி, இனி வாட்ஸ்அப்பிலும் வரவுள்ளது. இதனால் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் முன்பே அவர்…

Read More

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கிய இத்தொடரில், ஜூன் 19 அன்று கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கண்டனம் தெரிவித்தும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டசபை கூடியதும், தனது 53ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது சபாநாயகர் பேசியதாவது, “முதலமைச்சர் விஜய் 52-வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதலமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதலமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர்.…

Read More

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் பெரும் வெற்றியுடனும் விளங்க வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவதிலும் நான் எப்போதும் உங்களுடன் உறுதியாக நிற்பேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும்…

Read More

ஒடிசா மாநிலத்தில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா – குனுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் சென்று கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமானது. இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக ‘ரயில் மதத்’ (Rail Madad) செயலி மூலமாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், அவசர மருத்துவ உதவிக்காக கட்டாக் இரயில் நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், ரயில் நிலையத்தை வந்தடைவதற்கு முன்பாகவே, நகரும் ரயிலுக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ரயில் கட்டாக் நிலையத்தை வந்தடைந்ததும், ஆர்பிஎஃப் காவலர்கள் பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை…

Read More

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தன்னிடம் மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரை ஒரு மணி நேர இடைவெளியில் பயணி ஒருவர் கச்சிதமாகப் பிடித்துள்ளார். அதில் ஒரு மோசடிக்காரர் பயந்து ஓடும் தற்போதைய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது. https://www.instagram.com/ranvijayy_vlogs/reel/DZ2UxFgq5db/ @ranvijayy_vlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில், பயணி ஒருவர் மோசடிக்காரனை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்தபடி, “வா, போலீசிடம் போகலாம், அங்கு போய் பேசிக்கொள்ளலாம். பாருங்கள் எப்படி ஓடுகிறான் என்று! இவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள், யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார். பின்னர் அந்த பயணி தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், “நான் இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் இருக்கிறேன். கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு ஏமாற்றுக்காரர்களை நான் சந்தித்துவிட்டேன். முதலில் வந்த நபர், தனது மொபைல் போன் மூலம் தனக்கு ரயில்…

Read More