Author: Editor web3

இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்று அணிக்குத் திரும்புவது உறுதியாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி காலி (Galle) சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பும்ராவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், பிசிசிஐ  இலங்கை தொடருக்கான அணியை அறிவித்தபோது, பும்ராவின் உடற்தகுதிக்கு உட்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடற்தகுதித் தேர்வில் முழுமையாகத் தேறிவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் தரப்பில் கூறுகையில், “ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். COE  உடற்தகுதித் தேர்வுகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அணியின் திட்டங்களுக்கு அவர் மிகவும்…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளார். காமன்வெல்த் டெகத்லான் (Decathlon – 10 வகையான தடகளப் போட்டிகள் கொண்ட கூட்டுப் போட்டி) வரலாற்றில், இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இத்தொடரில் அவர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். முன்னதாகப் பயிற்சியின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் அவரை பெரிதும் பாதித்திருந்த போதிலும், அதையெல்லாம் மீறி 27 வயதான தேஜஸ்வின் சங்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு நாட்கள் மற்றும் 10 வெவ்வேறு தடகள நிகழ்வுகளைக் கொண்ட இந்த மிகக் கடினமான போட்டியில் தொடர்ந்து போராடிய அவர், மொத்தம் 7,976 புள்ளிகளைக் குவித்தார். இப்போட்டியில் கிரெனடாவின் லிண்டன் விக்டர் (Lindon Victor) 8,096 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கனடாவின் டாமியன் வார்னர் (Damian Warner)…

Read More

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி 19 கிலோ சிலிண்டர்களின் விலையை ரூ. 174 முதல் ரூ. 183.50 வரை குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது இந்தநிலையில்,  மாதத்தின் தொடக்க நாளான இன்று (ஆக.1) 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில்…

Read More

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. குத்துச்சண்டை வீராங்கனைகள் பிரீத்தி பவார் மற்றும் அங்குஷ் பங்கால் ஆகியோர் குத்துச்சண்டை போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், இப்போட்டிகளில் இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை பிரிவில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளும் (10 பேரும்) தாங்கள் மோதிய போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்குக் குறைந்தது 10 பதக்கங்கள் (தங்கம் அல்லது வெள்ளி) உறுதியாகி உள்ளன. ஆடவர் பிரிவில் ஜடுமணி சிங் (55 கி.கி), அங்குஷ் (80 கி.கி), சச்சின் சிவாச் (60 கி.கி) மற்றும் நரேந்தர் (90+ கி.கி) ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளனர். இதேபோல் மகளிர் பிரிவில் பிரீத்தி பவார்,…

Read More

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை அன்று மேலும் 2 தங்கப்பதக்கங்கள் இணைந்தன. ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங், இந்தியாவின் கணக்கில் தங்கப்பதக்கத்தைச் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோசுவா கட்ஸை (Joshua Katz) வீழ்த்தி அவர் இந்த வரலாற்றுத் தங்கத்தைக் கைப்பற்றினார். குறிப்பிடத்தக்க வகையில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் கனடாவின் ஹைடி குவாச்சை (Heidi Quach) வீழ்த்தி அஸ்மிதா தே தங்கம் வென்ற சில நிமிடங்களிலேயே ஹர்ஷ் சிங்கின் இந்த வெற்றியும் பதிவானது. இவர்களின் வெற்றியின் மூலம், நடப்பாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. 23 வயதான ஹர்ஷ் சிங், தொடக்கத்தில் கட்ஸிடமிருந்து கடுமையான சவாலைச் சந்தித்தாலும், போட்டி முடிய வெறும் 41 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில் மிகத் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜூடோ விளையாட்டில்…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீராஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இதற்கிடையே, இலங்கையின் ரூமேஷ் பதிராகே (Rumesh Pathirage) அபாரமாகச் செயல்பட்டு 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். அதேசமயம், இந்தியாவின் மற்றொரு வீரரான யஷ்வீர் சிங் தனது இறுதி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று இரட்டைப் பெருமை சேர்த்தது. இலங்கைக்கு 76 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தங்கம்: தொடருக்குள் உலகத் தரவரிசையில் முன்னணியில் நுழைந்த ருமேஷ் பதிராஜே, தனது இரண்டாவது சுற்றில் 89.75 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் எறிந்த அந்த ஒரு முறை மட்டுமே சரியான முயற்சியாக…

Read More

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கை  உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி  பாயல் அப்துல்லா இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,’நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு வந்துவிட்டதாகவும், பரஸ்பர சம்மதத்தின் பேரில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் கடந்த ஜூலை 22 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். “அவர்கள் இருவரும் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். எல்லாம்…

Read More

வரும் 2027 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில், அனைத்து உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் அல்லது பிரதமர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவது எங்களது கடமையாகும். அதன்படி அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்படும்” என்று உறுதிப்படுத்தினார். எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமாபாத் செல்வாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. இதனிடையே, மணிலாவில்…

Read More

வருகிற செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இவருடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. எனினும், சீன அதிபரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதல்களால் தூதரக உறவுகளில் பதற்றம் நிலவியது. கடந்த 2020 ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில்…

Read More

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா செல்லவிருக்கும் சூழலில், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் வருகை தரும் நாளில் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட ஆதரவு அமைப்புகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதே நாளில் தமிழகத்தின் தஞ்சாவூரில் திமுக ஒரு மாற்றுப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி (மொத்தம் சுமார் 6 டிஎம்சி) நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு அளித்த பரிந்துரையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை உறுதி செய்தது; அதேவேளையில் கர்நாடகாவின் கோரிக்கையை அது நிராகரித்தது. கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கர்நாடகா வாதிட்ட போதிலும், ஆணையம் அதனை ஏற்கவில்லை. இதனால், இந்த உத்தரவுக்கு எதிராக அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்த நிலையில், மாநில அரசு அனைத்துக்…

Read More