Author: Editor web3

இலங்கையில் நடைபெற்று வரும் ஏ-அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா-A மற்றும் இலங்கை-A அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சை ஒட்டுமொத்தமாக துவம்சம் செய்து உலகத்தரம் வாய்ந்த ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-A அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இந்திய அணிக்கு சாதகமான தொடக்கம் தருவதற்காக வைபவ் சூர்யவன்ஷி களம் புகுந்தார். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலிருந்தே சூர்யவன்ஷி சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழைகளைப் பொழியத் தொடங்கினார். இவரது அசுர வேக அதிரடியால், இந்திய-A அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 5 ஓவர்களிலேயே 88 ரன்கள் குவித்து அசத்தியது. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த சூர்யவன்ஷி, வெறும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து கிரிக்கெட் உலகை உற்றுநோக்க வைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றின்…

Read More

உலகம் முழுவதும் இன்று (ஜூன் 21) 12-ஆவது சர்வதேச யோகா தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவீன காலத்து பரபரப்பான வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளுக்கு யோகாசனம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தினமும் யோகாசனம் செய்வதால் நம் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் முக்கிய நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது மன அழுத்தத்திலிருந்து உடனடி நிவாரணம்: இன்றைய…

Read More

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் E பிரிவில் ஈக்வடார் மற்றும் குராசோ அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டம் 0-0 என்ற  கணக்கில் சமனில்  முடிந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பலமான ஈக்வடார் அணி ஆதிக்கம் செலுத்தியது. பந்தை அதிக நேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த அணி வீரர்கள், குராசோ கோல் போஸ்ட்டை நோக்கி பலமுறை தாக்குதல் நடத்தினர். ஈக்வடார் அணியின் உலகத்தரம் வாய்ந்த ஃபார்வேர்டு வீரர்களை கோல் அடிக்க விடாமல் குராசோ அணியின் டிஃபெண்டர்களும், கோல்கீப்பரும் மிக அரணாக நின்று தடுத்தனர். கடைசி நிமிடம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரு கோல்கீப்பர்களும், குறிப்பாக குராசோவின் எலாய் ரூம், அதிக அளவில் செயல்பட வேண்டியிருந்தது. அவர் 15 முறை பந்தைத் தடுத்தார், இது 2014-ல் முன்னாள் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்ட் படைத்திருந்த சாதனையை விட ஒன்று குறைவாகும். முழு நேர ஆட்டமுடிவில்…

Read More

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 21) கலந்துகொண்டார். மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகியோருடன் இணைந்து யோகா செய்த பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, யோகா என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் சக்தி என்று குறிப்பிட்டார். “இன்று ஒட்டுமொத்த தேசமும், உலகமும் யோகா மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இதுதான் யோகாவின் சக்தி. இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த உலகிற்கும், மனித சமுதாயத்திற்கும் எனது மனமார்ந்த யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். மேலும், யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மக்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகளையும் அவர் மனதாரப் பாராட்டினார். மேற்கு வங்கத்தின் ஆன்மீகப் பெருமைகளை நினைவு கூர்ந்த…

Read More

இந்திய தடகள கூட்டமைப்பு முதன்முறையாக அறிமுகப்படுத்திய ‘இந்திய தடகள விருதுகள்’ விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, 2025-ஆம் ஆண்டின் ‘சிறந்த தடகள வீரர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட நீரஜ் சோப்ரா, மூத்த மற்றும் இளம் தலைமுறை தடகள வீரர்களுக்கு முன்னிலையில் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது தனது இதயத்திற்கு மிக நெருக்கமானது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல் மகளிர் பிரிவில், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்  ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்த வீராங்கனை பருல் சவுத்ரி ‘ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை’ விருதைத் தட்டிச் சென்றார். இவர்களுடன் தடகளத் துறைக்கு ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பிற்காக, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும் முன்னாள் தடகள ஜாம்பவானுமான பி.டி. உஷாவுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சமீபத்தில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகப்…

Read More

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் 30-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் கேப்டன் பிராங்க் கெஸ்ஸி (Franck Kessié) ஒரு சூப்பரான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த டெனிஸ் உந்தாவ் (Deniz Undav) ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 68-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டம் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தில் 94-வது நிமிடத்தில் டெனிஸ் உந்தாவ் மீண்டும் ஒரு அபாரமான கோலை அடித்து ஜெர்மனிக்கு 2-1 என்ற கணக்கில் திரில் வெற்றியைத் தேடித்தந்தார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி…

Read More

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 பிஃபா உலகக் கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற 35-ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. ‘F’ பிரிவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம் தொடங்கியது முதலே நெதர்லாந்து வீரர்கள் சுவீடன் அணியின் தடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்து அடுத்தடுத்து கோல்களை விளாசினர். ஆட்டத்தின் 5, 17-வது நிமிடங்களில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 47, 54-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணியின் காக்போ 2 கோல்கள் அடித்தார். நெதர்லாந்தின் பலமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சுவீடன் அணி  59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த…

Read More

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் (22.79 லட்சம்) மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த மாதம் மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் தேர்வின் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை  அந்தத் தேர்வை ரத்து செய்து, இன்று மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இதனால் கடந்த 37 நாட்களில் நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கோவை, சேலத்தைச் சேர்ந்த மாணவிகள் மறுதேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நீட் மறுதேர்வு இன்று நடக்க உள்ளது. முந்தைய முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த…

Read More

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் டாப் ஆர்டர் பேட்டர்களைத் தகர்த்தெறிந்தார். குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா என முன்னனி விக்கெட்டுகளை அவர் வீழ்த்திய விதம், இந்திய அணியின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 8 ஓவர்கள் வீசி, 2 மெய்டன்களுடன் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி நிதானமாக விளையாடி சதம் அடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினார். இருப்பினும் அவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு…

Read More

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கூட்டணி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு ஜோடி ஆட்டத்தின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் இணைந்து வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பந்துவீசிய இந்தியா, பிரசித் கிருஷ்ணாவின் துல்லியமான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்திலேயே ரஹ்மானுல்லா குர்பாஸை ஆட்டமிழக்கச் செய்ய, விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரோகித் சர்மா கேட்ச் பிடித்து அசத்தினார். தொடர்ந்து அதே வேகத்தில் வீசிய பிரசித், ரஹ்மத் ஷா மற்றும் இப்ராகிம் சத்ரான் ஆகியோரின் விக்கெட்டுகளையும் சாய்த்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியபோது, ரோகித் சர்மா ஸ்லிப் மற்றும் கீப்பிங் நிலையில் கேட்ச்…

Read More