Author: Editor web3

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் பெரும் வெற்றியுடனும் விளங்க வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவதிலும் நான் எப்போதும் உங்களுடன் உறுதியாக நிற்பேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும்…

Read More

ஒடிசா மாநிலத்தில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா – குனுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் சென்று கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமானது. இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக ‘ரயில் மதத்’ (Rail Madad) செயலி மூலமாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், அவசர மருத்துவ உதவிக்காக கட்டாக் இரயில் நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், ரயில் நிலையத்தை வந்தடைவதற்கு முன்பாகவே, நகரும் ரயிலுக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ரயில் கட்டாக் நிலையத்தை வந்தடைந்ததும், ஆர்பிஎஃப் காவலர்கள் பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை…

Read More

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தன்னிடம் மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரை ஒரு மணி நேர இடைவெளியில் பயணி ஒருவர் கச்சிதமாகப் பிடித்துள்ளார். அதில் ஒரு மோசடிக்காரர் பயந்து ஓடும் தற்போதைய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது. https://www.instagram.com/ranvijayy_vlogs/reel/DZ2UxFgq5db/ @ranvijayy_vlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில், பயணி ஒருவர் மோசடிக்காரனை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்தபடி, “வா, போலீசிடம் போகலாம், அங்கு போய் பேசிக்கொள்ளலாம். பாருங்கள் எப்படி ஓடுகிறான் என்று! இவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள், யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார். பின்னர் அந்த பயணி தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், “நான் இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் இருக்கிறேன். கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு ஏமாற்றுக்காரர்களை நான் சந்தித்துவிட்டேன். முதலில் வந்த நபர், தனது மொபைல் போன் மூலம் தனக்கு ரயில்…

Read More

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் (Ras Laffan Industrial City) அமைந்துள்ள பர்சான் (Barzan) எரிவாயு ஆலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 21) ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்த கோர விபத்தில் இதுவரை 54 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 18 ஊழியர்களைக் காணவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? கடந்த மார்ச் மாதம் பிராந்திய மோதல்களின் போது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் இந்த ராஸ் லஃப்பான் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ஹோமுஸ் நீரிணைப் பகுதியில்  பதற்றம் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளன. அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட செயல்பாட்டு கோளாறு காரணமாக…

Read More

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘G’ பிரிவு லீக் ஆட்டத்தில், எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் 92 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும். ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்திலேயே நியூசிலாந்து அணியின் டிஃபென்டர் ஃபின் சுர்மன் (Finn Surman) ஒரு அற்புதமான ஹெட்டர் மூலம் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் உத்வேகத்துடன் விளையாடிய எகிப்து அணி, 58-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ (Mostafa Zico) அடித்த அதிரடி ஹெட்டர் கோல் மூலம் 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் எகிப்தின் நட்சத்திர கேப்டன் முகமது சாலா (Mohamed Salah) பந்தை லாவகமாக கொண்டு சென்று கோல் அடித்து, அணியை 2-1…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும், முந்தைய சாதனைகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தை தசாப்தங்களாக ஆண்டு வந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார். 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவாக 85.1% வாக்குகள் பதிவாகின. மே 4 அன்று வெளியான தேர்தல் முடிவுகளில், முதல்முறையாக தேர்தலைச் சந்தித்த விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவ, தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) தேவையான சில…

Read More

எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பதிவில், “மதிப்பிற்குரிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் ஜோசப் விஜய்க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; “மக்கள்தானே மன்னர்கள்” என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள். இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது “மக்கள் ஊழியனாக” அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று…

Read More

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஜூலை 14ம் தேதி முதல் போட்டியும், ஜூலை 16ம் தேதி 2வது போட்டியும், ஜூலை 19ம் தேதி மூன்றாவது போட்டியும் நடக்கிறது.  இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டே அவர் போட்டியில் பங்கேற்பார் என்பதை பிசிசிஐ தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. https://x.com/BCCI/status/2068606341132996613? ஆப்கானிஸ்தான் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த போதிலும், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தொடரில் இந்திய அணியை சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் வழிநடத்தவுள்ளனர். இந்திய அணி…

Read More

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ‘F’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி, துனிசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றின் 1000-ஆவது போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த தொடர்ச்சியான தோல்வியின் மூலம் துனிசியா அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. ஹைட்டி மற்றும் துருக்கி நாடுகளைத் தொடர்ந்து, இந்த தொடரிலிருந்து வெளியேறும் 3-ஆவது நாடாக துனிசியா மாறியுள்ளது. தனது முதல் போட்டியில் நெதர்லாந்துடன் 2-2 என டிரா செய்திருந்த ஜப்பான், இந்த முதல் வெற்றியின் மூலம் குரூப் ‘F’ பிரிவில் 2-ஆவது இடத்திற்கு முன்னேறி, நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தனது அடுத்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஸ்வீடனை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை வரலாற்றில் 2010-ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக 3 கோல்கள் அடித்ததே ஜப்பானின்…

Read More

இலங்கையில் நடைபெற்று வரும் ஏ-அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா-A மற்றும் இலங்கை-A அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சை ஒட்டுமொத்தமாக துவம்சம் செய்து உலகத்தரம் வாய்ந்த ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-A அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இந்திய அணிக்கு சாதகமான தொடக்கம் தருவதற்காக வைபவ் சூர்யவன்ஷி களம் புகுந்தார். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலிருந்தே சூர்யவன்ஷி சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழைகளைப் பொழியத் தொடங்கினார். இவரது அசுர வேக அதிரடியால், இந்திய-A அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 5 ஓவர்களிலேயே 88 ரன்கள் குவித்து அசத்தியது. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த சூர்யவன்ஷி, வெறும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து கிரிக்கெட் உலகை உற்றுநோக்க வைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றின்…

Read More