Close Menu
    What's Hot

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்?. சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    எத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்?. சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor web3By Editor web3August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 highcourtr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகதீஷ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்து அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

    நீதி பரிபாலனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வழக்கறிஞர்களே குற்ற வழக்குகளை எதிர்கொண்டால், நீதிமன்றத்தை நாடி வரும் கட்சிக்காரர்களை அவர்களால் சட்டப்படி பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுவதாக நீதிபதி தன் வேதனையைப் பதிவு செய்தார். மேலும், ஏராளமான வழக்கறிஞர்கள் இதுபோன்று குற்ற வழக்குகளில் சிக்குவது வழக்கறிஞர் சமூகத்தின் நன்மதிப்புக்குக் குந்தகம் விளைவிப்பதோடு, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    எனவே, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் புதியதாக வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைவதையும், பார் கவுன்சில் சங்கங்களின் நிர்வாகிகளாகப் பதவியேற்பதையும் தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எத்தனை வழக்கறிஞர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்துக் கண்டறிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வழக்குகள் வழக்கறிஞராவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவையா, வழக்கறிஞரான பிறகு பதிவு செய்யப்பட்டவையா அல்லது தொழிலில் இருக்கும்போது பதிவானவையா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Criminal Cases High Court Lawyers special committee
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி!. இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார் பும்ரா!
    Next Article இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    August 1, 2026

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    August 1, 2026

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    எத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்?. சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

    உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி!. இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார் பும்ரா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.