Author: Editor web3

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.  தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் மற்றும் முக்கியப் பொறுப்பு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, மாநிலத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம், சட்டம் – ஒழுங்கு சூழல் மற்றும்…

Read More

கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வால்பாறை அண்ணாநகர் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. குடியிருப்புப் பகுதியின் பிரதான சாலையில் உலா வந்த அந்தச் சிறுத்தை, வீடுகளுக்கு அருகில் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனத் தேடிப் பார்த்தது. குடியிருப்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தச் சிறுத்தையின் நடமாட்டம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த அண்ணாநகர் பகுதி வாசிகள், தங்கள் வீட்டிற்கு அருகே சிறுத்தை வந்து சென்றதைக் கண்டு மிகுந்த பீதியடைந்துள்ளனர். வால்பாறை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே…

Read More

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து, தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று உத்தரவிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 19) காலை அமராவதி அணையின் ஆற்றுமதகு வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தாராபுரம் நகராட்சி மக்களின் குடிநீர் பயன்பாடு மற்றும் அப்பகுதி கால்நடைகளின் குடிநீர் தேவையை முன்னிட்டு, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, இன்று முதல் வரும் ஜூன் 23-ஆம் தேதி வரை, மொத்தம் நான்கு நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த நான்கு நாட்களில், ஒட்டுமொத்தமாக 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கோடைகால நீர் தேவையைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த அரசு முடிவை, அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

Read More

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முக்கிய அரசுத் துறைகளில் அதிகாரிகள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, காவல்துறை உயர் மட்டத்திலும் அதிரடி இடமாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இப்பதவியில் இருந்த ஓய்வு பெற்ற அதிகாரி சுனில் குமார், ஆட்சி மாற்றத்திற்குப் பின் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராகப் பணியாற்றிய தினகரன், தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படைத் தலைமைப் பொறுப்பு தற்போது டிஜிபி அந்தஸ்திலிருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். தமிழ்நாடு தீ மற்றும் மீட்புப் பணிகள் டிஜிபியாக இருக்கும் சீமா அகர்வால், கூடுதலாக ‘தீயணைப்பு ஆணையத் தலைவர்’ பொறுப்பையும் கவனிக்க உள்ளார். முன்னாள் டிஜிபி சங்கர்…

Read More

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியின் புகழ்பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அதேபோல், முல்லா வீதியில் உள்ள மௌலானா ஹஜ்ரத் சையது அகமத் மௌலானா சாய்பு தர்காவில் சிறப்பு தொழுகையும், இரயில் நிலையம் அருகில் உள்ள தூய இருதய ஆண்டவர் பாசிலிகாவில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ராகுல் காந்தி நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்ற வேண்டியும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக்…

Read More

கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசாமாக பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ‘கே.எம்.எஸ்’ (KMS) தனியார் பேருந்து, நீலாம்பூர் பகுதியைத் தாண்டியபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், பலத்த காயமடைந்த 3 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக நீலாம்பூர் புறவழிச்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசலைக் குறைக்க, அவ்வழியே வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.…

Read More

காவிரி நதி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இதில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீட்டை உறுதி செய்வது இந்தக் கூட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இருப்பினும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக அரசு நீண்டகாலமாகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின்…

Read More

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், 23-வது தவணை நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 20, 2026) மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம், தாரகேஷ்வரில் நடைபெறும் விழாவில் விடுவிக்கிறார். நாடு முழுவதும் உள்ள சுமார் 9.44 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ. 18,880 கோடிக்கும் அதிகமான நிதியுதவி இந்தத் தவணை மூலம் நேரடியாகச் சென்றடையும். இந்த நிகழ்வு நாடு முழுவதும் “பிஎம் கிசான் உத்ஸவ் திவாஸ்”  என்று கொண்டாடப்படுகிறது. இதில் சுமார் 2.18 கோடி பெண் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த நிதி விடுவிப்பின் மூலம், 2019-ம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி ரூ. 4.46 லட்சம் கோடியைக் கடக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள்…

Read More

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள், நள்ளிரவில் அடையாளம் தெரியாத வட மாநில இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சத்தமிட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், இது குறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. அந்த அச்சம் நீங்குவதற்குள், மீண்டும் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே வாரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  தகவலறிந்து…

Read More

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://x.com/narendramodi/status/2067808457689076067? அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் https://x.com/CMOTamilnadu/status/2067811944313327618 இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வாழ்த்து செய்தியில், எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும்…

Read More