Author: Editor web3

2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘A’ பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மெக்ஸிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. குவாடலஜாராவில் உள்ள எஸ்டேடியோ அக்ரான் (Estadio Akron) மைதானத்தில் நடைபெற்றது. மெக்ஸிகோ சொந்த மண்ணில் விளையாடிய உற்சாகம் அந்த அணியின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறின. பின்பு ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில், தென் கொரிய கோல்கீப்பர் கிம் சூங்-கியூ, பந்தைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட தவறைப் பயன்படுத்திக்கொண்ட மெக்ஸிகோ வீரர் லூயிஸ் ரோமோ, கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தென் கொரியா அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது. குறிப்பாக, 87-வது நிமிடத்தில் சோ கு-சுங் தலையால் முட்டிய பந்தை, மெக்ஸிகோ கோல்கீப்பர்  ரவுல் ரஞ்செல்   அபாரமாகத்…

Read More

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் இரண்டாம் நாளான இன்று சட்டப்பேரவையின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் தொடங்குகின்றன. குறிப்பாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, கலைத்துறை பிரமுகர் கே. ராஜன் உள்ளிட்ட மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவித்து, பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து, நேற்று பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள். இந்த கூட்டத்தொடர் மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதால், வழக்கமாக நடைபெறும் கேள்வி – பதில் நேரம் இந்த முறை இருக்காது என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.…

Read More

2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இருப்பினும், இத்தொடர் தொடங்க இன்னும் ஓராண்டுக்கும் மேலான காலம் இருந்தபோதிலும், அதன் அட்டவணை எவ்வாறு அமையலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்ததாவது, ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெறும் மே மாத இறுதியில் மழை மற்றும் பருவகால மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, 2027-ஆம் ஆண்டு முதல் தொடரை மார்ச் 10-ஆம் தேதியே தொடங்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றத்தின் மூலம் தொடரை மே 15-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மே 15-க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால், பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகளின் போது சிக்கல்கள் எழுவதைத் தடுப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்று தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார்.…

Read More

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வு குறித்து  ரவிசந்திர அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது யூடியூப் தளத்தில் பேசிய அஸ்வின், கே.எல். ராகுல் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருப்பார் என்று  கருத்து தெரிவித்துள்ளார். இஷான் கிஷன் ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தாலும், அவரை உலகக் கோப்பை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய இது மிக ஆரம்பக் கட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்காக அவரை இவ்வளவு விரைவாக அணியிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று அஸ்வின் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், தேர்வுக்குழு அவரை பெரிதும் நம்புவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுந்தரின் பங்களிப்பை அவர் பாராட்டினாலும், ஒருநாள்…

Read More

கர்நாடக மாநிலம், மாதேஸ்வர மலைப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில், காட்டு யானை ஒன்று உணவைத் தேடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய வார இறுதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பகுதிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளது. ஆனால், இந்த மலைப்பகுதி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பிலிகிரிரங்கன சுவாமி கோயில் புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி வருகின்றன.  https://x.com/harishupadhya/status/2066757604513337428 அந்தவகையில் இந்த குப்பைகளை கொட்டியுள்ள இடத்தில் காட்டு யானை ஒன்று உணவுகளை தேடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இவ்வாறு குப்பைகளுக்கு மத்தியில் உணவு தேடும் போது, விலங்குகள் தற்செயலாக பிளாஸ்டிக் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உட்கொள்ளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த பகுதியில் கடுமையான குப்பை மேலாண்மை நடவடிக்கைகளை…

Read More

டெல்லியில் நிலவும் கடுமையான கோடை வெப்பத்தில், தெருவோர வியாபாரி ஒருவர் குரங்குகளுக்கு ஐஸ் மிட்டாய்களைப் பகிர்ந்து அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை (@theonlywanderman) என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. பழைய டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியில் பயணித்த ஒரு பயனர், குரங்கு ஒன்று குட்டியுடன் ஐஸ் சாப்பிடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர், ஒரு தெருவோர வியாபாரி அந்தப் பகுதியில் உள்ள குரங்குகளுக்கு, கடும் வெயிலிலிருந்து தப்பிக்க இலவசமாக ஐஸ் பகிர்ந்து அளிப்பதை அவர் பார்த்து அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். https://www.instagram.com/theonlywanderman/reel/DZW0G4Us6of/ வைரலாகி வரும் இந்த வீடியோவில், வியாபாரி ஒரு குரங்கிற்கு ஐஸ் கொடுப்பதையும், மற்றொரு குரங்கு பொறுமையாகத் தனது முறைக்காகக் காத்திருப்பதையும் காண முடிகிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ, இணையத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும்,…

Read More

அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்து விலை குறித்து அமெரிக்கப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டில் 1,000 டாலருக்கு (சுமார் ரூ.86,000) விற்கப்படும் மருந்தை, இந்தியாவிலிருந்து வெறும் 25 டாலருக்கு (சுமார் ரூ.2,150) வாங்கியதாக அவர்  தெரிவித்துள்ளார். https://www.instagram.com/reel/DZYgShBBKIP/?  அந்த அமெரிக்கப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அமெரிக்காவில் 6 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி மருந்துக்கு சுமார் 86,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அதே மருந்தை இந்தியாவிலிருந்து ஆர்டர் செய்தபோது, ஷிப்பிங் கட்டணம் உட்பட வெறும் 2,150 ரூபாய் மட்டுமே செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். மருந்தின் விலை 10 டாலர் என்றும், ஷிப்பிங் கட்டணம் 15 டாலர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த மருத்துவக் கட்டமைப்பு ஒரு “ஜோக்” என்றும், இது ஒரு “ஊழல்”  என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “நான் வாங்கிய அதே…

Read More

கோவிட்-19 தடுப்பூசிகள் தொற்றுநோயிலிருந்து மட்டுமல்லாமல், நீண்டகால இதய ஆரோக்கியத்திற்கும் முக்கியப் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் தொடர்பான சிக்கல்கள் குறித்துப் பரப்பப்படும் தவறான கருத்துகளைக் களைந்து, தடுப்பூசியின் நன்மைகளைப் புரிந்துகொள்ளுமாறு இதய சிகிச்சை நிபுணர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜேஏஎம்ஏ இண்டர்னல் மெடிசின்’ (JAMA Internal Medicine) இதழில் வெளியான சமீபத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் சுமார் 40 சதவீதம் வரை குறைவதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாரஸ் ஹெல்த் நிறுவனத்தின் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அமித் பூஷன் சர்மா, “கோவிட்-19 நோய்த்தொற்றால் ஏற்படும் ஆபத்து, தடுப்பூசியால் ஏற்படக்கூடிய அரிதான பக்கவிளைவுகளை விட மிக அதிகம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். கோவிட்-19 நுரையீரலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், இதய அமைப்பையும் மோசமாகப் பாதிக்கிறது. தொற்று உடலில் கடுமையான வீக்கத்தை  உருவாக்குவதோடு, இரத்த…

Read More

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த போர் மற்றும் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நீண்ட நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சற்று முன்பு பேசிய  ட்ரம்ப், “இது எளிதானதல்ல” என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார். இது மத்திய கிழக்கில் அமைதிக்கும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் ஒரு முக்கியமான படி என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள ஈரான், அதே சமயம் இது அமெரிக்காவின் தோல்வி என்று விமர்சித்துள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விக்கு ஒரு சான்று.…

Read More

பெண்கள் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியைத் தொடர்ந்து, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத புதிய சாதனையைப் படைத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்ட மந்தனா, 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 74 ரன்களைக் குவித்து அசத்தினார். இந்த ஆட்டத்தின் மூலம், தனது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 600 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதுவரை 168 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா, மொத்தம் 604 பவுண்டரிகளை அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்) இவ்வளவு பவுண்டரிகளை அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா ‘ஆட்ட நாயகி’…

Read More