Author: Editor web3

கோவை வடவள்ளி – சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, வடவள்ளி பகுதியில் மாலை நேரங்களில் குட்டிகளுடன் வரும் காட்டுப்பன்றிகள், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவிற்காகத் தேடுகின்றன. இதனால், சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கோவையின் புறநகர் பகுதிகளில் சிறுத்தை, புலி நடமாட்டம் மற்றும் யானைகளின் வருகை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வடவள்ளி மக்கள் காட்டுப்பன்றிகளால் நிம்மதியை இழந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இவை மனிதர்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக, வனத்துறையினர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்த…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, காட்டு யானை தாக்கியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கால் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், ஆலஹள்ளி பகுதியில் உள்ள நர்சரி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரீமா (18) என்ற வடமாநில இளம்பெண்ணை, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியது. யானையின் தாக்குதலில் ரீமாவின் இடது கால் பலத்த காயமடைந்து சுக்குநூறாக நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு உடனடியாக மேடு இருதிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, வனத்துறையினரின் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்…

Read More

தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தில் தங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை எனக் கூறி, ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வயலில் அமர்ந்து தியானம் செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கை. தகுதியுள்ள எந்த விவசாயியும் இத்திட்டத்தில் இருந்து விடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்க இந்த அதிரடி முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். எங்கள் துயரத்தை அரசிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால், எங்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை இறைவனுக்காவது தெரியப்படுத்த வேண்டும்” எனக் கூறி, விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிரிட்டுள்ள நிலத்திலேயே அமர்ந்து மனமுருகி தியானத்தில் ஈடுபட்டனர். இயற்கை சீற்றங்கள், அதிகரித்த உற்பத்திச் செலவு மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத தற்போதைய சூழலில், கடன் தள்ளுபடி…

Read More

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாலம் வயல் கிராமத்தில், நேற்று இரவு காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு உணவைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை, பாலம் வயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் சென்றது. அங்கு செடி, கொடிகளை உண்டு கொண்டிருந்தது. யானையின் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டின் உரிமையாளர்கள், டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டனர். இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, வீட்டின் கேட்டை வலுக்கட்டாயமாக இடித்துத் தள்ளிவிட்டு வெளியேறியது. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யானை ஊருக்குள் வருவதால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் சூழல் நிலவுகிறது. தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கோரி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகளை வனத்துறையினர் உடனடியாகக்…

Read More

ரோட்டர்டாமில் நடைபெற்ற 2025-26 ஆண்கள் FIH புரோ ஹாக்கி லீக் தொடரின் 10-வது போட்டியில், இந்திய அணி உலக சாம்பியனான ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா பெறும் முதல் நேரடி வெற்றி இதுவாகும். இந்தப் போட்டி இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங், தனது 413-வது சர்வதேசப் போட்டியில் விளையாடி, ஹாக்கி ஜாம்பவான் திலீப் திர்க்கியின் (412 போட்டிகள்) சாதனையை முறியடித்து, இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 33 வயதான மன்பிரீத் சிங், 2011-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2017 முதல் நீண்ட காலம் கேப்டனாகப் பணியாற்றிய அவர், டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இவரது…

Read More

2026 பிஃபா உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு எதிரான போட்டியில், காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியின் ஸ்டிரைக்கர் யோனே விசா (Yoane Wissa) அடித்த கோல், கால்பந்து வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நட்சத்திர ஸ்ட்ரைக்கரின் கோல், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 52 ஆண்டுகால உலகக்கோப்பை கோல் தாகத்தைத் தீர்த்த அந்த வீரரின் பின்னணியில் ஒரு வலிமிகுந்த ஆசிட் தாக்குதல் போராட்டம் மறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, பிரான்ஸ் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த விசா, இங்கிலாந்தின் பிரெண்ட்ஃபோர்டு அணிக்கு மாறவிருந்த தருணத்தில் ஒரு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். ரசிகர் போல நடித்து வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், விசா மீது ஆசிட் வீசினார். அவரது மகளைக் கடத்த முயற்சி செய்த அந்தப் பெண், இந்தத் தாக்குதலில் விசாவுக்குக் கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தினார். https://x.com/SulTanMahm34713/status/2067338405403574309? இந்தத் தாக்குதலுக்குப்…

Read More

தற்போது தமிழில் படங்கள் நடிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. நிச்சயமாக விரைவில் தமிழில் நடிக்க நல்ல கதைகளைத் தேடி வருகிறேன். திறமையான இயக்குநர்கள் எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எனக்கு வீடு போன்றது; உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார். புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram), தமிழில் எங்கள் தங்கம் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, நடிகராக இருப்பதை விட, ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய சவால். கடந்த ஐந்து நாட்களாக ஒரு படத்தைத் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை நேரடியாக உணர்ந்தேன். இது எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது” எனக் கூறினார். தனது தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) மூலம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். ‘மா இன்டி பங்காரம்’ படத்திற்கு முதலில் சாய்…

Read More

லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் அசுர பலத்தைக் காட்டி 402 ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும், அதன்பின்னர் களம் புகுந்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளைப் பறக்கவிட்டு ரன் மழையை பொழிந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களையும், அதிரடி மன்னன் இஷான் கிஷன் 124 ரன்களையும் குவித்து அசத்தினர். தொடக்க வீரர் ரோஹித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இந்த இருவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 400 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து…

Read More

வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதியில், துலைல் பள்ளத்தாக்கின் தார்தெய் கிலோ (Tartei Kilo) கிராமத்தில் இன்று (ஜூன் 17) கடுமையான மேகவெடிப்பு நிகழ்ந்தது. திடீரெனப் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக கிராமமே வெள்ளக்காடாக மாறியது. இந்த மேகவெடிப்பின் விளைவாக, பல டஜன் குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், திடீர் வெள்ளத்தால் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் காப்பாற்றிக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில், ஜூன் 4 அன்று ரியாசி மாவட்டத்தின் பாத்தோய் பகுதியில் மேகவெடிப்பு நிகழ்ந்து பல வீடுகள் சேதமடைந்தன. இதேபோல், நேற்று…

Read More

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்த நிபந்தனைகள் காரணமாக அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி முடிவானது அல்ல என்று குறிப்பிட்டார். “இது இறுதி ஒப்பந்தம் கிடையாது. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. ஈரான் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ, அல்லது இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கத் தயங்கமாட்டோம்” என்று எச்சரித்தார். மேலும், மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசிய அவர், “ஈரான் கடந்த 47 ஆண்டுகளாகத் தவறாகவே நடந்துகொள்கிறது. அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால், நாங்கள் மீண்டும் குண்டுகளை வீசத் தொடங்குவோம்” என்று வெளிப்படையாகப்…

Read More