Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!
    Featured

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    black sea india warning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கருங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள வணிகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியக் குடிமக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    ரஷ்ய கடற்பரப்பு மற்றும் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கருங்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் நிலவும் மோதல் சூழல் காரணமாகப் பாதுகாப்பு நிலை மிகவும் நிலையற்றதாக உள்ளதாகவும், அப்பகுதியில் இயங்கும் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் தீவிர அபாயங்களை எதிர்கொள்வதாகவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    மோதல் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கப்பல்களில் வேலை செய்ய விரும்புபவர்கள், தங்களது பணிகளை ஏற்கும் முன் தற்போதைய பாதுகாப்பு அபாயங்களை முறையாக மதிப்பிட வேண்டும் என்றும், கப்பலின் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உங்களது பயண விவரங்களை குடும்பத்தினரிடம் தொடர்ந்து தெரிவிப்பதோடு, இந்திய அரசின் கடல்சார் நிர்வாக இயக்குநரகத்தின் வழிகாட்டுதல்களையும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கருங்கடல் மற்றும் உக்ரைன் கடற்கரை அருகே வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் 4 இந்தியர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 21 அன்று இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது.

    கருங்கடல் பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்கள் அவசர உதவிக்கு ரஷ்யாவுக்கான இந்தியத் தூதரகத்தை (+7 9652773414) அல்லது உக்ரைனுக்கான இந்தியத் தூதரகத்தை (+38 0933559958) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    amid rising missile Black Sea drone attacks India issues nationals working on ships
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்
    Next Article அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்
    Editor web3
    • Website

    Related Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    July 26, 2026

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.