Author: Editor web3
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வரும் நிலையில், இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா? அல்லது அவர்களது தொடர்பை துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதற்காகவா? அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார். உலகப் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலத்திற்கு வருகை தந்த அனிருத், முதலில் சம்பந்த விநாயகரை மனமுருகி வழிப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். வைகுந்த வாயில் பகுதியில் தீபமாலை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான மரியாதை செய்யப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும், அவரைச் சூழ்ந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அனிருத்தும் புன்னகையோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பத்தடி நீள மலைப்பாம்பு ஒன்று டூவீலர் மீது ஏறி தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்துவண்டை கிராமத்தின் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே, விளைநிலங்களை விட்டு வெளியேறிய பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அப்போது, கூட்டத்தைக் கண்டு மிரண்ட அந்தப் பாம்பு, அருகில் நின்றிருந்த டூவீலரின் சீட் மீது சரசரவென ஏறி படுத்துக்கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினரும், வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினரும், வாகனத்தில் இருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து மீட்டனர். பின்னர் பிடிபட்ட அந்தப் பாம்பு பத்திரமாக அடர்ந்த காப்புக் காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. இந்த திக் திக் சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பூரின் மையப் பகுதியான பூச்சக்காடு மாஸ் பேக்கரி சந்திப்பு அருகே, கஞ்சா போதையில் பத்துப்பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் திருப்பூர் திரும்பும்போது, ரகசியமாக கஞ்சா, குட்கா மற்றும் போதை சாக்லேட்டுகளைக் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பிறருக்கும் விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க திருப்பூர் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில்வழி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பூச்சக்காடு போன்ற உட்புறப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணி போதிய அளவில் இல்லை என சமூக…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய திடீர் தாக்குதலுடன் தொடங்கிய போர், ஜூன் 15 அன்று (அதாவது இன்று) எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின் மூலம் 107 நாட்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக உலகையே உலுக்கிய இந்தப் போரில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளின் தொகுப்பு இதோ. இந்தப் போரில் மிகக் கொடூரமான பாதிப்பைச் சந்தித்தது அப்பாவிப் பொதுமக்கள் தான். போரின் தொடக்கத்திலேயே ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 175 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். ஈரானிய ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின்படி, இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் மற்றும் 1,508 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போரின் கோரத்தாண்டவத்தால் ஈரானுக்குள் மட்டும் சுமார் 39 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக…
போர் பதற்றங்கள் சற்று தணிந்துள்ள நிலையில் ஈரான் கால்பந்து அணி, 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் குரூப் ஜி பிரிவில் தனது முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் எதிர்கொள்கிறது. விசா சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றியிருந்த ஈரான் அணி, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரான் அணி அமெரிக்காவில் உள்ள போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. குரூப் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான், நியூசிலாந்துக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, ஜூன் 21 அன்று பெல்ஜியத்தையும், ஜூன் 26 அன்று எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளது. அணியின் கேப்டன் மெஹ்தி தரேமி மற்றும் பயிற்சியாளர் அமீர் கலினோயி ஆகியோர், அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு,…
ஃபிஃபா உலகக்கோப்பை 2026-ன் குரூப் எஃப் பிரிவில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணி எளிதாக வீழ்த்தியது. இந்த போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ‘ஸ்னிக்கோ’ (Snicko) போன்ற ஒரு அதிநவீன தொழில்நுட்பம், ஸ்வீடன் வீரர் மத்தியாஸ் ஸ்வன்பெர்க்கின் (Mattias Svanberg) கோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகக்கோப்பையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்த மாஸ் வெற்றியின் மூலம் ஸ்வீடன் அணி தனது பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியின் 84-வது நிமிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டது. ஸ்வீடன் வீரர் அயாரி கொடுத்த பாஸை, மாற்று வீரராக களம் புகுந்த மத்தியாஸ் ஸ்வன்பெர்க், துனிசிய தற்காப்பு வீரர்களை ஏமாற்றி கோலாக மாற்றினார். ஆனால், அவர் ‘ஆஃப்சைடு’ பகுதியில் இருந்ததாகக் கூறி நடுவர் அந்த கோலை மறுத்தார். இதையடுத்து, நடுவர்கள் நீண்ட வீடியோ சோதனையை (VAR) மேற்கொண்டனர். அப்போது கிரிக்கெட்டில் பேட்டில் பந்து பட்டதா…
அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்புரையாற்றத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் திடீரென வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டான்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தர் பிச்சை மேடையில் பேசத் தொடங்கியதும், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர். அவர்கள் கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, “பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்போம்” என முழக்கமிட்டனர். https://x.com/RT_com/status/2066351924522184843? ‘பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பு மற்றும் ‘பாகுபாட்டிற்கு தொழில்நுட்பம் இல்லை’ ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற கிளவுட்-கம்ப்யூட்டிங் மற்றும்…
இந்திய ராணுவம் தனது சீருடை விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து மரபுகள் மற்றும் அடையாளங்களை முழுமையாக அகற்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் “ராணுவ சீருடைகள்-2026” (Army Uniforms-2026) என்ற புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கையேடு, மொத்தம் 174 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது குறித்து ராணுவத்தின் அட்ஜூட்டன்ட் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் வி.பி.எஸ். கௌஷிக் கூறுகையில், “பழைய காலனித்துவ கால நடைமுறைகள், ஆபரணங்கள் மற்றும் வார்த்தைகளை படிப்படியாக நீக்கி, தற்கால இந்திய மரபுகளுக்கு ஏற்ப ராணுவ சீருடை விதிகளை மாற்றுவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை இது” என்று தெரிவித்துள்ளார். ராணுவ அதிகாரிகள் முறையான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூடிய கழுத்து உடைய ‘பண்டி’ ஜாக்கெட்டுகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் சோபர் (Sober) நிற சேலைகள் அல்லது குர்தா-சல்வாருடன், கணுக்கால்…
காலங்கள் மாறலாம்… தலைமுறைகள் கடக்கலாம்… ஆனால், ஒரு சில பெயர்கள் மட்டும்தான் சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக செதுக்கப்படும். 2024 யூரோ தொடரோடு சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார். ‘அவர் கதை முடிந்தது’ என்றார்கள் பலர். ஆனால், சிங்கம் எப்போதும் நிரந்தரமாக ஓய்வெடுப்பதில்லை! இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஜெர்மனி ஜெர்சியில் வலம் வந்து, உலகக் கோப்பை வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிறார் மானுவல் நோயர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனின் NRG மைதானத்தில் குராசாவ் அணிக்கு எதிரான போட்டியில் , 40 வயதான நோயர், ஜெர்மனியின் தொடக்க லெவனில் களமிறங்கிய அந்த நிமிடம்… உலகமே எழுந்து நின்று கைதட்டியது. 2010, 2014, 2018, 2022… இப்போது 2026 என முழுமையாக ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் களம் கண்ட உலகின் இரண்டாவது கோல்கீப்பர் என்ற அசாத்திய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் நோயர். மெக்சிகோவின் ஆண்டோனியோ கபர்ஜாலுக்குப் பிறகு, சரியாக 60 ஆண்டுகள் கழித்து…