Close Menu
    What's Hot

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாமியார் வேடத்தில் கைவரிசை!. வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய ராஜஸ்தான் கும்பல்!
    தமிழ்நாடு

    சாமியார் வேடத்தில் கைவரிசை!. வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய ராஜஸ்தான் கும்பல்!

    Editor web3By Editor web3July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai rajasthan gang
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில், சாமியார் வேடமணிந்து தொழிலதிபர்களை மிரட்டியும், அலுவலகங்களில் புகுந்து பணத்தைத் திருடியும் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பலை பொதுமக்களால் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

    கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடமணிந்து உலா வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பல் ஒன்று, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதையும், நிறுவனங்களில் புகுந்து திருடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தது. வெங்கிட்டாபுரம் பகுதியில் இயங்கிவரும் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் சாமியார் போல் நுழைந்த அந்த நபர்கள், அலுவலகத்தில் ஆள் இல்லாத நேரத்தைப் பார்த்து மேஜையில் இருந்த ஐயாயிரம் ரூபாய்  பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

    வேலை முடிந்து அலுவலகத்திற்கு வந்து பார்த்த உரிமையாளர் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது சாமியார் உடையில் வந்தவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்ததும், உடனடியாக அந்த வீடியோ ஆதாரத்தை உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து அனைவரையும் உஷார்படுத்தியதுடன் நீலாம்பூர் காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.

    இதற்கிடையில், அன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் எச்சரிக்கப்பட்ட அதே கார் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு உடனடியாக உஷாரானார். தன் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து சினிமா பாணியில் அந்த காரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் வைத்து அந்தச் சாமியார் கும்பலை அதிரடியாக மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். எலுமிச்சம்பழத்தை காட்டிப் பயமுறுத்தி மோசடி செய்து வந்த இந்தக் கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    godman kovai Rajasthan gang theft WhatsApp message
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடி; இலங்கைக்கு கடத்தப்பட இருந்து ரூ.50 இலட்சம் மதிப்பிலான பீடி இலைகள்…. சரக்கு லாரியுடன் பறிமுதல்!
    Next Article ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    July 25, 2026

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    July 25, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.