Close Menu
    What's Hot

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தூத்துக்குடி; இலங்கைக்கு கடத்தப்பட இருந்து ரூ.50 இலட்சம் மதிப்பிலான பீடி இலைகள்…. சரக்கு லாரியுடன் பறிமுதல்!
    Featured

    தூத்துக்குடி; இலங்கைக்கு கடத்தப்பட இருந்து ரூ.50 இலட்சம் மதிப்பிலான பீடி இலைகள்…. சரக்கு லாரியுடன் பறிமுதல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 BEEDI ILAI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 1260 கிலோ பீடி இலைகளை, சரக்கு லாரியுடன் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட கடற் பகுதி வழியாக இலங்கைக்கு பைபர் படகுமூலம் எந்தவித ஆவணங்களும் இன்றி தொடர்ந்து போதை மருந்துகள், பீடி இலைகள், மஞ்சள்,  மளிகை பொருட்கள், மருந்து மாத்திரைகள், பட்டாசுகள், அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப் ஆகியவை கடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தக் கடத்தலை தடுக்க தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் ஆகியோர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை  தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் கடற்கரைப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு நின்ற சரக்கு லாரியை சோதனை இட்ட போது அதில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட   சுமார் 35 கிலோ எடை கொண்ட 36 மூடை பீடி இலைகள் என மொத்தம் 1260 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்டறிந்த க்யூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல்

    செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Beedi Leaves Seizure Smuggling Case Sri Lanka Smuggling Tamil Nadu Police Tuticorin News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10,000 வரை அபராதம், அதிரடி சஸ்பெண்ட்!. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!
    Next Article சாமியார் வேடத்தில் கைவரிசை!. வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய ராஜஸ்தான் கும்பல்!
    Editor TN Talks

    Related Posts

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    July 25, 2026

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    July 25, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.