Author: Editor web3

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி சதங்களால் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக இருந்தது; தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஜோடி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மைதானத்தை அதிர வைத்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில், தனது 9-வது ஒருநாள் போட்டி சதத்தை 77 பந்துகளில் பதிவு செய்து அசத்தினார். 93 பந்துகளில் 134 ரன்கள் விளாசி விளையாடி வருகிறார்.…

Read More

தமிழகத்தின் மாம்பழ உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திபட்டி, பரலி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவா எனப் பல ரகங்கள் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்த ஆண்டு வழக்கத்தை விட விளைச்சல் அமோகமாக இருந்தும், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் போர் சூழல் காரணமாக, வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாம்பழங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, சந்தையில் கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையான மாம்பழங்கள், இந்த வாரம் படிப்படியாகக் குறைந்து, இன்று ஒரு கிலோ வெறும் 3 ரூபாய் முதல் 3 ரூபாய் 50 காசுகள் என்ற மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.…

Read More

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு, அக்கட்சியில் மிக முக்கியமான பொறுப்பான மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதில் அக்கட்சியின் நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது கட்சியின் தலைமைக்கு ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உழைத்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு பக்கம் முக்கியத்துவம் தேவைப்படும் நிலையில், மறுபக்கம் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலின் போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லாத பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது பதவியில் உள்ளனர். அவர்கள், தற்போதுள்ள அதிகாரத்துடன் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கிடைத்தால் கட்சியை இன்னும் வலுப்படுத்த முடியும்” எனத் தலைமைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த…

Read More

சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல்,  101 நாட்கள் கழித்து இன்று மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆகாஷ் டெலிசன், விசாரணையின் போது பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8-ம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், காவல்துறை தன்னைத் தாக்கியதாக அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், 16 காவல்துறையினரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆகாஷின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை நேரடியாகக் கண்காணித்து வந்தது. இறந்து…

Read More

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை தலைமை தபால் நிலையத்திலிருந்து, தமிழக முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலக முகவரிக்கு ஒரு பார்சலை பெரியார் மணி அனுப்பினார். அந்த பார்சலுக்குள் ஒரு செவித்திறன் கருவி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய பெரியார் மணி, கடந்த சில காலங்களாக மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலைக் குற்றங்கள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் உரிய விளக்கமோ அல்லது பதிலோ அளிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளும், மக்களின் கோரிக்கைகளும் முதல்வரின் காதுகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருவியை ஒரு குறியீடாக அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உடனடியாகக்…

Read More

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய வியூகத்தைக் கையாளத் தயாராகி வருகின்றன. வழக்கமாகப் பெரிய திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுவரும் இடதுசாரிகள், இந்த முறை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் செயல்படும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணியைப் போல, தமிழ்நாட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)), மற்றும் சிபிஐ (எம்.எல்) விடுதலை ஆகிய மூன்று முக்கிய இடதுசாரி அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் பிற கட்சிகளின் கூட்டணியில் இருந்ததால், தங்களின் தனித்துவத்தையும் மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த இடதுசாரிகள் தவறிவிட்டதாகக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களின் உண்மையான அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில், இந்த இடதுசாரி…

Read More

கேன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குக் காரணமான லியோனல் மெஸ்ஸியின் ஆட்டம், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் செய்த தியாகங்களும், பயணங்களும் மெஸ்ஸியின் மீதான அவர்களின் எல்லையற்ற அன்பைப் பறைசாற்றுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண்பதற்காகத் தென் அமெரிக்காவிலிருந்து மூன்று ரசிகர்கள் சுமார் 17,700 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து கேன்சாஸ் சிட்டியை வந்தடைந்தனர். கையில் டிக்கெட் இல்லாவிட்டாலும், மெஸ்ஸியைக் காண வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் அவர்கள் மேற்கொண்ட இந்த பயணம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவர்களின் ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த உள்ளூர் மக்கள், அவர்களுக்குப் போட்டிக்குச் செல்ல வழிவகை செய்துகொடுத்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. டேனியல் ஒடெரோ என்பவர் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிரமான மற்றும் மிகவும்…

Read More

பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர், அண்மைக்காலமாக கடல்சார் வணிகப் பாதைகளில் ஏற்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது வலுவான கருத்துகளைப் பதிவு செய்தார். https://x.com/MEAIndia/status/2066903017266331905? ஓமன் வளைகுடா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், “கடல்சார் வணிகப் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கடல் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் கடமைகளைச் செய்ய அனைத்து நாடுகளும் உறுதி அளிக்க வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மோதல்களுக்கான தீர்வு போர் அல்ல, மாறாக பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மட்டுமே என்று அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். https://x.com/narendramodi/status/2066915355910660353? தற்போதைய…

Read More

தமிழக சட்டமன்றத்தில் நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது. இச்சூழலில், சம்பந்தப்பட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகாமல் பதவியை மட்டும் ராஜினாமா செய்துவிட்டு, உடனே தவெகவில் இணைந்துள்ளனர். குதிரை பேரம் நடந்திருக்க வாய்ப்புள்ள நிலையில், ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தவில்லை,” என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ராஜினாமா…

Read More

கால்பந்து உலகின் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி, 2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியதன் மூலம் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.   கால்பந்து வரலாற்றில் 6 உலகக் கோப்பைகளில் விளையாடிய முதல் வீரர் என்ற தனித்துவமான பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். முன்னதாக, உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் (27) விளையாடிய வீரர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்திருந்த மெஸ்ஸி, தற்போது இந்த 6-வது உலகக் கோப்பை பங்கேற்பின் மூலம் தனது சாதனையை மேலும் உயர்த்தியுள்ளார். மேலும், இந்தத் தொடரின் தொடக்க ஆட்டம் மெஸ்ஸியின் 200-வது சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்கிய மெஸ்ஸி, தற்போது 38 வயதிலும் தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில், மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக 5 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று காங்கோ ஜனநாயகக் குடியரசு…

Read More