வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ, 24 மணி நேரத்தில் 30.3 கோடி (303 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்தச் சாதனை, இதற்கு முந்தைய 30 கோடி பார்வைகள் என்ற சாதனையை முறியடித்துள்ளது; இதன் மூலம், ஒரே நாளில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற இன்ஸ்டாகிராம் ரீல் என்ற பெருமையை பிரதமர் மோடியின் இந்த வீடியோ பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடி இந்த வீடியோவை வெளியிட்டார். வினாத்தாள் கசிவைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்த மத்திய அரசின் நடவடிக்கைகளை விளக்கும் இந்த ரீல்ஸ் வீடியோ, ஒரே இரவில் 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும், 1.5 மில்லியன் கமெண்ட்களையும் பெற்றதுடன், ஒரு மில்லியன் புதிய ஃபாலோயர்களை ஈர்த்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், பிஃபா 24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!உலகக் கோப்பையின் போது ‘BTS’ குழுவினருடனான சந்திப்பை வெளியிட்ட ‘IShowSpeed’ என்பவருக்குச் சொந்தமான 30 கோடி பார்வைகள் என்ற முந்தைய சாதனையை இந்த ரீல் முறியடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்களின் நேர்மறையான கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இதற்கிடையே, வினாத்தாள் கசிவு தொடர்பான புதிய வரைவு மசோதாவை மத்திய அமைச்சரவை பரிசீலிக்கும் என்றும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
