Author: Editor web3
வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனிநபர் வருமான வரி தாக்கல் முதல் TDS மற்றும் இதர வரி தொடர்பான படிவங்களைச் சமர்ப்பிப்பது வரை, இந்த மாதத்தில் பல முக்கிய காலக்கெடு முடிவடைகின்றன. எனவே, அபராதம் மற்றும் வட்டி அபாயத்தைத் தவிர்க்க, இந்தத் தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்வது அவசியம். ஜூலை 7 TDS டெபாசிட் செய்ய கடைசி நாள்: காலாண்டு அடிப்படையில் TDS டெபாசிட் செய்பவர்கள், ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான TDS தொகையை ஜூலை 7-க்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன் தொடர்புடைய அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களையும் அன்றைய தினத்திற்குள் பதிவேற்ற வேண்டும். ஜூலை 15: நிறுவனங்களுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு: நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய குறிப்பிட்ட அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஜூலை 15-க்குள் வழங்க வேண்டும். இது முக்கியமாக நிறுவனங்களுக்குப் பொருந்தும். ஜூலை 30 TDS…
நாளை தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில், யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓப்பனிங் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இருவரில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது. தற்போது வெளியாகும் தகவல்களின்படி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், அயர்லாந்து அணிக்கு எதிராக எந்த பேட்டிங் வரிசையை அணி நிர்வாகம் பயன்படுத்தியதோ, அதே வரிசையையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அணியில் ஏற்கனவே தொடக்க வீரராக நம்பிக்கையைப் பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. சூர்யவன்ஷியின் நிலை என்ன? மறுபுறம், சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம் என்றே கருதப்படுகிறது. அணி…
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, ஜெர்மனியின் பெர்லின் நகரில் விசித்திரமான மற்றும் பயனுள்ள முன்னெடுப்பை அந்நாட்டு போலீசார் கையில் எடுத்துள்ளனர். பொதுவாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீர் பீரங்கிகளை தற்போது வெயிலில் தவிக்கும் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குளிர்விக்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 40°C-க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், பிராண்டன்பர்க் கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த நீர் பீரங்கிகள் மூலம் மெல்லிய நீர்த் தெளிப்பு நடத்தப்படுவது வைரலாகி வருகிறது. https://x.com/Rainmaker1973/status/2071283413911265701? இதய நிபுணர்கள் மற்றும் காலநிலை ஆரோக்கிய நிபுணர்கள், இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். “மனித உடல் வியர்வை மூலம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்கிறது. நீர் பீரங்கி மூலம் தெளிக்கப்படும் நீர், உடலில் பட்டு ஆவியாகும்போது, அது தோலின் வெப்பத்தை குறைத்து, இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது” என்று ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளி நிபுணர் டாக்டர் ரெனீ சலாஸ் விளக்குகிறார். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு…
ஹியூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான (ரவுண்ட் 32) ஜப்பானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 88 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் பாதியிலேயே பின்தங்கியிருந்து கம்பேக் கொடுத்து பிரேசில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை பெற்று பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்ட ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, கேஸமிரோ அடித்த கோல் மூலம் சமநிலை எட்டியது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி 30 வினாடிகளில் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு அற்புதமான கோலை அடித்து பிரேசிலுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் ஜப்பான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 1986-ம் ஆண்டு…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் குடும்பத்தினர் இது ‘ஆணவக்கொலை’ என குற்றம் சாட்டியுள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). கொத்தனார் வேலை செய்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில்…
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்த போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நீடிக்கிறார். உலகக்கோப்பை அணியில் இருந்து ஒரேயொரு மாற்றம் மட்டுமே இந்த அணியில் செய்யப்பட்டுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்டர் யாஸ்திகா பாட்டியா அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜி. கமலினி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகே அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில்…
ஓடும் ரயிலில் தனக்கு ஆபாச சைகை காட்டிய நபரின் செயலை அந்த பெண் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ரூபாலி தீட்சித் என்ற என்ற பயனர், போல்பூர் சந்திப்பு மற்றும் டன்குனி இடையே இயங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், இவரை நோக்கித் தொடர்ந்து ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரூபாலி, உடனடியாகத் தனது மொபைல் போன் மூலம் அந்த நபரின் அநாகரிகச் செயலை வீடியோவாகப் பதிவு செய்தார். அந்த வீடியோவில், “இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறுவது கேட்கிறது. https://x.com/GhumakkadLaali/status/2071614986259202085? பின்னர் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ரூபாலி, “இன்று நான் விவேக் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தபோது, ரயிலின் கதவருகே நின்றிருந்த என்னை நோக்கி…
மத்திய அமைச்சகங்களின் அனைத்து செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில். நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் எளிதாக வாழ்வதற்கான சூழல் மற்றும் தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் தங்களது துறைகளின் செயல்பாடுகள், சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கமளிக்க உள்ளனர். மக்களின் வாழ்க்கையை மேலும் வசதியானதாக மாற்றுவதற்கும், அரசுப் பணிகளில் தேக்கநிலை இல்லாமல் விரைவாக மக்கள் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கும் தேவையான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதாவது, நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாகவும், கடைசி காலாண்டில் 7.8 சதவீதமாகவும் உயர்ந்து வலுவான…
2026 பிஃபா உலகக்கோப்பையின் விறுவிறுப்பான 32-வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பெனால்டி சூட்-அவுட் முறையில் வீழ்த்தி மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் நெதர்லாந்து அணி தனது மிக மோசமான மற்றும் ஆரம்பக்கட்ட தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் கோடி காக்போ (Cody Gakpo) ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். நெதர்லாந்து அணியின் வெற்றி உறுதியாகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) மொராக்கோவின் இசா தியோப் (Issa Diop) தலையால் முட்டி ஒரு சிறப்பான கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேர…
மகளிர் டி20 உலகக்கோப்பை தோல்வி!. ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன்சிக்கு ஆபத்தா?. பயிற்சியாளர் ஓபன் டாக்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிராண்ட்ஸ்லாம் தொடரில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அடைந்த தோல்வியால், இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை, ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி எளிதாக எட்டியது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய சேஸிங் சாதனை ஆகும். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் கவுரின் கேப்டன் பதவி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் விளக்கம் அளித்துள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், “ஹர்மன்பிரீத் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?” எனப் செய்தியாளர்…