Author: Editor web3

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, சீமான் பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். இதனிடையே, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நேற்று முன்தினம் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட போதிலும், சீமான் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், ஊடகங்கள் திட்டமிட்டுத் தங்கள் கட்சியையும், தலைமை ஒருங்கிணைப்பாளரையும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது சீமானின் அடுத்தகட்ட நகர்வு குறித்து நாதக வட்டாரங்கள் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளன. “முதலமைச்சர் விஜய் எப்போது அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிக்கிறாரோ, அதற்குப் பிறகுதான் சீமானும் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தனது…

Read More

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பான முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உதவித் தொகை வழங்குவது குறித்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இதனால், மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வழக்கம்போல் வரவு வகைப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று மே மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும், அந்த திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யவேண்டியுள்ளது. அரசுக்கு அவகாசம் வேண்டும் என முதலமைச்சர் விஜய் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், மே மாசத்துக்கான கலைஞர்…

Read More

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக தொடரும் புகாரையடுத்து, கூடுதல் விலைக்கு விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.  இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை…

Read More

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் (V.D. Satheesan) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதில் நிலவி வந்த நீண்ட நேர இழுபறிக்கு, காங்கிரஸ் தேசியத் தலைமையின் இந்த அறிவிப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக, புதிய முதலமைச்சரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த தலைவர்களிடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக, கட்சியின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, டெல்லி மேலிடம் வி.டி.சதீசனை முதல்வராக அறிவித்தது.…

Read More

தமிழகத்தின் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்து, உயர்த்தப்பட்ட தொகையை வழங்குவதற்கு அரசுக்குச் சில கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதுவரை தற்போதைய நடைமுறைப்படி மே மாதத்திற்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ரூ.1,000 விரைவில் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, “தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட…

Read More

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணிகளிடையே ஏற்பட்டுள்ள கடும் மோதல் போக்கு காரணமாக, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகளிடையே இரண்டு பிரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த அசம்பாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம்,அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் கோயிலாக மதிக்கிறோம்; அங்கு கலகம் செய்யப்போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. சட்டப்படி நாங்கள் தான் உண்மையான தொண்டர்கள் என்று நிரூபித்த பிறகுதான் அங்கு கால் வைப்போம். அதுவரை அங்கு செல்லமாட்டோம். ஒருவேளை அங்கு சென்றால், அது எனது உயிர் போகும் தருணமாகத்தான் இருக்கும்” என உருக்கமாகத் தெரிவித்தார். ஆளுநரைச் சந்திக்கும் இபிஎஸ்: இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர்…

Read More

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்களின் கீழ், மே மாதத்திற்கான உதவித்தொகை ரூ.1,000 தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் முக்கியத் திட்டங்கள் தங்குதடையின்றித் தொடரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், இந்த நிதி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள், ஆட்சி மாற்றத்தைக் கடந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என உறுதியளித்திருந்தார். அதன்படி, உயர்கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய ரூ.1,000 உதவித்தொகை உரிய நேரத்தில் மாணவர்களின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தின் 1.31 கோடி இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மே மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத்தொகை’ நாளை (மே 15) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தகவல்…

Read More

தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் துறைவாரியான திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட அரசின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து வெளிப்படையான “வெள்ளை அறிக்கை” வெளியிடப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், இன்றைய கூட்டத்தில் அந்த அறிக்கை தயாரிப்புப் பணிகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கியத் தரவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, துறைவாரியாகத்…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் வரலாறு காணாத அளவில் சவரனுக்கு ரூ.8,560 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த தங்கம், மாலையில் ஓரளவுக்குக் குறைந்து ஆறுதல் அளித்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,20,400 க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம்,…

Read More

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், செப்டம்பர் 30, 2026 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை (Raw sugar), வெள்ளை சர்க்கரை  மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என மூன்று வகைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://x.com/ANI/status/2054736874582028706? உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதைத் தடுக்கவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான சி.எக்ஸ்.எல் (CXL) மற்றும் டி.ஆர்.க்யூ (TRQ) ஒதுக்கீட்டின் கீழான ஏற்றுமதிக்குத் தடை இல்லை என்றும் மேலும், மற்ற நாடுகளின்…

Read More