Author: Editor web3

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. ‘டெல்டா எலக்ட்ரானிக்ஸ்’ உள்ளிட்ட மூன்று முக்கிய தைவான் நிறுவனங்களின் உயர் மட்டக் குழுவினர் இன்று தென் தமிழகத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். மின்னணுவியல், செமிகண்டக்டர், அதிநவீன தானியங்குமயமாக்கல் மற்றும் தளவாடங்கள் ஆகிய துறைகளில் சுமார் 80,000 கோடி ரூபாய் வரையிலான மெகா முதலீட்டுத் திட்டங்கள் இந்த நிறுவனங்களின் பரிசீலனையில் உள்ளன. இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், தென் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40,000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, தைவான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். தொழிற்சாலைகளுக்குத்…

Read More

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே போலியோ சொட்டு மருந்து உட்கொண்ட நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நல்லாத்தூர் கொளுத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (27), ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜம். இந்தத் தம்பதியருக்கு ஹரிஹரன் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். நேற்று நல்லாத்தூர் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிற்குத் தனது குழந்தையை ராஜம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். ஆனால், வழக்கமான நேரத்தைத் தாண்டியும் குழந்தை நீண்ட நேரமாகத் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாகத் தூக்கணாம்பாக்கம் அரசு…

Read More

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பெண் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கடை வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லியோன் கிளாஸ்டன் என்பவரின் மனைவி கார்லின் சுஷ்மா, தனது காரில் புதுக்கடை சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு வளைவுப் பகுதியில் கார் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜேஷ்குமார் என்பவர் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது, ராஜேஷ்குமார் பல அடி உயரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரில் போய் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் கழுத்து எலும்புகள் முறிந்தன. அதே நேரத்தில், மோதிய வேகத்தில் காரும் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ரத்த…

Read More

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் கழிவுகள், மக்கள் சக்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை இந்த குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகளில் பிடித்த தீ கடகடவென மற்ற இடங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் பல நூறு அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த அடர்ந்த புகையினால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதுடன், உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் அச்சமும் உருவாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கடந்த ஒரு…

Read More

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆப் 32’  சுற்றில் தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, கனடா அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக ‘ரவுண்ட் ஆப் 16’ (அரையிறுதிக்கு முந்தைய சுற்று) தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஜூன் 29 இன்று லாஸ் ஏஞ்சலஸ் மைதானத்தில் நடந்த இந்த வரலாற்று ஆட்டத்தில் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ (Stephen Eustaquio) வெற்றிக்கான கோலை அடித்திருந்தாலும், ஒட்டுமொத்த கால்பந்து உலகின் பார்வையும் கேப்டன் அல்போன்சோ டேவிஸ் (Alphonso Davies) பக்கமே திரும்பியுள்ளது. 25 வயதே ஆன அல்போன்சோ டேவிஸின் வாழ்க்கை, உலகக் கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சிமிகு கதையாக மாறியுள்ளது. கனடா அணியை வரலாற்றுப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள அல்போன்சோ டேவிஸின் பின்னணி அத்தனை சாதாரணமானது அல்ல. இரண்டாவது லைபீரிய உள்நாட்டுப் போரின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க அவரது பெற்றோர் கானா நாட்டில் உள்ள ‘புடுபுராம்’ (Buduburam) அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.…

Read More

2026 மெக்சிகோ பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றோடு தென் கொரிய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெரும் அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை புயல் வீசத் தொடங்கியுள்ளது. அணியின் மோசமான செயல்பாடு குறித்து அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ (Hong Myung-bo) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் ஹாங் மியுங்-போ-வின் இரண்டாவது பயிற்சியாளர் காலமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னதாக 2014 பிரேசில் உலகக்கோப்பையிலும் இவரது பயிற்சியின் கீழ் களம் கண்ட தென் கொரியா, லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த ‘குரூப் ஏ’ பிரிவில் தென் கொரியா எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு எதிரான…

Read More

ஐரோப்பிய கண்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடையின் துவக்கத்திலேயே மிகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த ஜூன் 21 முதல் நிலவி வரும் இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, ஐரோப்பா முழுவதும் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவாக ஜெர்மனியில் வெப்பநிலை 41.7°C ஆகப் பதிவாகியுள்ளது, இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேராபத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “வெப்ப அழுத்தம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு சைலண்ட் கில்லர். இது முதியவர்கள், குழந்தைகள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. உலகளாவிய சராசரியை விட ஐரோப்பிய கண்டம் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது” என்று எச்சரித்துள்ளார். புயல் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைப் போலன்றி, வெப்ப அலைகள்…

Read More

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவ-மாணவிகள் tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தீப்தி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்பு 355 சர்வதேச விக்கெட்டுகளுடன் இந்தியாவின் பழம்பெரும் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த தீப்தி, தற்போது 356 விக்கெட்டுகளுடன் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளாக விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறி வந்த தீப்திக்கு, இந்த விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக…

Read More

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தரைவழி  மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த திட்டமிடப்பட்ட  தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சனிக்கிழமை இரவு, பாகிஸ்தானின் முக்கிய துறைமுக நகரான கராச்சியில் உள்ள “பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ்” எனப்படும் துணை ராணுவப் படையினரின் பிராந்திய தலைமையகத்தை ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் காயமடைந்த நிலையில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். பிடிபட்ட நபர் ஆப்கானிஸ்தான் நாட்டைச்…

Read More