Author: Editor TN Talks
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வலசை- மணக்குளம் கிராமங்களுக்கு இடையேஉள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாக சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோயில் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவர் எடுக்கத் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன. இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. 2018-ல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் வெளிவந்த பகுதியில் ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், ஏழு கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன. கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலான பெருங்கற்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை…
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் இரண்டு கேள்விகள் எழுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என கனிமொழி எம்பி வினா எழுப்பியுள்ளார்.
தோல்வியடைந்த மனநிலையில் இருக்கும் ஆ.ராசா, திமுகவை பாஜக பாதையில் இழுத்துச் செல்வதாக அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம. ரமேஷ் கர்ணா, வாலாஜாபேட்டையில் உள்ள சுங்க சாவடியில் சிறப்பான வரவேற்பு அளித்தார் இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார் அப்போது, தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதனை ரத்து செய்து இருப்பதை மிகவும் வரவேற்பதாகவும் மேலும் திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களுக்காக கொடுத்த அறிக்கையில் காரணமாகவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா திருமாவளவனுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து இருந்ததாக தெரிவித்தார். திருமாவளவன் கொடுத்த ஆக்கபூர்வமான அறிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு இருப்பதால் தாவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா விமர்சனத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த…
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, அங்குள்ள ஆடுகள நிலை மற்றும் சூழலுக்கு விரைவாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாததே முக்கிய காரணம் என்று இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்தார். தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் நெருக்கடியான அட்டவணையில், குறைந்த பயிற்சி நேரத்திலேயே மைதான சூழலுக்கு விரைவாக ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. டி20 உலக சாம்பியனான இந்தியாவை எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் முதன்முறையாக அயர்லாந்து வென்றது இதுவே முதல் முறை. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சர்மா, “ஒரு அணியாக நாம் எவ்வளவு விரைவாக ஆடுகள நிலைக்கு ஏற்ப மாறுகிறோம் என்பதுதான் முக்கியம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறும்போது, கிடைக்கும் குறுகிய பயிற்சி நேரத்திலேயே சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப…
FIH ப்ரோ லீக் தொடரின் லண்டன் சுற்றில் நடைபெற்ற ரிவர்ஸ் ஃபிக்சர் ஆட்டத்தில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. லீ வேலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் காலிறுதியில் பின்தங்கியிருந்த இந்திய அணி, பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த 7 கோல்களை அடித்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங் (20வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (26′), ஹர்திக் சிங் (34′), ஜுக்ராஜ் சிங் (35′), அபிஷேக் (41′), ராஜ்குமார் பால் (44′) மற்றும் தில்ப்ரீத் சிங் (54′) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நடுகளத்தில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கோலும் அடித்த ஹர்திக் சிங், ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார். ஆட்டம் தொடங்கிய முதல் 90 விநாடிகளிலேயே இந்தியா முதல் பெனால்டி கார்னரைப் பெற்றது. இரு…
பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் புறப்பட்டு சென்றார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டின் 50-ஆம் ஆண்டு தேசிய தினம் வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு படைப் பிரிவினரும் பங்கேற்கின்றனர். பிரதமர் தனது இந்தப் பயணத்தில் செஷல்ஸ் அதிபர் பேட்ரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடலையும் மேற்கொள்கிறார். வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடர்புகளில் இந்தியா மற்றும் செஷல்ஸ் நீண்டகால கூட்டுறவு கொண்டுள்ளன. பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று…
உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்த முதல் ஆப்பிரிக்க அணி என்கிற வரலாற்றை படைத்துள்ளது செனகல் அணி. வெள்ளிக்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற குரூப் கட்ட ஆட்டத்தில், ஈராக் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் செனகல் அபாரமாக வீழ்த்தியது. இந்த தோல்வியால் ஈராக் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முற்றிலும் முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் வெற்றி அவசியமான ‘வாழ்வா-சாவா’ போட்டியாக இது அமைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் இஸ்மைலா சார் ஒரு கோல் அடித்ததுடன், ஒரு கோலுக்கான அசிஸ்ட்டையும் வழங்கினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கோலும், அசிஸ்ட்டும் பதிவு செய்த முதல் செனகல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் 4 கோல்கள் அடித்ததன் மூலம் செனகலின் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் உயர்ந்துள்ளார். இந்தப் போட்டியில் இஸ்மைலா சார், பாபே குயே மற்றும் இலிமான் ந்தியாயே…
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ (BCM) சான்றிதழும், அதன்படியான இடஒதுக்கீடு பலன்களும் வழங்க வழிவகை செய்து, கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2024-ஆம் ஆண்டு அரசாணை எண் 31-ஐ, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். மதமாற்றத்தின் மூலம் ஒருவருடைய ஆன்மீக நம்பிக்கை மாறலாமே தவிர, அவர் பிறப்பால் எதிர்கொண்ட சமூக மற்றும் கல்வி ரீதியிலான பின்தங்கிய நிலை ஒரே நாளில் மாறிவிடுவதில்லை. இந்த எதார்த்தமான சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் விரிவான பரிந்துரைகளின் பேரிலுமே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இடஒதுக்கீட்டின் அடிப்படை…
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் L பிரிவில் சனிக்கிழமை நடைபெறும் பனாமா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில், காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் ரீஸ் ஜேம்ஸ் விளையாடமாட்டார் என தலைமை பயிற்சியாளர் தாமஸ் டுச்செல் உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம் புகாயோ சாகா, டெக்லான் ரைஸ் மற்றும் எலியட் ஆண்டர்சன் ஆகியோர் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரீஸ் ஜேம்ஸ் தசைப்பிடிப்பு (ஹாம்ஸ்ட்ரிங்) காயம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அணியுடன் பயணம் செய்யவில்லை. இருப்பினும், தொடரின் அடுத்த கட்ட போட்டிகளுக்குள் அவர் மீண்டும் களமிறங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாக டுச்செல் கூறினார். குரூப் L பிரிவில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. குரோஷியா 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், புள்ளிகள் எதுவும் பெறாத பனாமா கடைசி இடத்திலும்…
திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுமா இல்லை கூட்டணியில் தொடருமா என்பது குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தவெகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன. மதிமுகவின் அண்மைகால நடவடிக்கைகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் எனக் கூறப்படுகிறதும். இது தொடர்பாக ஜூன் 27ல் (இன்று) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி வந்தார். இந்த நிலையில் ஜூன் 26-இல், ம.தி.மு.க., உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், திமுக கூட்டணியில்…