Author: Editor TN Talks
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காக்கே மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது. இந்த நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 17-வது சட்டசபைக்கூட்டம் இன்று கூடுகிறது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து மே 10ஆம் தேதி ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து மே 11ஆம் தேதி புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தமிழக சட்டப்பேரையில் நடைபெறும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார். இன்று காலையில் 9.30 மணி அளவில் தமிழக சட்டசபை கூடிய புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே 12 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து சபாநாயகர்…
நடைபெற்று முடிந்த தமிழக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக தான் போட்டியிட்ட 169 இடங்களில் 47 தொகுதிகளையே கைப்பற்றி மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சியாகக் கூட தொடரமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்டதால் அதிமுக, தவெகவுக்கு ஆதரவளித்து ஆட்சியில் பங்கு வகிக்கலாம் என சி.வி.சண்முகமும், ஆதரவு மட்டும் அளிக்கலாம் என தங்கமணியும், ஆதரவு அளிக்கக்கூடாது என ஓ.எஸ்.மணியனும் கூறியதாக தகவல் வெளியானது. தவெகவுக்கு ஆதரவளித்தால் வரும்காலத்தில் அதிமுக இல்லாமல் பொய்விடும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் அடைக்கலமானார். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரிக்கு சென்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை திரும்பி எடப்பாடி பழனிசாமி…
ஆற்றல் மிகு எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளதில், தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் – முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை வழங்கியிருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார். கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி,சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் – சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம் எனவும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம் எனவும் கூறியுள்ளார். எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும், மக்களுக்கும் – அரசுக்கும் இடையிலான ஊடகமாக இருப்போம் எனவும் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தன் மேல நம்பிக்கை வைத்து மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் எனவும் கடுமையாக உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லட்சுமிபிரியாவை தனிச் செயலாளராக தேர்ந்தெடுத்திருப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது. திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன என…
புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இடம்பெறாதது கவலையளிப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் தெரிவித்துள்ள முகமது முபாரக், பதவியேற்பு விழாவின்போது, இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்கிற உறுதியை அளித்துள்ளதை வரவேற்றுள்ளார். இந்த உறுதியுடன், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநில உரிமையைக் காக்கும் அரசாகவும் செயல்பவும் வாழ்த்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கப் பட்டிருப்பது நீண்டகால மரபை மீறிய செயலாகும் எனவும் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசு நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை விழாவின் தொடக்கத்திலேயே பாடிக் கௌரவிப்பதே முறையானது. இந்த முன்னுரிமை மாற்றமானது தமிழ்ப்பற்றுடைய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் , உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா, காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை மேற்கொள்ளுதல் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என- முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே தவெக அரசையும் பார்க்கவேண்டியுள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாற்றியுள்ளார். சட்டமன்றத்தேர்தலுக்குமுன்பாகவெளியிட்டதேர்தல்அறிக்கையில்தகுதியுள்ளவீடுகளுக்குஒவ்வொருமாதமும் 200 யூனிட்மின்சாரம்கட்டணமின்றிவழங்கப்படும்எனவாக்குறுதியளித்ததமிழகவெற்றிக்கழகம், ஆட்சிக்குவந்தமுதல்நாளேஇரண்டுமாதங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்விலையில்லாமல்வழங்கப்படும்எனஅறிவித்திருப்பது முன்பின்முரணாகஉள்ளது எனவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். திமுகஅரசின்நீட்சியாகவேஇந்தஅரசையும்பார்க்கவேண்டியுள்ளதாக குற்றம்சாற்றியுள்ள டிடிவி தினகரன், எனவே, இருமாதங்களுக்கு 500 யூனிட்மின்சாரம்வரைபயன்படுத்தும்குடும்பங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்கட்டணமில்லாமல்வழங்கப்படும்என்றஉத்தரவைதிருத்தி, மாதத்திற்கு 200 யூனிட்கட்டணமில்லாமின்சாரம்என்றதேர்தல்வாக்குறுதியைநிறைவேற்றிடமுன்வரவேண்டும்எனதவெகஅரசைவலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஆகியோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தியின் பதிவுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார். அதில், நான் முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி, மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தெரிவித்த நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். நமது மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மத்திய அரசின் செயல்மிகு ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜி தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதற்கு தன் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் இந்தப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், உங்கள் ஆதரவும் அன்பான வாழ்த்துக்களும் தனக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறி முதலமைச்சர் விஜய் போட்டுள்ள முதல் கையெழுத்தே மோசடி என சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் தவெக ஆட்சி அமைத்தால் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது தவெக ஆட்சி அமைத்து ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரைமின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்னும் அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். இந்த நிலையில் 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையும் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும். விஜய் முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து…