Author: Editor TN Talks

​தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பேருந்து நிலையம் முன்பு திரண்ட தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கட்சியினர் இனிப்புகளை வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர். ​ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகர மன்றம் தாஜ்புரா பெரியார் நகர், சத்யா நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் விஜய் முதலமைச்சரானதை பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்,…

Read More

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னரும், அதிமுகவில் நிலவும் சலசலப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரானதா என்னும் வினாவை எழுப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கான 108 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற விஜய் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விஜய்க்கு ஆதரவளிக்கலாம் எனவும் கூடாது எனவும், முரண்பட்ட வாக்குவாதங்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல் சி.வி.சண்முகம், எஸ்.பிவேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு முரண் நிற்பதாக தகவல்கள் பரவியது. இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு மே 9ஆம் தேதி சென்னைக்கு அழைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின்னர் சி.வி.சண்முகத்தின் வீட்டிலும் 36 எம்.எல்.ஏக்கள் கூடிப் பேசினர். இதே நாளில்தான், தனக்கு தேவையான 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக…

Read More

திருச்சியில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கநாதர் கோயிலில், சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும், காலை, மாலை என இருவேளையில், பல்வேறு வாகங்களில் எழுந்தருளும் நம்பெருமாள், எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் 4-ம் நாளான நேற்று காலை இரட்டை பிரபை வாகன சேவை நடைபெற்றது. மாலையில் கருட வாகன சேவை நடைபெற்றது. வீதியில் உலாவந்த பெருமாளை பக்தர்கள் வழிநெடுங்கிலும் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து 5-ம் நாளான இன்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு மண்டபத்தை வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்திருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்…

Read More

தமிழ்நாடு 10 இலட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாக  முதலமைச்சர் விஜய் கூறியதற்கு மக்களை திசை திருப்பாதீர்கள் என முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  நடிகர் விஜய்க்கு  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்பதாக  தெரிவித்துள்ளார். அதே நேரம், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம் எனக் கூறியுள்ளார். ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு என விஜய் குற்றம்சாட்டியதைக் குறிப்பிட்டு, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருப்பதாகவும்,  தமிழ்நாடு…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மேடையில் விஜய்யை சந்தித்ததும் இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். விஜய் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ராகுல்காந்திக்கு வணக்கம் வைத்தார். இதன்பின்னர் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தவெகவினர், பதவியேற்குப் பின்னர் விஜய்யை சந்தித்து தங்கள் கைகளைப் பற்றி நன்றியைப் பகிர்ந்து கொண்டனர். விஜய் அருகிலேயே நின்று கொண்டு இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, ராகுல்காந்திக்கு பெயரளவுக்கு கூட எவரும் கைகுலுக்கவில்லை. செங்கோட்டையன் பதவியேற்றபோது விஜய் எழுந்து நின்றார். இதனால் உடனிருந்த ராகுல் காந்தி உள்ளிட்டோரும் உடன் எழுந்து நின்றனர். பதவியேற்புக்குப் பின்னர், விஜய்யைத் தழுவிய சீனியரான செங்கோட்டையனும் கூட ராகுலைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தார். பின்னர் பேசிய விஜய், நிறைவில் நன்றி தெரிவிக்கும்போது ராகுல்காந்தி பெயரை உச்சரித்தார். அதனை அருகில் இருந்த புஸ்சி ஆனந்த், ராகுல்காந்திக்கு தெரிவித்தபோது லேசாக…

Read More

காங்கிரசை சேர்க்காமல் தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் தவெக ஆட்சி அமைத்திருக்கலாம் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் மே 6ஆம் தேதி சந்தித்து உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்குமாறு ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.  காங்கிரஸ் தரப்பில் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அளிக்கப்பட்டதைத் தொடர்து மே 7ஆம் தேதி  காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்தார். இதன் பிறகு, ஆளுநர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் அரசை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை கட்சி பெறவில்லை என்று விஜய்யிடம் ஆளுநர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,…

Read More

கோடை மழையின் காரணமாக உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாப் பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில்  நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, மேல் குருமலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும்  கோடை மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் தண்ணீர்பீறிட்டு பாய்கிறது. இதனால் இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்குச் செல்லவும் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் சமுத்திரக் கனி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல தடைகளைத் தாண்டி இப்போது ஆட்சி அமைக்க இருக்கும் என்னுடைய அன்பு சகோதரர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு,  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சகோதரா, இன்னும் நிறைய தடைகள் வரும். இதை எல்லாவற்றையும் நீங்கள் உடைக்கணும்னு நான் இறைவனைப் பிரார்த்தனைப் பண்ணிக்கிறேன். பெருசா ஜெயிப்போம். வெல்வோம் என விஜய்க்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Read More

பெரும்பான்மைக்குத் தேவையான 2 இடங்களைப் பெறும் நோக்கில் விசிக ஆதரவு கோரி, திருமாவளவனை சந்திக்க விஜய் செல்ல உள்ளதாக பரபரப்பு நிலவுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்கத் தேவையான 118 பெரும்பான்மை பெறுவதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரினார். இதில் முதல் நபராக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை, வழங்கியது.  இதையடுத்து சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களின் தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் 117 இடங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் 2 எண்ணிக்கை பெறுவதற்காக விசிகவின் தயவையும் தவெக நாடியுள்ளது. கடந்த 2, 3 நாட்களாக முறையாக எவ்விதப் பதிலையும் தெரிவிக்காமல் விச்க  இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் அறித்திருந்தார். இதையடுத்து அவரை விஜய் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால்…

Read More

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த  5 நாட்களுக்கு மழை தீவிரமடையும். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வானிலை தீவிரமடையும். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக பரவலாகும். இன்றும், நாளையும் காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை தீவிரமடையும் எனவும் கூறியுள்ளார். கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் எங்கும் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் செல்லவில்லை.. நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 36.6 டிகிரி  செல்சிய வெப்பம் பதிவாகியுள்ளதாகவும்,  அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் தணிந்தே காணப்படும் எனவும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Read More