Author: Editor TN Talks

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும், அழுகுனிப் பாப்பாவாக அவலநிலைக்கு செல்வதாகவும் தவெக ஐடி விங்க் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;- “நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ என பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார். பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக…

Read More

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின்  எடிட்டர் பிரதீப் ராகவ் என்பது திரைத்துறையில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு தர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் தலைப்பு அறிமுக விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், தர்மன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது கோலிவுட்டில் ஜெர்க்கை ஏற்படுத்தி இருக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகராக இருந்தபோது நடித்த ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், முழுப் படமும் இணையதளங்களில் வெளியானது. இதற்கு காரணம் இந்தப் படத்தின் எடிட்டராக இருந்த பிரதீப் ராகவின் உதவியாளர்தான் எனக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு, பிரதீப்ராகவும் பொறுப்பு எனக் கருதி, திரைப்படங்களில் எடிட்டராக அவர் பணிபுரிய தடைவிதிக்கப்பட்டதோடு, அவர்  உறுப்பினராக இருக்கும் தென்னிந்திய சினிமா…

Read More

அதிகார மமதையில் மூழ்கியுள்ள மத்திய அரசு, தங்களின் உரிமைகள், நியாயமான தேர்வுகள் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கோரி குரல் எழுப்பும் மாணவர்களை “தீவிரவாதிகள்” என அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், , கேள்வித்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கும், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணமான ஆட்சியிலேயே, இன்று தங்கள் உரிமைக்காக போராடும் மாணவர்களை தீவிரவாதிகள் என சித்தரிக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், விவசாயிகளை ‘தொழில்முறை போராட்டக்காரர்கள்’ என்றும், அரசைக் கேள்வி கேட்பவர்களை ‘தேசவிரோதிகள்’ என்றும் அழைத்தவர்கள், தற்போது இளைஞர்களையே தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். “அரசை கேள்வி கேட்டால் தேசத் துரோகி என கூறுவது தான் இவர்களின் அரசியல். மத்திய கல்வி…

Read More

இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலை குறித்து திமுகவின் முரசொலி இதழ் மவுனம் காப்பதன் மூலம் காங்கிரஸ் தவறுகளை திமுக மறைக்கிறதா என நயினார் நாகேந்திரன் ஐயம் எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜனநாயகத்தின் பேரிடராக விளங்கிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட இந்நாளில், வீர முழக்கமிட்டு எழ வேண்டிய ‘முரசொலி’ நாளேடு, அதுகுறித்த செய்திகளோ அல்லது எந்தவொரு சிறப்புக் கட்டுரையோ இன்றி மௌனம் காப்பது வியப்பளிப்பதாகக் கூறியுள்ளார். நாட்டின் இருண்ட கால வரலாற்றையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் பேச மறுத்து, முரசொலி நாளிதழ் இன்று மௌனமாக இருப்பது ஏன்? மக்களாட்சியின் மாண்பைக் காக்கத் தங்களை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுகளை திமுக இவ்வளவு எளிதாகக் கடந்து போவது முறையா? கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து சென்ற பின்னரும், இதுகுறித்து திமுக இன்னும் மௌனம் காப்பது ஏன்? வரலாற்றின் கரும் பக்கங்களாக விளங்கும் காங்கிரஸின் தவறுகளை மறைக்க திமுக துணை…

Read More

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சென்னையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.   இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு,  எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க…

Read More

திருச்சி அருகே சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம் செய்த தவெக நிர்வாகியை போலீசார் போக்சோ வழக்கில்  கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் திருச்சி மாவட்ட,  தமிழக வெற்றிக் கழகத்தின் அந்தநல்லூர் ஒன்றிய இணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது மனைவியின் உறவினரான 17வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக கட்டாய திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தரப்பில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாவில் இருந்த கார்த்திக்கை, கைது செய்தனர். பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பி கிராமத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.கே.வி. கல்விக் குழுமத்தின் 120வது ஆண்டு விழா மற்றும் ‘Daughters of Kanchi – The SSKV Story’(பெண்ணின் பெருந்தக்க யாவுள) என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் திமுக அரசின் நிதி நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக தவெக அரசு கூறியுள்ளதை வரவேற்பதாகவும், கடந்த ஆட்சியிலும் மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதியை ஒதுக்கியதாகவும் கூறினார். சட்டப்பேரவையில் அப்பாவை காணோம் என முதலமைச்சர் விஜய் கூறிய குட்டிக்கதை தொடர்பான கேள்விக்கு “அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்? எதிர்க்கட்சியும் பேசட்டும், ஆளும் கட்சியும் பதில் சொல்லட்டும்; அதில் தவறு இல்லை” என்றார். மேலும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய…

Read More

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் தொடங்க லஞ்சம் வாங்கப்பட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி வரும் நிலையில், அது உண்மைதான் என்பதுபோல், திமுக ஆட்சியில் தனது பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள் என ZOHO இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தான் வெளியிட்ட பள்ளி தொடர்பான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தவெக அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டவை என்றும் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருவதாக தொழில்நுட்பத் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த அவர், கலைவாணி கல்வி மையத்தின் கீழ் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச NIOS பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறினார். தேனி பள்ளி முதலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்டதாகவும், அவர் நடத்திய சிபிஎஸ்இ பள்ளிக்கு மாநில அரசின் NOC பெற அதிகளவு பணம் கோரப்பட்டதால் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். பின்னர்…

Read More

மறைந்த  முன்னாள் இந்திய பிரதமர் வி.பி சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் என்.ஆனந்த்,  ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் , மரிய வில்சன், குமார் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள வி.பி.சிங்கின் திரு உருவ சிலை மற்றும் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமூக நீதிக்காக போராடியவர் வி.பி.சிங். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது கூட மக்களை முன்னிறுத்திய அவர்,  தனது வாழ்நாள் முழுவதும் தலித் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்காக உழைத்தவர்.  காவேரி பிரச்சனைக்காக காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டுடன் அன்பும் உறவும் நீடித்திருந்தது. அவர் ஆட்சியில் இருந்த  11 மாதத்தில் 30 வருடங்களின் சாதனையை நிகழ்த்தியவர் எனப் புகழாரம் சூட்டினார். சமூக நீதி கணக்கெடுப்பை மு.க.ஸ்டாலின் அரசு செய்யவில்லை. ஆனால், வி.பி.சிங் வழியில்  முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் அரசு…

Read More

திருவாரூரில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் ஆ.ராசா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய ஆ.ராசா, தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை விமர்சித்தார். “ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் ராஜாஜி போன்ற தலைசிறந்த அரசியல் ஆளுமைகள் இருந்த சட்டமன்றத்தில், இன்று நாதாரி முதல்வரின் ஆட்சி நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலினைச் சுட்டிக்காட்டி, ஒரு தேர்தலை வைத்து எடைபோடுவீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும், திமுக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். திமுக கூட்டணியில் நீங்கள் இல்லை என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளது. கூட்டணியே…

Read More