Author: Editor TN Talks
தமிழ்நாடு அரசு இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற மே 10-ஆம் தேதி முதல், காவல் துறையில் அதிரடி பணியிடமாற்றங்களும், பதவி மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த மே மாதம் 20ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரிகளான வெங்கடராமன், பவானீஸ்வரி, அவினாஷ் குமார், பிரவீன் குமார் அபிநபு உள்ளிட்ட 15 பேரும், மே 25- ஆம் தேதி அருண் ஐபிஎஸ் உள்பட 3 காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி 7 ஐபிஎஸ் அதிகாரிகள், ஜூன் 11ஆம் தேதி சென்னையில் மட்டும் ஒரே நாளில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஜூன் 15ஆம் நாள் அதிக பட்சமாக 56 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு உள்ளாகினர். ஜூன்…
சட்டப்பேரவையில் இல்லாத ஒருவர் குறித்து கிண்டலும் கேலியுமாகப் பேசிய முதலமைச்சர் மீது சபாநாயகர் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும். இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மொழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைத்தளப்பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை…
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டுவதாகக் கூறிச் சென்று தவெகவினர் ரீல்ஸ் எடுப்பது பரபரப்பாகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புதிய உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 196-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்வினி கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசியதாவது;- சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் மக்கள் பிரதிநிதிகள், அதாவது கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்ல கூடாது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். பள்ளி மற்றும் வகுப்பறைகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்றால் தலைமை ஆசிரியரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதை தவிர்த்து கட்சி நபர்கள் நேரடியாக வகுப்பறைக்கு சென்று முதலமைச்சர் புகைப்படத்தை மாட்டக்கூடாது பள்ளி வளாகம் என்பது கல்வி கற்கும் இடம். எனவே அங்கு தவறுதலான கற்பிதங்களை கற்பிக்கக்கூடாது. அவர்களுக்கு நாம் அனைவரும்தான் பொறுப்பு. தலைமை ஆசிரியர்…
அமோனியா வாயுக் கசிவு நிகழ்வில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 5 பேரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள கன்னிகைப் பேர், மஞ்சங்காரனை பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21ஆம் தேதி அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டது. வழக்கமான தொழிற்சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் வாயுவால் பாதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே அவசர மருத்துவக் குழுக்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கவும்…
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருந்தாலும் எதிர்க்கட்சித்தலைவர் முதல் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப்படத் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சர்ச்சைக்கு நடிகர் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் பட அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்று திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் படம் குறித்து கேள்வி எழுப்பினர். நல்ல கமர்ஷியல் படம், பொழுது போக்கு படம் என உற்சாகமாத தெரிவித்தவரிடம், முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தீர்களான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான் பேசியாச்சி…
கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யும், கவியரசுக்கு பிறந்தநாள் புகழ் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள். மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன எனவும், தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும்…
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் பெயர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்துக்கு தர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், பேச அழைக்கிறோம்னு சொன்னாலே தயக்கமா இருக்கு; ஏன்னா நான் பேசுனாலே ப்ராப்ளம்; ஒண்ணு எனக்கு ப்ராப்ளம், இல்ல மத்தவங்களுக்கு ப்ராப்ளம். ஏதாவது பேசிட்டே இருப்பாங்க; ஏதாவது கிளப்பிக்கிட்டே இருப்பாங்க. நான் சும்மா இருந்தாலும், பேசினாலும் ஏதாவது கலாட்டா செஞ்சிக்கிட்டே இருப்பாங்க என நடப்புச் சூழலை சுட்டிக்காட்டினார். ரொம்பநாள் கழிச்சி கத்துக்கிட்டேன்…. நம்மளப் பிடிக்காதவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும் என்ன பண்ணாலும் பிடிக்காது. நம்மளப் பிடிச்சவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும், எது பண்ணினாலும் பிடிக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். அதனால ஜாக்கிரதையா இருக்கணும் தன அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சி.பி.சக்கரவர்த்தி தொடர்ந்து இப்போ அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்துக்குள் வந்தாரு என…
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் இரண்டாவது கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார். பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன: சிறந்த மற்றும் மேன்மையான சேவைக்காக பத்ம விபூஷன், உயர்ந்த தரம் வாய்ந்த சிறப்புமிக்க சேவைக்காக பத்ம பூஷன் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு இவ்விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிரதம மந்திரியால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களில் 66 பேருக்கு மே 26 அன்று…
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லின்சி ஸ்மித்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஸ்ரீசரணி கைப்பற்றியுள்ளார். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையாக திகழ்கிறார். அவர் மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். 21 வயதான ஸ்ரீ சரணி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில், நெதர்லாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், மான்செஸ்டரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சிறப்பான செயல்பாடே அவரை உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக உயர்த்தியுள்ளது. முன்னாள் முதலிட வீராங்கனையான லின்சி ஸ்மித், உலகக் கோப்பை தொடரில்…
பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;- தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் திலகவதி சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இவை பொதுவெளியில் பெண் ஒருவரின் மாண்பை குலைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கருத்துகளை திமுகவில் நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சிலரும் பரப்பி வருகின்றனர். பெண் பத்திரிகையாளருக்கு எதிராக இப்படிப்பட்ட அருவெறுக்கத்தக்க கருத்துகள் பரப்பப்படுவதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.…