Author: Editor TN Talks

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க விடாமல் பாஜகவும், ஆளுநரும் தடுப்பதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கு. செல்வப்பெருந்தகை, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-  அன்புள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களுக்கு வணக்கம். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நாளை…

Read More

தமிழக வெற்றிக் கழகம் பதவி ஏற்க முடியாததற்கு பாரதிய ஜனதா கட்சியே முழு காரணம் என்று சந்தேகம் வரும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் single largest party யாக உருவெடுத்துள்ளது, எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது ஆளுநரின் கடமையாகும் என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இதை தாமதப்படுத்தும் எந்த செயல்பாடும் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமன்றி மற்றவர்களாலும் ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும். அதற்கு பாரதிய ஜனதா கட்சியே (BJP) முழு காரணம் என்று சந்தேகம் வரும் எனவும் கூறியுள்ளார். விஜய்யின் பாதையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தடையும், அரசியலமைப்பு ரீதியிலான தாமதமாகக் கருதப்படாது; அது பாரதிய ஜனதா கட்சி யின் மறைமுக அரசியலாகவே பார்க்கப்படும்—உண்மையில் அப்படி இல்லையென்றாலும் கூட. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டின்…

Read More

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை விஜய் கைப்பற்றியும் கூட அவர் முதலமைச்சர் பதவியேற்பது முடியாத காரியமாக இருக்கிறது. ஏனெனில் அவரிடம் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், ”ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது. த.வெ.க வின் தலைவர் விஜய் அவர்கள் ஆட்சி…

Read More

தவெக தலைவர் விஜய் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர்  சி. ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பிஜேபி கடைபிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநர், விஜய்யை அவரை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல. எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக…

Read More

 தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-  தமிழகத்தில் கல்வி, மொழி, மாநில உரிமைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முக்கியமான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பி.எம். ஸ்ரீ (PM SHRI)  திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் கல்வி மாற்றங்களில் வெளிப்படையாகக் காணப்படாத சில ஆழமானப் பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி நடைமுறைகள், வருங்காலத்தில் இந்தி திணிப்பிற்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.  தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பின்பற்றிவரும் இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) என்பது மொழி அடையாளத்தையும், கல்வி சமத்துவத்தையும் பாதுகாக்கும் முக்கியக் கொள்கையாகும். இதற்கு முரணாக மும்மொழிக் கொள்கையை திணிப்பது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் வரலாற்றுப் போராட்டங்களுக்கும் எதிரானதாகும்.  மேலும், கல்வி என்பது அரசியலமைப்பின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமை சார்ந்த துறை ஆகும். மாநிலங்களின் தேவைகள், மொழி, சமூக அமைப்பு, பொருளாதார நிலை போன்றவற்றை…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு  காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. செ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.…

Read More

தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பான்மை எண்ணிக்கையை எந்தக் கட்சியும் தனித்து எட்டாத நிலையில், திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தரப்பில் இருந்து விஜயின் டிவிகேக்கு ஆதரவு வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில்  சந்தித்த பின்னர், முன்னாள் அமைச்சர்  செம்மலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் அடுத்தகட்ட முடிவை பொதுச்செயலாளர் தான் அறிவிப்பார். அவர் எடுக்கும் முடிவு இறுதியும் நல்லதுமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும், “எங்கள்…

Read More

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இரண்டு நாட்களில் ஒரு தெளிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் சென்னை செல்கிறேன். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்தும், தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்ய போகிறது என்பதை உற்றுநோக்கக்கூடிய காலம் உள்ளது, அடுத்த 10நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கக்கூடிய நம்பிக்கையில் உள்ளோம். தமிழக வெற்றி கழகத்திற்கு 35% வாக்குகளும் திமுகவிற்கு 30% வாக்குகளும் பதிவாகியுள்ளது, இந்த 65% வாக்குகள் பாஜகவுக்கு தமிழகத்தில் காலூன்றக்கூடாது என்னும் நோக்கில் வாக்களிக்கப்பட்டது என்பதனை காட்டுகிறது மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இது உடையக்கூடாது என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சியும் முடிவு எடுத்துள்ளது காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தமிழகத்தின் நிலை மற்றும் மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்கவேண்டும் என்ற நிலையில்தான் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பின்மையை முன்னிறுத்தியே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது…

Read More

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு நேற்று விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியிருந்தார். வெள்ளிக் கிழமை வரை விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்று விஜய் பதவியேற்பதாக இருந்த நிலையில், தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக- திமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பலதரப்பட கருத்துகள் உலா வந்தன. இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், ”விஜய் கேட்டுக் கொண்டதால் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தனக்கு எவ்வித பாதுகாப்பும் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டார். தேவைப்படும் போது விஜய்யே காவல்துறையை அழைப்பார். விஜய் வரும்போதெல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமத்திற்கு…

Read More

தனிப்பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்.  அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல். அவர் உரிமை கோரிய நிலையில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் மேலும் இங்கே குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல. தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் யார் யார் என்னும் பட்டியலை ஆளுநர் கோரமுடியாது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது என்பது பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகிறது என்னும் ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் ஆட்சி அமைப்பதுதான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்கமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே தவெகவை கையாள்கிறது  என நம்புகிறேன். இப்போதும் பாஜக அவரைக் கையாளத் துடிக்கிறது. கட்டுக்குள் வைக்க நெருக்கடி கொடுக்கிறது. இந்த நிலையில் கான்கிரஸோடும்,…

Read More