Author: Editor TN Talks

தனிப்பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்.  அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல். அவர் உரிமை கோரிய நிலையில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் மேலும் இங்கே குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல. தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் யார் யார் என்னும் பட்டியலை ஆளுநர் கோரமுடியாது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது என்பது பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகிறது என்னும் ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் ஆட்சி அமைப்பதுதான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்கமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே தவெகவை கையாள்கிறது  என நம்புகிறேன். இப்போதும் பாஜக அவரைக் கையாளத் துடிக்கிறது. கட்டுக்குள் வைக்க நெருக்கடி கொடுக்கிறது. இந்த நிலையில் கான்கிரஸோடும்,…

Read More

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், ‘பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் பார் ரைசிங் இந்தியா’ (பி.எம்.ஸ்ரீ) திட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசியக்கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இருப்பதால், தி.மு.க. தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்கனவே பின்பற்றி வரும் இருமொழிக்கொள்கையே போதும் என சொல்லி இந்த திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. இந்த திட்டத்தில் இணைய மறுத்ததன் விளைவாக, மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது. இந்த விவகாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. நீங்கள் பணம் தராவிட்டால் என்ன? நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவோம் என அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Read More

தவெக தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனம் திறந்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரியிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். மொத்தம் 112 ஆதரவு கடிதங்கள் மட்டுமே இருந்ததால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது. இதனிடையே அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தேர்தல்…

Read More

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு அடுத்து திமுக 59 தொகுதிகளையும், அதிமுக 47 தொகுதிகளையும் கைப்பற்றி இருக்கிறது. திமுக கூட்டணிக்கு 73 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் கிடைத்திருக்கிறது. ஆயினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருமாறு தவெக அனுப்பிய தூதுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லி, தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தருவதாக கடிதம் அளித்துவிட்டது. இதன்மூலம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த காங்கிரஸ் – திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு அளித்த பின்னரும், தவெக ஆட்சியமைக்க 6 எம்எல்ஏ-க்களின் தேவை இருக்கிறது. இதனிடையே விசிக நாளை விஜய்யின் கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சிபிஎம் கட்சியும் தான் தவெகவுக்கு ஆதரவு தரப்போவதில்லை என தெரிவித்துள்ளது.…

Read More

வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையில், புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய…

Read More

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிமுகவின் ஆதரவு கிடையாது என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி,  தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்று செய்தி தவறானது என்று விளக்கமளித்தார். அதிமுக மிகப் பெரிய இயக்கம் என்றும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எந்த சூழலிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்காது என்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக் கொள்வதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

Read More

குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருப்பதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிகையில், ”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தலில் 107 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க 117 இடங்கள் தேவைப்படும் நிலையில் 5 தொகுதிகளை கையில் வைத்துள்ள காங்கிரஸ் அதற்கு ஆதரவளித்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளையே வென்றது. இப்போது கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறி தவெகவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளதற்கு திமுக தரப்பில் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. திமுகவினரின் உழைப்பில் வெற்றியை பெற்று விட்டு இப்படி திமுக கூட்டணிக்கு துரோகம் இழைக்கலாமா என உடன்பிறப்புகள் ஆவேசம் காட்டியுள்ளனர். திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் தனது பதவியை ராஜினாமா செய்வாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல் திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்தவர்கள் மாநகராட்சி மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில் அவர்களுக்கும் திமுகவினர் எதிர்ப்பு காட்டியுள்ளனர். கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரசை…

Read More

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது எஸ்க் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது… புதிய எழுச்சியை உண்டாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நாளைய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் திரு விஜய் அவர்களுக்கு அன்பான வணக்கம், ​திரைத்துறையிலிருந்து மக்கள் பணியாற்ற வந்திருக்கும் தங்களின் தலைமையில், தமிழ் சினிமா ஒரு பொற்காலத்தை நோக்கியும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நோக்கியும் நகரும் என்ற பெரும் நம்பிக்கை ஒட்டுமொத்தத் திரையுலகினரிடையே நிலவுகிறது. இந்த நேரத்தில் தமிழ்ச் சினிமாவில் துறை சார்ந்து நிறைவேற்றப்படாமல் காத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை இந்த முகநூல் வழியாக ஒரு பதிவாக இது இருக்கட்டும் என்றும் அதே சமயம் இது மீடியா வழியாக உங்கள் கவனத்திற்கு வரும் என்று நம்புகிற காரணத்தால் இதை எழுதுகிறேன். கீழ்க்கண்ட மிக முக்கியமான கோரிக்கைகளைத் தங்களின் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன்: ​ 1. வாழ்வாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் கலைஞர்களுக்கான வீட்டு வசதி  ​திரைத்துறையை நம்பி உழைத்து ஓய்வுபெற்ற படைப்பாளிகள்,…

Read More

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு  கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில், சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது; அதே நேரம் அறுதிப் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 எம்எல்ஏ-க்களை அவரது கட்சி பெறவில்லை; நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால்,  ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே உள்ளன என குறிப்பிட்டுள்ளார். ஆகவே அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 உறுப்பினர்களின் எண்ணிக்கை அவருக்கு தேவைப்படுகிறது; அரசியல் சாசன கொள்கைகளை உறுதி செய்யும்…

Read More