Author: Editor TN Talks

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லின்சி ஸ்மித்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஸ்ரீசரணி கைப்பற்றியுள்ளார்.   இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையாக திகழ்கிறார். அவர் மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். 21 வயதான ஸ்ரீ சரணி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில், நெதர்லாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், மான்செஸ்டரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சிறப்பான செயல்பாடே அவரை உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக உயர்த்தியுள்ளது. முன்னாள் முதலிட வீராங்கனையான லின்சி ஸ்மித், உலகக் கோப்பை தொடரில்…

Read More

பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;- தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் திலகவதி சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இவை பொதுவெளியில் பெண் ஒருவரின் மாண்பை குலைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கருத்துகளை திமுகவில் நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சிலரும் பரப்பி வருகின்றனர். பெண் பத்திரிகையாளருக்கு எதிராக இப்படிப்பட்ட அருவெறுக்கத்தக்க கருத்துகள் பரப்பப்படுவதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.…

Read More

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி காட்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, துரைமுருகனின் வெற்றியை செல்லாது எனவும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் வி.ராமு 2021ல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ராமு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று துரைமுருகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சரட்சன் வில்சன், 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம்…

Read More

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப்  பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மக்களின் ஆதரவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. திமுக தயவால ஆட்சி நடக்கவில்லை. சி.பி.எம். சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தாங்களாகவே முடிவெடுத்துத்தான் தவெகவுக்கு ஆதரவளித்ததாகவும், திமுக அனுப்பி வைத்ததாக நீங்கள் எப்படிச் சொல்லலாம் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆதரவளிப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக தவெக இருப்பதால்தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஒருவேளை அப்படி நாங்கள் ஆதரவு அளிக்காமல் போனால் அன்றிருந்த சூழ்நிலையில் மே10ஆம் தேதி பதவி ஏற்பு என்பதே நடந்திருக்காது. அதற்கு மாறாக 10ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் குடியரசு தலைவர் ஆட்சி என்பது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார். பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் நீண்ட நெடிய போராட்டத்தை…

Read More

FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியை முன்னிட்டு, இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹாக்கி இந்தியா தனது எக்ஸ் (X) தள பதிவில், “பெருமை, நன்றியுணர்வு, அங்கீகாரம். FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப் 2025-26 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.3 லட்சமும், ஆதரவு குழு உறுப்பினர்களுக்கு ரூ.1.5 லட்சமும் பரிசாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக நேஷன்ஸ் கப் பட்டத்தை வென்றதுடன், அடுத்த சீசனுக்கான FIH மகளிர் புரோ லீக் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.…

Read More

நீட் தேர்வே தேவையில்லை எனவும், நீட் அச்சத்தால் மாணவர் உயிரிழப்பதற்கு மோடிதான் காரணம் எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மல்குமாரின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் மதுரை திருநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் அமைச்சர் நிர்மல்குமார், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி  மாணிக்கம் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். பின்னர் செய்தியாளர்களை மூவரும் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தவெகவின் எண்ணம் எனக் கூறினார். ஒரு தேர்வையை ஒழுங்காக நடத்தமுடியாத நிலையில்தான் ஒன்றிய அரசு இருப்பதாகச் சாடிய அவர், நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் உயிரிழப்புக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு  எனக் குற்றம்சாட்டினார். நீட் தேர்வைப் பொறுத்தவரை தென்மாநிலங்களில் முறையாக நடப்பதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் தவறுகள் நடப்பதாகவும் தெரிவித்தார். நான் முதல்வர் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எழுந்த கேள்விக்கு, யாரும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என…

Read More

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அண்ணா பஸ்நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  உள்ள ஆக்கிரமிப்பு கடைகளில் தலா ரூ.50 வீதம் நாளொன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளிலும் தலா ரூ. 50 வீதம் நாளொன்றுக்கு ரூ.33ஆயிரம் வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சியில் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறி அங்கு கரும்புச் சாறு கடை நடத்துபவர் வரி வசூலிப்பதாக அந்தப் பகுதியில் பூக்கடை நடத்தும் மூதாட்டி தெரிவித்துள்ளார். இங்கு வரிவசூலுக்கு கோவில்பட்டி நகராட்சி பெயரில் போலியான ரசீது அடிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு தொகை வசூலித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி நிர்வாகம் அவர்களைக் கண்டித்து மன்னித்து விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

Read More

ஈரோட்டில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை, சிங்கப் பெண் படை காவலர் உதவியுடன் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு மையத்தில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெளிப்புற தேர்வு கண்காணிப்பாளராக பணியில் இருந்துள்ளார். தேர்வுப் பணி முடிவடைந்த நிலையில் அங்கிருந்த மாணவி ஒருவரிடம் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி உடனடியாக காவல்துறை அவசர கட்டுப்பாட்டு எண் 100க்கு தொடர்பு கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கப் பெண் படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் திண்டல் பகுதியில் உள்ள ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்ற மகளிர் போலீசார்…

Read More

வேலூர்மாவட்டம்,வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜூ 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும் ஆகஸ்ட் 17-இல் தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டுக்காக  மண்டல வாரியாக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார். மதசார்பின்மையை பாதுகாப்பதில் விசிக உண்மையாக இருப்பதாகவும், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதி படுத்தியுள்ளதாகவும் கூறியவர் அண்ணாமலை விவகாரத்துக்கு வந்தார். அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால் போதும். ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவிக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள்…

Read More

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், காக்கா தோப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச யோக தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  யோகா விழிப்புணர்வு குறித்து கூறியதோடு, பிரதமர் நரேந்திர மோடி யோகா நிகழ்வில் பங்கேற்பது போல, வரும் காலங்களில் தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். யோகா என்பது குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு மிகவும் தேவை.  யோகா மற்றும் தியானம் அனைவரும் பழக வேண்டும்.  யோகா என்பது உடல் நலம் நலமாக இருக்க செய்யக்கூடியது எனக் கூறிய அவர், தனது யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு…

Read More