Author: Editor TN Talks
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த முறை அரசியல் தரப்புகளுக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் மாறி மாறி இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் அதிக இடங்களை வென்ற தனிக் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகும். ஆனால் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும், சென்னை பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. இதனால், ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆட்சியமைக்க தவெக எந்தெந்த கட்சிகளின் ஆதரவை நாடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 234…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த முறை அரசியல் தரப்புகளுக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் மாறி மாறி இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் அதிக இடங்களை வென்ற தனிக் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகும். ஆனால் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், தேசிய அளவில் முக்கிய கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவை தவெக நாடியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் ராகுல் காந்திக்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு உள்ளது. அவர் விஜய்யுடன் இணைந்து…
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட துயரமான விபத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி உயிரிழந்தது தமிழ் திரைப்படத் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தபோது, ஜோத்பூர் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், திரைப்படத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்.பி. செளத்ரி தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக திகழ்ந்தவர். தனது சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல வெற்றிப்படங்களை வழங்கியவர். குறிப்பாக குடும்பம், உணர்ச்சி, மற்றும் வணிக அம்சங்கள் கலந்த படங்களை தயாரிப்பதில் அவர் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியிருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளத்தில் 99 படங்களை தயாரித்தவர் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியவர். அவர் தயாரித்த முக்கியமான தமிழ் திரைப்படங்களில் சூரியன்,…
புதிய அமைச்சரவையில் இடம்பெற போகும் அமைச்சர்கள் இவர்கள்தான் என தவெக அமைச்சர்கள் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய், ஒருபக்கம் பெரும்பான்மைக்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதே நேரம் தவெகவில் இவர்கள்தான் அமைச்சராக இருக்கிறார்கள் என பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பட்டியலில், தவெக பொதுச்செயலர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் அருண்ராஜ், விஜய்சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், திருப்பூர் சத்தியபாமா, விஜயலட்சுமி, தாயிரா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்திக்கு, தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தமிழக அரசியல் களத்தையே ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்திலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி வழியாகவும் விஜய்க்கு வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர். இதற்குப் பதிலளித்து தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமருக்கான பதிலில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே, தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே குறிக்கோளாகத் திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றத்திலும், தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் நாங்கள் முழுமையாகக் கவனம் செலுத்துவோம். இம்முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், மக்களவையின் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்த இனிய…
சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றியினை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றபோதும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக தரப்பு கோரி வருகிறது. இந்த நிலையில் தவெகவுக்கு அமமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்து இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கெடுத்து 11 தொகுதிகளில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மன்னார்குடி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றும், துரோகத்துக்கு ஆஸ்கர் கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடிக்கு…
தமிழ்நாட்டின் நலன் காக்க, மதவெறி ஃபாசிசத்துக்கு எதிராக தொடர்ந்து களமாட வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;- தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர். விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடம் மாடல் தி.மு.க. அரசு 2021 முதல் 2026 வரை மிகச் சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு தந்தது என்பது மறக்க முடியாத உண்மை. திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தனி மனிதரையும் பல வழிகளில் சென்றடைந்து பயன் நல்கியுள்ளன. உயர்கல்வியில் இந்தியாவின் முதல் இடத்தை தமிழ்நாடு அடைவதற்கும் தரமான பள்ளிக்கல்வியை ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் பெறுவதற்கும் தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் காரணமாக இருந்தன. தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றியது திமுக ஆட்சி.…
சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருப்பதோடு, சில குடும்பத்துக்குள் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டு முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், 9192 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவினார். முதலமைச்சரே தோல்வி அடைந்த நிலையில், அவரது மகனும் துணை முதலமைச்சருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,992 வாக்குகள் பெற்று 7140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா 69,351 வாக்குகள் பெற்று வெற்றிஅடைந்துள்ளார். ஆனால், விருதுநகரில் போட்டியிட்ட இவரது மகன் விஜயபிரபாகரன் 54,262 வாக்குகள் மட்டுமே பெற்று தவெக வேட்பாளர் செல்வத்திடம் 9391 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இப்படி தந்தைக்கு தோல்வி மகனுக்கு வெற்றி, தாய்க்கு வெற்றி மகனுக்கு தோல்வி…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு ஆளும் திமுகவுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி பெருவாரியான வெற்றியினைப் பெற்றுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணிக்கு 73 இடங்களையும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களையும் வழங்கியுள்ள மக்கள், திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சியாக மாறியுள்ள திமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர், யார் துணைத் தலைவர், யார் கொறடா என்பது குறித்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால் அவர் தற்போது எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதனால் அவர் சட்டமன்றம் செல்லமுடியாத நிலை. துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். இந்த ரேஸில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சொர்ணா சேதுராமன் என 3 பேர் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது 50 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றையே மாற்றி அமைத்திருக்கிறது எனலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் களம் அதகளமாக இருந்தது. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என கட்சிகள் அங்கும், இங்கும் அல்லோலப்பட்டனர். குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்றைய தேர்தலில் மிகப்பெரிய வரலாற்றை படைத்திருக்கிறது எனலாம். அப்படி இருக்க, தேர்தலுக்கு முன்பு பல கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முற்பட்டன. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ராகுல்காந்தியும் அதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஜனநாயகன் பட விவகாரத்தில் ராகுல்காந்தி வெளிப்படையாக ஆனால் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை…