Author: Editor TN Talks

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில் பாமக சார்பில் பெரும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அண்மையில் நடைபெற்ற பாமக கூட்டத்தின் இறுதித் தீர்மானத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பிலி குண்டு முதல் பூம்புகார் வரை நடைபயணம்: விவசாய சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தனது தலைமையின் கீழ் இந்த 3 நாட்கள் நடைபயணம் நடைபெறும் என்று அவர் கூறினார். தர்மபுரி மாவட்டம், பில்லி குண்டு பகுதியில் தொடங்கி, மயிலாடுதுறை மாவட்டம் டெல்டா பகுதியான பூம்புகார் வரை இந்த விழிப்புணர்வு மற்றும் அழுத்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு ஏன் மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்பதை மக்கள் மத்தியில் விளக்கவும், அரசுக்கு அழுத்தம்…

Read More

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தவெக பெண் நிர்வாகியுடன் ஆட்டம்போட்டது பேசு பொருளாகியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் முதல்வர் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பத்து வயது சிறார்கள் முதல் சுமார் 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க வந்த மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் வரும் தளபதி கச்சேரி என்ற பாடலுக்கும், சச்சின் திரைப்படத்தில் வரும் வாடி வாடி கைப்படாத சிடி என்ற பாடலுக்கும் த வெ க பெண் நிர்வாகி உடன் குத்தாட்டம் போட்டார். 1500 க்கும்…

Read More

12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிம்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் கவிந்தர் குப்தா, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், சிம்லா மேயர் சுரேந்தர் சவுகான், காவல்துறை அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆளுநர், யோகாவையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகக் கடைப்பிடிக்குமாறு பங்கேற்பாளர்களுக்கு உறுதிமொழி ஏற்கச் செய்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜெய்ராம் தாக்கூர், யோகாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க இந்தியா முன்வைத்த தீர்மானத்தின் வெற்றியையும் நினைவுகூர்ந்தார். ஆளுநர் கவிந்தர் குப்தா, உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.…

Read More

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். துனகிரி (INS Dunagiri), ஐ.என்.எஸ். சன்ஷோதக் (INS Sanshodhak) மற்றும் ஐ.என்.எஸ். அக்ராய் (INS Agray)  ஆகியஇந்திய கடற்படையின் மூன்று முக்கிய போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.. இந்த மூன்று முன்னணி போர்க்கப்பல்களின் இணைப்பு, இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Warship Design Bureau மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த Garden Reach Shipbuilders & Engineers (GRSE) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, GRSE நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல்கள், கடல்சார் போர், நீரியல் ஆய்வு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய திறன்களை கொண்டுள்ளன. ஐ.என்.எஸ். துனகிரி ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்தாவது ஸ்டெல்த் போர்க்கப்பலான துனகிரி, பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் மிதமான தூர வான்வழி பாதுகாப்பு ஏவுகணை (MR-SAM) உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கடற்படையின்…

Read More

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டதோடு அங்கு சிகிச்சைக்கு வரும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருப்பூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் தேவைகள் குறித்தும், புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கட்டுமானத் தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி,…

Read More

ஈராட்டில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெகவினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகள் கேட்பதில்லை எனவும் சம்பந்தமே இல்லாத கேள்விகள் கேட்பதாகவும் கூறினார். கடந்தாண்டு செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார். முதல்வர் பேசவில்லையே என்னும் கேள்விக்கு சட்டப்பேரவையில் பேசவில்லை என்றாலும் மக்களுடன்  முதலமைச்சர் பேசிக் கொண்டுதான் இருப்பதாக கூறிய அமைச்சர் விஜய்பாலாஜி, சட்டமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு தடையானதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கூறியதோடு,  அது சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேகதாது தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியது அவர்களது அரசியல் எனவும், அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனவும் கூறினார்.

Read More

கடந்த 2021ஆம் ஆண்டு முகில்பேட்டெ என்னும் கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை கயாடுலோஹர். தொடர்ந்து மலையாளம்,  மராட்டி படங்களில் நடித்து வந்த கயாடு, 2025ஆம் ஆண்டில் டிராகன் என்னும் தமிழ்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இதயம் முரளி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் (social media) இருந்து தற்காலிகமாக ஒரு சிறிய இடைவெளி எடுப்பதாக கயாடு லோஹர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ​சில நேரங்களில், நாம் நம் உடலுக்குக் கொடுக்கும் அதே அளவிலான ஓய்வு நம் மனதிற்கும் தேவைப்படுகிறது. வேகத்தைக் குறைக்கவும், சிறிது காலம் இதிலிருந்து விலகியிருக்கவும், திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையையும் என்னையும் முழுமையாக உணர அதிக நேரம் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். ​இங்கு எனக்கு…

Read More

நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் தொடர்பான இணையப் பக்கங்களின் பெயரை மாற்றியிருப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  நீங்கள், நான்முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன எனக் கூறியுள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக…

Read More

சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க மாநில அரசு உடனடியாகத் திட்டம் வகுக்க வேண்டும்எனக் கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என் வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் ஓடைப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது அரிவாளைக் கொண்டு மரங்களை வெட்டினார். தொடர்ந்து மரம் அறுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியவர், தொடர்ண்டு ஜேசிபியை இயக்கி கருவேல மரத்தை வேரோடு அப்புறப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது;- விமானத்தில் கொண்டு வரப்பட்டு தூவப்பட்ட வேலிக்காத்தான் விதைகளால், இன்று தமிழகமே படுநாசம் ஆகிவிட்டது. நாட்டு கருவேல மரங்களை இதோடு ஒப்பிடக்கூடாது. காற்றில் உள்ள பிராண வாயுவை உறிஞ்சி, கரியமில வாயுவை உமிழும் இந்த சீமைக்கருவேல மரங்கள் 50 முதல் 100 அடி வரை…

Read More

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவர்  பிக்கப் வேன் ஒற்னில் நேற்று மாலை  காரிமங்கலத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். முதலிப்பட்டி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது, அச்சமயம் எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பிக்கப் வேன் மோதியதில் பைக்கில் வந்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன்(45) ராஜா(56) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பிக்கப் வாகனம் சாலையில் சாய்ந்து இருசக்கரவாகனத்தின்மீது  மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டி மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு…

Read More