Author: Editor TN Talks

தமிழ்நாட்டில் தவெக தலைமயிலான புதிய அரசு அமைய உள்ள நிலையில் PM ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக  தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு மீண்டும் கெடு விதித்துள்ளது. பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM SHRI) என்பது நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டமாகும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும்.பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டில் முந்தைய திமுக தலைமையிலான அரசு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. பிஎம் ஸ்ரீ திட்டம்…

Read More

எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஜோதிமணி பதிவிட்டுள்ளதாவது: – நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் பயணித்து வருகிறது. ஒரு கூட்டணியில் இருக்கும்போது மேடு பள்ளங்கள் ஏற்படுவது இயல்பு. நானே பலமுறை பகிரங்கமாக மோதியிருக்கிறேன். இப்போது, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏகமனதாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி சேர முடிவெடுத்துள்ளது. அரசியலில் கூட்டணிகள் உருவாவதும் பிரிவதும் இயல்பானதுதான். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, நீண்டகால கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை திமுக வெளியேற்றியது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதை ஒரு அரசியல் நிலைப்பாடாகவே புரிந்துகொண்டோம். தற்போது, காங்கிரஸ் கட்சி ஒரு அரசியல் நிலைப்பாட்டை…

Read More

தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி மூன்றாண்டுகளிலேயே தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி ஒருவனாக யாருடனும் கூட்டணி வைக்காமல் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள விஜய்,  75 ஆண்டுகால திமுக, 50 ஆண்டுகால அதிமுக கட்சிகளுக்கு எல்லாம் பேரிடியைக் கொடுத்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் தவெகவின் கொடி பறக்க இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்னும் சூழலில், யாரெல்லாம் தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என்னும் விவாதம் தமிழக அரசியல் களத்தில் அனலடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. இதே போல், தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதிமுகவுக்குள்ளும் கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது

Read More

தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் பதவியேற்பது நாளையா அல்லது நாளை மறுநாளா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 ல்இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதலான இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பிற்பகலில் சென்னை…

Read More

தற்போதுவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளிடம்  தவெக தலைவர் விஜய் ஆதரவைக்  கோரி வருகிறார். இதில் 5 எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் என சத்தியமூர்த்திபவன் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம் நிலைப்பாடு என்ன என்பது ஐயத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது வரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக தான் இருக்கிறோம்…தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து ஆதரவு கோரி எங்களுக்கு எந்தவித கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.  செய்தியாளர்களின் வியூகத்திற்கு பதில் சொல்ல முடியாது எனத்…

Read More

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக மே மாதம் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்வு முடிவுகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதல் பெறவேண்டும். இதனால் திட்டமிட்டப்படி வரும் 8-ம் தேதி வரை பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று…

Read More

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்க விஜய்க்கு 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் த.வெ.க தலைவர்  விஜய் கோரிக்கை விடுத்ததாக அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே இறுதி முடிவு எடுக்கவும் காங்கிரஸ் அகில இந்திய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் எதிரொலியாக இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றே முடிவு அறிவிக்கப்படும் எனக்…

Read More

தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் சகாயம் ஐ.ஏ.எஸ். போட்டியிட ஏற்பாடு செய்யப்படுவதாக சூசகத் தகவல். தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுகட்டை வைக்க கனிம வள கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி தகவலாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயம் அவர்களை தவெக அமைச்சரவையில் சேர்த்து அவரை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு அமைச்சராக்கவும் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சரவையில் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சூசகமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் அவர் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் பந்தாடப்பட்டு முக்கிய பதவிகளில் அவரைத் தொடர விடாமல் செய்தனர். மேலும் அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கனிம வள கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஆய்வு செய்தபோது அரசு தரப்பில்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த முறை அரசியல் தரப்புகளுக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் மாறி மாறி இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் அதிக இடங்களை வென்ற தனிக் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகும். ஆனால் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும், சென்னை பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. இதனால், ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆட்சியமைக்க தவெக எந்தெந்த கட்சிகளின் ஆதரவை நாடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 234…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த முறை அரசியல் தரப்புகளுக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் மாறி மாறி இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் அதிக இடங்களை வென்ற தனிக் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகும். ஆனால் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், தேசிய அளவில் முக்கிய கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவை தவெக நாடியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் ராகுல் காந்திக்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு உள்ளது. அவர் விஜய்யுடன் இணைந்து…

Read More