Author: Editor TN Talks

19வது ஐபிஎல் தொடரின் இன்றைய (மே 5) 48வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 4ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றியும், 5ல் தோல்வியும் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும்  வெற்றி- தோல்வி கணக்கில் சமநிலையுடன் இருக்க நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை ஒரு இடம் முன்னிலையில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் நிலைக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளதால், இரு…

Read More

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா முதல் குமரிக் கடல் வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 5) முதல் வரும் 10ம் தேதி பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது.

Read More

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பாரா வண்ணம் நடந்து முடிந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டிருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 என்பது சரிபாதி. சரிபாதிக்கு ஒரு இடம் அதிகம் பெற்றால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்க முடியும். அப்படி பார்த்தால், எந்தக் கட்சியுமே பெரும்பான்மை இல்லாததால், இது தொங்கு சட்டசபை என அழைக்கப்படுகிறது. இப்போது என்ன நடக்கும்? கட்சி தாவல் சட்டம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்..! யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் விதி.. தவெக 105 இடங்களை கைப்பற்றி இருப்பதால், தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆகையால், விஜய்யை முதலில்…

Read More

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளிலேயே சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய் ஜெயித்திருப்பது, 50 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து விஜய் தற்போத் இந்த சாதனையை படைத்து இருக்கிறார். முதல் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. மொத்தம் 233 தொகுதிகளையும் சேர்த்து 34.92% வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்துலும், 24.19% வாக்குகளுடன் திமுக 2வது இடத்திலும், 21.21% வாக்குகளுடன் அதிமுக 3-வது இடத்திலும் உள்ளது.

Read More

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுற்றதும், ஐந்து மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 124 முதல் 154 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 80 தொகுதிகள் கிடைக்கும் எனவும், தமிழக வெற்றிக் கழகம் சிங்கிள் டிஜிட்டிலேயே வெற்றி பெறும், நாம்தமிழர் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றாது எனவும் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் திமுக, அதிமுகவின் வாக்குகளை தவெக பிரிக்கும் எனவும் கணிக்கப்பட்டது. இந்த நிலையில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 62 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து இ.வி.எம்மில் பதிவான…

Read More

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கடந்த தேர்தல்களில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து மக்கள் சேவை செய்ய தேர்ந்தெடுத்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தமிழக முழுவதும் NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து உறுதுணையாக இருந்த அனைத்து பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள். மேலும்,  பாஜக சார்பில் தகுதியும் திறமையும் கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து போட்டியிடச் செய்த தேசிய பாஜக தலைமைக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற உயர்ந்த நம்பிக்கைக்கு ஏற்ப, தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும்…

Read More

இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ்தளப் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது;- கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும்…

Read More

 தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், 62ஆயிரத்து 992 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பிடித்துள்ள தவெக வேட்பாளரைவிட  7ஆயிரத்து 140 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காக ராணிமேரி கல்லூரிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு தொகுதி மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன் எனக் குறிப்பிட்டார். சேப்பாக்கம் தொகுதியில் தனது வெற்றிக்காக உழைத்த அத்தனை நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் தன்னுடைய  நன்றியை தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். ஓட்டு போட்டு இருக்கிறார்கள் அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின்,  வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாக பொறுப்பேற்க கூடிய அரசுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் களமிறங்கிய முதல் சட்டமன்ற தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றும் அளவில் முன்னிலை வகித்துள்ளது. தவெக தலைவருக்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் தவெகவின் செயல்பாட்டுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் NDA-வுக்கு ஆதரவு அளித்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம் எனவும், TVK-வின் சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்லார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு எந்த உழைப்பையும் விடாது செயல்படுத்தும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.  

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது முதல், கடந்த 60 ஆண்டுகளாக  திராவிடக் கட்சிகளின் கோட்டையாகவே இருந்து வந்த தமிழகத்தில், தனது முதல் தேர்தலிலேயே அதனைத் தகர்த்துள்ளார் தவெக தலைவர் விஜய். ரஜினியின் தயக்கம்: 25 ஆண்டுகால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 1996-ல் “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என ரஜினி கொடுத்த அந்த ஒற்றை ‘வாய்ஸ்’, தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. அன்றிலிருந்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களும் மக்களும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தனர். “இதோ வருகிறேன், அதோ வருகிறேன்” எனப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த ரஜினி, 2021 தேர்தலுக்கு முன்பாகத் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பின்வாங்கினார். அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, உடல்நிலை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், தனது ரசிகர்…

Read More