Author: Editor TN Talks

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் “மாணவ தலைமை ஆசிரியர்” பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் பயிலும் கோகுல்ராஜ் மற்றும்  ஹர்ஷந்த் ஆகியோர் ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,  எங்கள் பள்ளியில், மாணவர்களின் கல்வி ஒழுக்கம் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இது போன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலைமை ஆசிரியராக ஒரு நாள் பணியாற்றுவார்கள். தற்போதைய சூழலில் எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பலர் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிய விதம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், “விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரின் வயதை வைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம், ஆக்ரோஷம், அர்ப்பணிப்பு மற்றும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் ஆகியவற்றால் அவர் இன்னும் தனித்துவமான வீரராக திகழ்கிறார்” என்றார். மேலும், “டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் விராட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்த அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரச மரியாதையுடன் கூடிய பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார். அதே…

Read More

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் சமையலறை பகுதியில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு நிலவியது. இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரே ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக மீட்டார். இதனால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கிராமங்களில் தீயணைப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு…

Read More

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி நடந்துள்ளதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், அவருக்குப் பின்னர் வந்த ஆளுநர் அர்லேகருக்கும் காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. ஆளுநரை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவைக்குள் அழைத்து சென்றார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் ஆங்கில அறிக்கையை ஆளுநர் அர்லேகர் வாசித்தார். தடைகள் மற்றும் பணபலத்தை தாண்டி தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. விஜயால் மட்டுமே தமிழ்நாட்டை ஆளமுடியும் என மக்கள் எண்ணினர். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை தனி ஆளாக விஜய் செய்துள்ளா விஜய் 1977இல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சியைப் போன்றே 2026இல் விஜய் ஏற்படுத்தி உள்ளார். தவெகவை ஆரம்பித்த…

Read More

சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டையில் வாயைத் திறங்க CM என்னும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான 17-வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. முதல்நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உரை நிகழ்த்த உள்ளார். சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். அந்த கருப்பு பேட்ஜில் வாயைத் திறங்க CM என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தவெக ஆட்சிக்கு எதிரான பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அந்தப் பதாகைகளில் திரையில் நாயகன், தரையில் வில்லன்,  கதறல் கேட்குதா CM?, தூய சக்தி அல்ல துயர சக்தி, REELS இங்கே REAL எங்கே?, மாற்றம் அல்ல ஏமாற்றம் ஆகிய வாசகங்கள்…

Read More

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுடன், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற இரவு விருந்தின்போது அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மக்ரோன் குறிப்பிட்டார். அவர் தனது பதிவில், “இன்று இரவு வெர்சாய்ஸில் அதிபர் டிரம்ப், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கான பாதையை உருவாக்குகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கிறது. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட முக்கியமான முன்னேற்றமாகும். இதன் மூலம் விரைவில் எரிசக்தி விலைகள் குறையவும் வாய்ப்பு உருவாகும்” என்று தெரிவித்தார். இதனிடையே, வெள்ளை மாளிகையும் (White…

Read More

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா (74) மற்றும் ஷஃபாலி வர்மா (55) ஆகியோரின் சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். பின்னர் 210 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி – ஷஃபாலி அதிரடி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து தனது முடிவுக்காக விரைவிலேயே வருத்தப்பட்டது. இந்திய தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆரம்பம் முதலே…

Read More

கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டினோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர். காங்கோ அணியும் இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு மோதின. ரொனால்டோ இருப்பதால், நிச்சயம் எளிதாக இந்தப் போட்டியை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் காங்கோ அணி வீரர்கள் களத்தில் சீறிப்பாய்ந்தனர். போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் கோல் அடித்ததால், அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ அணியின் யோனே வைஸா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. முன்னிலைக்காக இரு அணிகளும் இரண்டாம் பாதியில் மும்முரமாக விளையாடினர். காங்கோ அணியின் கோல் கீப்பர் Lionel Mpasi நேற்றைய ஆட்டத்தில் முக்கிய பங்காற்றினார். பெனால்டி பாக்ஸை முழுமையாகக் கட்டுப்படுத்தி, போர்ச்சுகல் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தடுத்து தனது அணியைக் காப்பாற்றினார். நேற்றைய ஆட்டத்தின் கதாநாயகர்களே Defensive Unit…

Read More

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் போட்டியிலேயே பல்வேறு சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அவரது இரட்டை கோல் உதவியுடன் பிரான்ஸ் அணி, செனகலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்கியது. 2002 உலகக் கோப்பையில் செனகலிடம் 0-1 என்ற கணக்கில் சந்தித்த அதிர்ச்சி தோல்விக்குப் பழிதீர்த்த பிரான்ஸ், 2018 உலக சாம்பியன் மற்றும் 2022 ரன்னர்-அப் என்ற பெருமைக்கு ஏற்ப வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது. எம்பாப்பேவின் சாதனை மழை இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்த எம்பாப்பே, உலகக் கோப்பை போட்டிகளில் தனது மொத்த கோல் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தினார். இதன் மூலம் 13 கோல்கள் அடித்திருந்த பிரான்ஸ் முன்னாள் நட்சத்திரம் ஜஸ்ட் ஃபோன்டைனின் சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற பெருமையை…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், விசிக கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த மே மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார். இந்த வாக்கெடுப்புக்கு பின்னர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒத்தி வைத்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாளான இன்று மரபுப்படி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர…

Read More