Author: Editor TN Talks

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிர்ச்சி திருப்பம்! வாக்கு எண்ணிக்கை முன்னேறிக் கொண்டிருக்கையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 100-ஐ தாண்டி முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. சமீபத்திய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 79 இடங்களிலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 54 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. முதல் முறையாக முழுமையான தேர்தலை சந்திக்கும் கட்சியாக இருந்தாலும், விஜய் தலைமையிலான தவெக இந்த அளவுக்கு முன்னிலை பெறுவது, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியதற்கான அறிகுறி என பார்க்கப்படுகிறது. ‘மந்திர எண்’ நோக்கி தவெக தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தற்போது 100-ஐ நெருங்கும் தவெக, அந்த இலக்கை நோக்கி வேகமாக நகர்கிறது. இதே போக்கு தொடர்ந்தால், தவெக தனியாகவே ஆட்சி…

Read More

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 97 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 76 இடங்களிலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 56 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்த புதிய போக்கு, தேர்தல் களத்தின் முழு அரசியல் சமன்பாட்டையே மாற்றி அமைத்துள்ளது. ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட இரு அணிப் போட்டி தற்போது மூன்று திசைகளில் பரவியுள்ளதால், தமிழகத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தவெக எழுச்சி – அரசியலில் புதிய அலை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. 97 இடங்களில் முன்னிலை என்பது, கட்சியின் முதல் பெரிய தேர்தல் முயற்சிக்கே கணிசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தவெக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிமுக vs திமுக…

Read More

தமிழகமே எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவு கூடுதல் பரபரப்புடனும் தீவிரத்துடனும் காணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் திமுக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 6 இடங்களிலும்,  தவெக 4 இடங்களிலும் முன்னிலை இருக்கிறது. சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் முன்னிலை. பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை.திமுக வேட்பாளர் ஆர். டி. சேகர் பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்று பின்னடைவு. அதேபோன்று திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை மயிலாப்பூரில் தபால் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை முன்னிலை வகிப்பதாக…

Read More

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்.9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீதம், மேற்கு வங்கத்தில் 92.47 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம், கேரளத்தில் 78.27 சதவீதம், அசாமில் 85.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக, அமைதியாக நடைபெற, 165 கூடுதல் வாக்கு எண்ணும் பார்வையாளர்கள், 77 காவல் பார்வையாளர்களை…

Read More

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு தொண்டர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகங்களிலும், கிளைஅலுவலகங்களிலும், ஒன்று கூடியுள்ளனர். அதிதீவிர தொண்டர்கள் காலைமுதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் குழுமியுள்ள தொண்டர்களில் சீனியர் ஒருவர் அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு மறைந்தும் மறையாத இந்த தலைவர்கள் அருள்புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் அந்த சீனியர் தொண்டர்.

Read More

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்தப் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தமிழகமே பரபரப்புக்கு உள்ளாகி  இருக்கிறது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகை த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரானால், த்ரிஷா துணை முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக தவெகவினரால் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டிருப்பதைப் போல் த்ரிஷாவும் கோயில் கோயிலாக சென்று வரும் நிலையில் த்ரிஷாவின் திருப்பதி சாமி தரிசனம், அவர் நினைத்தது நடக்குமா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் கடும் பாதுகாப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர். இதனுடன் சேர்த்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 384 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் இன்று கணக்கிடப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சம் 24 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிகளின் வாக்குச்சாவடி எண்ணிக்கையை பொறுத்து, வாக்கு எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கையும் மாறுபடும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM)…

Read More

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியாக நடைபெற்றது. பல வாரங்களாக பரபரப்பாக நடந்த பிரசாரம், ரோடு ஷோக்கள், கூட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மாநில அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளை தீர்மானிக்க உள்ளதால், அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த முறை தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதீய ஜனதா கட்சி கூட்டணி என இரு முக்கிய அணிகள் மோதியதோடு, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக முழு அளவில் தேர்தலில் களம் கண்டது. அதேபோல் நாம் தமிழர் கட்சிவும் தனித்துவமான போட்டியை வழங்கியது. இதற்குப் பிறகு, ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்து அமைத்த கூட்டணியும் கவனம் ஈர்த்தது.…

Read More

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேசம் அணி 2-1 என வென்று தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 14.2 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவ்ஹித் ஹிருடோய் 33 ரன்னும், லிட்டன் தாச் 26 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் ஜோஷ் கிளார்க்சன் 3 விக்கெட்டும், நாத்ன் ஸ்மித், பென் சீர்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து,…

Read More

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சமீப காலமாகவே பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தமிழக அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவித்து வரும் ஆடிட்டரும் பாஜக ஆதரவாளருமான எஸ். குருமூர்த்தி வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகர் அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாது” என்ற அவரது கருத்து, விஜய் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.  விஜய் வெற்றி சாத்தியமா… குருமூர்த்தி சொல்வது என்ன?   பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ். குருமூர்த்தி, “விஜயைப் பற்றி எனக்கு தெரியாது. சினிமாவே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க விஜய்யைப் பற்றி எப்படி தெரியும்?” என்று தொடங்கி, தமிழக அரசியலில் இனி நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவது குறித்த தனது சந்தேகத்தை வெளியிட்டார். அவர் குறிப்பிட்ட முக்கியமான அம்சம், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) வெற்றி பெற்ற விதம். “எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியதற்கு காரணம், திமுகவில் 30…

Read More