Author: Editor TN Talks

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சமீப காலமாகவே பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தமிழக அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவித்து வரும் ஆடிட்டரும் பாஜக ஆதரவாளருமான எஸ். குருமூர்த்தி வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “தமிழ்நாட்டில் ஒரு சினிமா நடிகர் அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாது” என்ற அவரது கருத்து, விஜய் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.  விஜய் வெற்றி சாத்தியமா… குருமூர்த்தி சொல்வது என்ன?   பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ். குருமூர்த்தி, “விஜயைப் பற்றி எனக்கு தெரியாது. சினிமாவே எனக்குத் தெரியாது. அப்படியிருக்க விஜய்யைப் பற்றி எப்படி தெரியும்?” என்று தொடங்கி, தமிழக அரசியலில் இனி நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவது குறித்த தனது சந்தேகத்தை வெளியிட்டார். அவர் குறிப்பிட்ட முக்கியமான அம்சம், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) வெற்றி பெற்ற விதம். “எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியதற்கு காரணம், திமுகவில் 30…

Read More

ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை இணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ், மற்றும் அருணாச்சலம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இணைத் தலைவர் எஸ்.கே.நவாஸ் கூறியதாவது;-  முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த வழக்கில் பேரறிவாளனை குற்றவாளி என்று தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அவர் குற்றவாளி என்று உறுதி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது. கருணை அடிப்படையில் அவரது மரண தன்னை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துள்ளார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ்…

Read More

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதுபோல் சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளின் வசதிக்காக தனியார் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சாப்பிடுகின்றனர். ஓட்டலில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டி கொட்டப்படுகிறது. சித்ரா பௌர்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி சென்னை  மற்றும் சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் தங்களது  சொந்த மாவட்டங்களை நோக்கி படையெடுத்தனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது. மக்கள் பயன்படுத்திய…

Read More

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 43-அது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 40 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் முலம் 17வது முறையாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்கள்ல் ஜடேஜாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 21, விராட் கோலி 20, எம்.எஸ்.தோனி 18 என முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Read More

கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதற்கட்டமாகவும், 142 தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜகவின் சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் இன்று (2.5.2026), சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், 12ஆம் வகுப்பு முடித்து 2026-2027ஆம் ஆண்டு கல்லூரிகளில் முதலாமாண்டு சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் “TSC-HELP DESK“உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா,எம்.பி.,  மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா – கழக மாணவர் அணிச் செயலாளர்  திருமதி வீரமணி, துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், வி.ஜி.கோகுல் – மாவட்ட அமைப்பாளர்கள் சென்னை தென்மேற்கு விஜய், சரவணன், சத்யா மற்றும் 50க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களைச் சுற்றிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் நோக்கில் சில சமூக விரோத சக்திகள், ஸ்ரீரங்கம் தொகுதி எண்: 139-ல் உள்ள தவெக கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலாக செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த கவலைக்குரிய சூழ்நிலையை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். சமூக விரோத சக்திகள் அமைதியான முறையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் உள்நோக்கத்துடனும், நமது கட்சியின் வாக்கு எண்ணும் மையப் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள் தங்களது தேர்தல் கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் இதுபோன்ற…

Read More

தென்மேற்கு பருவமழை வழக்கமான காலத்திலேயே ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கேரளா கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, மே 14 முதல் 20-ம் தேதிக்குள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பருவமழை ஆரம்பமாகும்.இது இந்திய நிலப்பரப்பை நோக்கி பருவமழை நகர்வின் ஆரம்ப கட்டமாக கருதப்படுகிறது. சில சர்வதேச வானிலை மாதிரிகள் இந்த ஆண்டு பருவமழை சற்றே முன்கூட்டியே வரலாம் எனக் காட்டினாலும், IMD இதுவரை அதனை உறுதி செய்யவில்லை. சாதாரணமாக, தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் ஒரு திட்டமிட்ட காலவரிசையில் முன்னேறும். அதாவது, இது “சர்ஜ்கள்” (surges) எனப்படும் பல்வேறு கட்டங்களாக வடக்குத் திசை நோக்கி நகரும். இந்த நகர்வை கடல் மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தீர்மானிக்கின்றன. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு…

Read More

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை விற்பனை செய்து வரும் ராஜா என்பவர், தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், த லீட் பேக்டரி என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான அப்துல் ஜலீல் உடன் வர்த்தக பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில்,  கொடுத்த 85 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டபோது, பணத்தைத் திருப்பி தரமறுத்து, மிரட்டல் விடுத்ததாக, ஜலீல் மீது  சென்னை திருமங்கலம் போலீசில் 2024ம் ஆண்டு ராஜா புகாரளித்தார். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு,  கடந்த ஆண்டு அப்துல் ஜலீலுக்கு எதிராக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ஜலீலை கைது செய்ய சென்னை…

Read More

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் மீஞ்சூர்–வண்டலூர் வெளிவட்டச் சாலை, ஜெயின் டெம்பிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், இரு வாகனங்களிலும் சாக்கு மூட்டைகளில்  2882 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்களுடன் குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கோபால், முத்துராஜ், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு குட்காப் பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

Read More