Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்
    Featured

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Editor web2By Editor web2July 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 02 19h08m30s697
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பழிக்குப் பழியாக நடந்ததாகக் கூறப்படும் கொடூர தாக்குதலில் தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் தனது மகன்களான சின்னதுரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இன்று பிற்பகலில், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள வல்லத்தி நம்பிகுளம் பகுதியில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அனைவரும் கீழே விழுந்த நிலையில், 5 வயது ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    vlcsnap 2026 07 02 19h07m43s766

    தப்பி ஓட முயன்ற காளிமுத்துவை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரம்பை மாநில நெடுஞ்சாலையில் வீசிவிட்டு தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த 15 வயது சின்னதுரை எலும்பு முறிவுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த காளிமுத்துவின் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த இரட்டைக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து மூலச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    crimenews DoubleMurder Tirunelveli
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!
    Next Article “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி
    Editor web2
    • Website

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.