Author: Editor web2
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தைப் பாராட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ப அதிர்ச்சியளித்த இந்த அழைப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டுப் பேசிய ரஜினிகாந்த், “செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போதெல்லாம் வருவதே இல்லை. விஷ்ணு, நீங்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளீர்கள். ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் அருமை. குட்டி பாப்பா ஜாராவை எப்படிப் பிடித்தீர்கள்? அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஷ்ணு, உங்களுக்கு மிகச் சிறந்த திரைக்கதை அறிவு (Script Sense) இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டு மழையால் நெகிழ்ந்துபோன விஷ்ணு விஷால், “ஒரே…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் புதிய தகவல் தீயாய்ப் பரவி வருகிறது. சமீபத்தில், மலேசியாவின் பிரபல தொழிலதிபரும், முன்னணித் திரைப்பட விநியோகஸ்தருமான டத்தோ அப்துல் மாலிக் (Malik Streams Corporation), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு, சர்வதேச அளவில் அப்படத்திற்கு மாபெரும் விளம்பரத்தைத் தேடித்தந்தது. அதே ‘ஜனநாயகன்’ மாடலைப் பின்பற்றி, சர்வதேச சந்தையைக் குறிவைத்து ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவையும் மலேசியாவில்…
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, மாலை நேர நெரிசல் மிகுந்த நேரத்தில் மின்சார ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரை ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கும் இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படாததால் செய்வதறியாது தவித்தனர். ரயில் நிலையங்களில் முறையான அறிவிப்புகள் தாமதமாக வெளியிடப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் தரப்பில், “சிக்னல் கோளாறு காரணமாகக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படாது; அதற்குப் பதிலாகப் பயணிகள் பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய பேட்டரிகளில் இருந்து காரீயத்தை (Lead) பிரித்தெடுக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், அவரது உடலை அரசு செலவில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்த 3 பேருக்கு…
சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றித் தவறான முறையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது மடிக்கணினியிலிருந்து 1,900 ஆபாசப் புகைப்படங்களும், 400 வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் காசிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்துக் காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
சாகித்திய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி (79) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக மற்றும் தமிழ் இலக்கிய உலகப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கிய உலகில் ஆழமான…
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) உள்கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த புதிய முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் Amazon Web Services (AWS) தரவு மையங்கள் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு AI சிப்கள், கிளவுட் சேவைகள், AI கருவிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். மேலும், இந்தியாவில் தனது இ-காமர்ஸ் மற்றும் க்விக் காமர்ஸ் சேவைகளையும் அமேசான் விரிவுபடுத்த உள்ளது. இந்த ஆண்டிலேயே 20-க்கும் மேற்பட்ட புதிய Fulfilment Centres மற்றும் 100-க்கும் மேற்பட்ட Last-mile Delivery Stations அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக டயர்-3 மற்றும் டயர்-4 நகரங்களுக்கு…
பிளாஸ்டிக் பால் பாக்கெட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், சோதனை அடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு மாற்றாக பால் விநியோகிக்கும் நடைமுறையை கண்டறிய ஆவினுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சோதனை முயற்சியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து தலா ரூ.3.60 லட்சம் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாகவும், அவற்றை நிறுவ தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அவற்றைச் சுற்றியுள்ள வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு…
கரூர் மாவட்ட கோயில் நிலங்களின் பத்திரப் பதிவு தடையை நீக்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்கள் தற்போது யார் பெயரில் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன உள்ளிட்ட முழு விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களின் பதிவுத் துறை தடையை, மாவட்ட ஆட்சியர் நீக்கியதை எதிர்த்து சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தரப்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில், மனுதாரர் தரப்பில் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தடையை நீக்கியதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலங்களில் வசித்து வந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், ரயத்துவாரி பட்டா உள்ளிட்ட ஆவணங்களை…
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வாதிட்டார். சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான முழு கட்டணம் மற்றும் செலவுத் தொகை வழங்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, உரிய கட்டணத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி…