Close Menu
    What's Hot

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    தமிழ்நாடு

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Editor web2By Editor web2July 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வாதிட்டார். சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான முழு கட்டணம் மற்றும் செலவுத் தொகை வழங்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, உரிய கட்டணத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கறிஞருக்கான ஆஜர் கட்டணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், போக்குவரத்து செலவை வழங்க இயலாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மிகவும் முக்கியமான இந்த வழக்கில், வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து 117 முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அந்த போக்குவரத்து செலவையும் அவரே ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று கருத்து தெரிவித்தனர்.

    Lawyer Mohan

    மேலும், ஆஜர் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவுகளை சேர்த்து ரூ.12.10 லட்சம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட தொகையை வழங்காமல், அதற்கு பதிலாக மேல்முறையீடு செய்து அரசின் நேரம், சக்தி மற்றும் மக்கள் பணத்தை செலவிடுவது தேவையற்றது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இறுதியாக, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த அமர்வு, சிறப்பு அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகளை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    GokulrajCase HonourKilling MadrasHighCourt tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100கோடி வசூல் விவகாரம் : திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!
    Next Article பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!
    Editor web2
    • Website

    Related Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    July 14, 2026

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.