Author: Editor web2

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்,  3 நாட்கள் பயணமாக நாளை, புதன்கிழமை தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கடந்த மே மாதம் 27 ம்தேதி டெல்லி  சென்றார்.  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்து விட்டு, மறுநாள்  சென்னை திரும்பி விட்டார். இந்த நிலையில் டெல்லியில் வரும் 11 ம் தேதி வியாழக்கிழமை, நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 3 நாட்கள் பயணமாக, நாளை 10 ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டுச்…

Read More

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் முக்கிய அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அதிமுக உறுப்பினர்கள் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் முதற்கட்டமாக 25 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நான்கு கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும், அவை அனைத்தும் சட்டப்பேரவை விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணை (கட்சி தாவல் தடுப்பு சட்டம்) அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். த.வெ.க. அரசுக்கு ஆதரவு…

Read More

லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. கடந்த 2009-2010ஆம் ஆண்டுகளில் சிக்கிம் மாநில லாட்டரிகளை விதிமுறைகளை மீறி விற்பனை செய்ததன் மூலம், சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.910 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிபிஐ வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதன் பின்னர், அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை, பின்னர் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி…

Read More

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தென் கொரியாவுக்கு சென்று, அந்நாட்டின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) நிறுவனத்தின் உல்சான் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். அப்போது கப்பல் கட்டுமானம், உற்பத்தி மேலாண்மை மற்றும் கடல்சார் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், நிறுவன அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தினார். தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான திட்டமே இந்த சந்திப்பின்…

Read More

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சட்டப்பேரவை துணைச் செயலாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களும் இந்த நடைமுறையில் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை தேவையான ஆவணங்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுகளுடன் தாக்கல் செய்திருந்தார். பரிசீலனையின் போது அவரது வேட்புமனு செல்லுபடியாக இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரவீன் சக்கரவர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை…

Read More

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு திமுக விளக்கம் அளித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு தொடர்பாக எழுந்துள்ள அரசியல் விவாதங்களுக்கு விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை…

Read More

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு கலைஞரின் புகழ்மட்டம் சற்றும் குறையவில்லை என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். மேலும், தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்று தனது கவித்துவமான பேச்சால் மேடையை அதிரவைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கலைஞரின் 103ஆம் பிறந்தநாள் விழாவுக்கு சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தின் எழுச்சியும் உணர்ச்சியும் கலைஞரின் புகழ்மட்டம் குறைந்துவிடவில்லை என்று கும்மியடித்தன. “தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை. இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான் தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு…

Read More

தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டதையொட்டி, மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு பாராட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின்வாரியத்தில் நிலவி வந்த டெண்டர் முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டெண்டரில் மட்டும் சுமார் 397 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்பட்ட நிதி கசிவை தடுக்கும் வகையில் புதிய டெண்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார். புதிய நடைமுறையின்படி, சந்தை விலை மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக்…

Read More

டெல்லியில் இன்று நடைபெற்ற ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருமா பேசியது என்ன? “நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு…

Read More

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வை வெளிப்படை தன்மையுடன் வழங்கியதாக அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரியத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் , மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ” மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாகச் செயற்பொறியாளர்களாகப்…

Read More