Author: Editor TN Talks

தென்மேற்கு பருவமழை வழக்கமான காலத்திலேயே ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கேரளா கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, மே 14 முதல் 20-ம் தேதிக்குள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பருவமழை ஆரம்பமாகும்.இது இந்திய நிலப்பரப்பை நோக்கி பருவமழை நகர்வின் ஆரம்ப கட்டமாக கருதப்படுகிறது. சில சர்வதேச வானிலை மாதிரிகள் இந்த ஆண்டு பருவமழை சற்றே முன்கூட்டியே வரலாம் எனக் காட்டினாலும், IMD இதுவரை அதனை உறுதி செய்யவில்லை. சாதாரணமாக, தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் ஒரு திட்டமிட்ட காலவரிசையில் முன்னேறும். அதாவது, இது “சர்ஜ்கள்” (surges) எனப்படும் பல்வேறு கட்டங்களாக வடக்குத் திசை நோக்கி நகரும். இந்த நகர்வை கடல் மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தீர்மானிக்கின்றன. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு…

Read More

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை விற்பனை செய்து வரும் ராஜா என்பவர், தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், த லீட் பேக்டரி என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான அப்துல் ஜலீல் உடன் வர்த்தக பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில்,  கொடுத்த 85 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டபோது, பணத்தைத் திருப்பி தரமறுத்து, மிரட்டல் விடுத்ததாக, ஜலீல் மீது  சென்னை திருமங்கலம் போலீசில் 2024ம் ஆண்டு ராஜா புகாரளித்தார். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு,  கடந்த ஆண்டு அப்துல் ஜலீலுக்கு எதிராக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ஜலீலை கைது செய்ய சென்னை…

Read More

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் மீஞ்சூர்–வண்டலூர் வெளிவட்டச் சாலை, ஜெயின் டெம்பிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், இரு வாகனங்களிலும் சாக்கு மூட்டைகளில்  2882 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்களுடன் குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கோபால், முத்துராஜ், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு குட்காப் பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.

Read More

ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கப்பல் போக்குவரத்து இயல்பான அளவிற்கு திரும்பாததால், உலக நாடுகள் மாற்று வழிகளை அவசரமாக தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சாதாரணமாக, தினமும் சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் மற்றும் உலகளாவிய இயற்கை எரி வாயு ஏற்றுமதியின் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக செல்கிறது. இதன் மூலம் ஹீலியம், உர உற்பத்திக்கான யூரியா போன்ற முக்கிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய முக்கியமான வழித்தடம் பாதிக்கப்படும்போது, உலகளாவிய பொருளாதாரம் அதிர்வை சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஹார்மூஸ் நீரிணைக்கு முழுமையான மாற்று இல்லை இந்த நிலையை எதிர்கொள்ள, பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட மாற்று வழிகள் தற்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் அவற்றின்  செயல்திறன், ஹார்மூஸ் நீரிணைக்கு முழுமையான மாற்றாக இருக்க…

Read More

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்ட நிரம்பி காணப்படுகிறது. கோடை வெயில் அதிகரித்தும் கூட, அதனை பொருட்படுத்தாமல் மக்கள் குளு குளுவென இருக்கும் சுற்றுலா மையங்களை நாடி செல்கின்றனர். கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா வகுப்புகளும் நிரம்பியதால், மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவை, பெங்களூரு நகரங்களுக்கு செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்களில் வருகிற 17-ந்தேதி வரை இடமில்லை. மே மாதம் இறுதி வரையில் இதே நிலைதான் நீடிக்கும். ஜூன் மாதம் முதல் வாரம் வரை ரெயில்களில்…

Read More

கூட்டணி கட்சியினருக்கு வி.சி.க.வினர் ஒற்றுமையாக பணியாற்றவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தேர்தலில் நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டது. ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர. அது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற நடைமுறைதான். தி.மு.க.வில் கூட 60 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அப்படியென்றால் 60 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.…

Read More

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதி பறைச்சேரி என அரசு ஆவணங்களில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்பெயரை வடக்கு அச்சம்தவிர்த்தான் என மாற்றம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.  கடந்த 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதோடு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இப் பிரச்சனையில் அதிகாரிகளிடம் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த நிலையில் இன்னும் அரசு ஆவணங்களிலும், வாக்காளர் பட்டியலிலும் பெயர் மாறாமல் பறைச்சேரி என்று இருந்ததால் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணிப்பு செய்வதாகக் கூறினர். இதையடுத்து, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அரசு அமைந்த உடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக…

Read More

திருச்சி அருகே காவிரி ஆற்றில் நள்ளிரவில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால்  மே 7-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ​திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரியும், இதில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் மே மாதம் 7-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதே வேளை தொட்டியம் காவல் நிலையம், முசிறி சப் கலெக்டர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். ​மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்ல. ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. ​தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோத சக்திகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு…

Read More

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை , ஈரோடு , திருப்பூர் , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி , ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளின் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது துணி நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் நூல் விலை உயர்வடைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11% வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை குறைந்தது நூல் விலையில் மாற்றம் இல்லாமல் சராசரி…

Read More

தமிழக சட்டமன்ற பொது தேர்தல்  வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள்  இன்று தமிழகம் வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மே நான்காம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 8:30 மணி அளவில் எண்ணும் பணி தொடங்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வாக்கு எண்ணிக்கை பணிகளிலே ஈடுபடக்கூடிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மே நான்காம் தேதி யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர், தங்கள் சட்டமன்ற தொகுதி…

Read More