Author: Editor TN Talks

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை சுற்றுலாப் படகில் பார்க்க சென்ற 31 பேர் இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்தனர். அணையில் மூழ்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Read More

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முதன்முறையாக களம்கண்டுள்ள தவெக, இந்த தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிந்த கையோடு ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். கடந்த 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சென்ற அவர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சென்றவர், சாய்பாபாவை தரிசனம் செய்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், விஜய் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை வேளாங்கண்ணி செல்லும்…

Read More

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வுக்கு இன்று முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்டுள்ளார். விடுமுறை காலத்திலும் அவசர வழக்குகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் “விடுமுறை கால அமர்வுகள்” (Vacation Benches) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமர்வுகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கான மனுக்களை, வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ். சவுந்தர், எல். விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, பி. தனபால், என். செந்தில்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன், ஆர். சக்திவேல், முகமது சபீக் ஆகியோர் விடுமுறை கால அமர்வுகளில் அவசர வழக்குகளை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை அமர்வில் நீதிபதிகள் பி. வேல்முருகன், எஸ். ஸ்ரீமதி, சி. குமரப்பன், ஜி.கே. இளந்திரையன், கே.கே.…

Read More

தமிழகத்தில் மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள் உள்ளிட்ட 95க்கும் மேற்பட்டோர் ஒரே கட்டமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார். இந்த மாற்றங்களில், முக்கிய அரசியல் மற்றும் பிரபல வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சி. சஞ்சய்பாபா மற்றும் என். வேங்கடவரதன் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தவெக தலைவர் விஜய் தொடர்புடைய விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலாவும் பணியிட மாற்றப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் வழக்கமான நிர்வாக மாற்றங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நீதித்துறை நிர்வாகத்தில்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூட்டணி கட்சிகள் விழிப்புடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அதிமுக மற்றும் நமது கூட்டணியில் இடம்…

Read More

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 29 அன்று வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால், எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து தெளிவற்ற சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கூறுகின்றன. குறிப்பாக அக்னி நிறுவனம் 169 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் எனக் கணித்திருக்க, சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் 145 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், பி-மார்க், பீப்பிள்ஸ் இன்சைட் போன்ற நிறுவனங்களும் இதே போக்கை காட்டுகின்றன. குழப்பத்தை ஏற்படுத்திய கருத்துக்கணிப்புகள் ஆனால், அதிமுக கூட்டணிக்குச் சாதகமான கணிப்புகளும் வெளியாகியுள்ளன. CNN News18 மற்றும் JVC நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள்…

Read More

ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வரும் தவெக தலைவர் நடிகர் விஜய், அடுத்ததாக வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவுற்ற நிலையில் அதன் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தகிக்கும் அனலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு வேட்டையாடிய அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தேர்தல் முடிவுற்றதும் தங்களை குளுமைப்படுத்திக் கொள்ள மலைவாசஸ்தலங்களுக்கு சென்று வருகிறார்கள் ஆனால் தவெக தலைவரும் நடிகருமான விஜயோ தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்னும் வேட்கையில், கடவுளிடம் சரணாகதி அடைந்து ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.  கடந்த 28-ம் தேதி திருச்செந்தூர் சென்ற விஜய், அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் ஏப்ரல் 29ஆம்தேதி மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தனி விமானத்தில் சென்று…

Read More

நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை வெளியிட தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது. கவுதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் துருவ நட்சத்திரம். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன், இயக்குனர் கவுதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பான நிதிப் பிரச்சினை காரணமாக, துருவ நட்சத்திரம் படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு மதன் வழங்கினார். இச்சூழலில் கடந்த 2023ல் படத்தை வெளியிட கவுதம் வாசுதேவ் மேனன் முயற்சித்தபோது, தங்களுக்கு சேரவேண்டிய தொகையை தராமல் படத்தை வெளியிட கூடாது என புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்துக்கு தடை…

Read More

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த கியூஆர் அடிப்படையிலான அடையாள முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 1. அங்கீகரிக்கப்படாத நபர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக நீக்கும் பொருட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் ECINET தளத்தில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2. 2026 மே 04 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையிலிருந்து தொடங்கி, இந்த முறையானது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான எதிர்கால அனைத்து பொது மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 3. இந்த முக்கியமான முன்னெடுப்பானது, கடந்த ஓராண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகும். 4. வாக்கு எண்ணும் மையங்களில் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக மும்முனைப் பாதுகாப்பு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் முனைகளில், வாக்கு எண்ணும் அலுவலரால் (RO) வழங்கப்பட்ட புகைப்பட அடையாள…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் முன்பாகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்னும்  குரல்கள் காங்கிரஸில் இருந்து எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குரல்களின் பின்னணியில் மறைந்திருப்பது தலைமைப் பதவிக்கான தவிப்பில் இருப்பவர்கள்தான். கட்சியை வளர்ப்பதற்கான எவ்வித நோக்கமும் இல்லாமல்,  வலிமையான தலைமைக்கு “கை“ கொடுக்காமல், கட்சியை வளர்க்க எந்த திட்டமும் இல்லாத இவர்களின் நோக்கம் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது மட்டும்தான். தவிர காங்கிரஸை வலுப்படுத்துவதோ அல்லது  வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்கும் முயற்சிகளுக்கானதோ அல்ல… அது காங்கிரஸ் இயக்கத்தை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட சதி அரசியல்.ஆகும் ஆனால், தலைமை என்பது பதவி அல்ல அது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் தனது நேர்மை, துணிவு, மக்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் தனித்துவமாக மிளிர்பவர் கு.செல்வப் பெருந்தகை. காங்கிரஸ் கட்சியை ஒழுங்குபடுத்தி…

Read More