Author: Editor TN Talks
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்து வாக்கு எந்திரங்கள் ஐந்தடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன். வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அவர் ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்ற மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பார்த்திபன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. நாள்தோறும் மது அருந்திவிட்டு வரும் பார்த்திபன் மனைவி பிரேமகுமாரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த பார்த்திபன், போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன வேதனையடைந்த பிரேமகுமாரி, வீட்டை விட்டு வெளியேறி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன், மனைவியைக் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பாறையில் மோதி மயங்கிய பார்த்திபன் தன்ணீருக்குள் மூழ்கியுள்ளார். இதனால் பிரேமகுமாரி கூச்சலிடவே, சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞர்கள் கிணற்றில் குதித்து பிரேமகுமாரியை காப்பாற்றியுள்ளனர். பார்த்திபனை தேடிப்பார்த்தும் மீட்கமுடியாததால், உடனடியாக…
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும். பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில், பக்தர்களின் மனநிலைக்கு ஏற்ப இறைவன் குழந்தை, இளைஞன், முதியவர் ஆகிய வடிவங்களில் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. குறிஞ்சி நிலத்தின் காவடி சிறப்பை ஒத்த வகையில், மருத நிலமான எட்டுக்குடியில் பால் காவடி மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக நகர்ந்து மீண்டும் தேரடியை வந்தடையும். சித்ரா…
நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 சிலம்ப வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சர்வதேச ஆசான் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நேபாளில் சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிங்கிள் ஸ்டிக், டபுள் ஸ்ட்ரீட், சுருள்வால் எனப் பல்வேறு பிரிவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி, அவர்களின் கடின உழைப்பையும், பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த சாதனையின் மூலம் அவர்கள் விரைவில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களின் வெற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்கால போட்டிகளிலும் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உழைப்பாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் கழக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செய்து வந்தனர். ‘தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்டாகத்தான் ஆகி இருப்பேன்’ என்று சொன்ன தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த போதெல்லாம் தொழிலாளர் நலம்காக்க எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்துள்ளனர். இதையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை யாகசாலைகள் பூஜைகள் நிறைவுபெற்று, தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள், கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கருவறையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ பெரிய மாரியம்மன் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா மங்கள ஆரத்திகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான…
புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான நிகழ்வில் கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2024 மார்ச் மாதம் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கால்வாயில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற இளைஞரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பனைமரத்தில் நுங்கு பறித்தபோது, மின்சார கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் (வயது 17), தட்சணாமூர்த்தி (வயது 17) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களும் தங்கள் நண்பர்களுடன் மின் கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நுங்கு மின்மாற்றியின் வயரில் சிக்கியது. அதனை கரும்பு கம்பியைப் பயன்படுத்தி எடுத்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர்,…
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியின் போது தபால் வாக்குகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், வாக்கு எண்ணும் போது பராமிக்ககூடிய படிவங்கள் 18, 20, 21 E, 21 C மற்றும் E, 22 உள்ளிட்ட 15 ஆவணங்கள் குறித்தான பயிற்சியும், வாக்குச்சவாடி முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 17C படிவத்தை வழங்குவது குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு வர கூடாது எனவும் வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் இருக்கும். Micro Observer (நுண்…
ஈரானுடன் நடத்தி வரும் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாக ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானுடன் தொடர்ந்து போர் நடத்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அறிவித்து, கடந்த 11ஆம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்தை மேற்கொண்டது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஈரானின் துறைமுகங்கள் உள்பட ஒட்டுமொத்த கடற்பகுதியையும் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது, ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதால் ஹார்முஸ் நீரிணையை கடந்த 17-ந்தேதி முழுமையாக ஈரான் திறந்தது. இந்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் அதாவது இந்திய…