Author: Editor TN Talks

கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23ம் தேதி முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இன்று (ஏப்ரல் 29) 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருந்தது. Matrize TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 120 – 140 BJP (பாரதிய ஜனதா கட்சி): 146 – 161 இடதுசாரிகள் + காங்கிரஸ்: 5 – 10 NDTV Peoples Pluses TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 177 – 187 BJP (பாரதிய ஜனதா கட்சி): 95 – 110 இடதுசாரிகள் + காங்கிரஸ்:…

Read More

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பினை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் என்.டி.டி.வி நடத்திய கருத்துக்கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் எனவும், அதிமுக 65 முதல் 80 இடங்களில் வெற்றி பெறும், விஜய்யின் தவெக 18 முதல் 24 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 02-06 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. MATRIZE  நிறுவன தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 -132 இடங்களையும், அதிமுக 87 – 100 இடங்களையும், …

Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வக்கீலாக பதிவு செய்ததையொட்டி, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.பி சுதா, இந்தப் பதிவை நீக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல் பதிவுக்குழு தலைவர் கே.பாலு  இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளார்.  1961- வக்கீல்கள் சட்டம் பிரிவு 24-ன்படி வக்கீல்கள் பதிவு செய்வதற்கான தகுதிகள் குறித்து கூறுகிறது. பிரிவு 24 ஏ- தகுதியின்மை குறித்து தெளிவுப்படுத்துகிறது. அதில், பிரிவு 24 ஏ கீழ் ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டினால் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு வக்கீலாகப்பதிவு செய்யலாம் என கூறுகிறது.  அதன் அடிப்படையில் பேரறிவாளன் முறைப்படி சட்டக்கல்வி பயின்று, பிறகு  பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். அவர் 2022-ம் ஆண்டு விடுதலை ஆனார். அவரது விண்ணப்பம், அலுவலக குறிப்பு ஆகியவை பார் கவுன்சில்…

Read More

தென்கயிலாயம் எனப்போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர். தொடர்ந்து 5 ஆம் நாளன 25 ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், ஆறாம் நாளான 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை  தொடங்கியது, மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக  பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன. ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் ஆண்டாள் வீதி,…

Read More

வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி சுதா எதிர்ப்புதெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேர் நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின்னர்  உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியில் வந்த பேரறிவாளன் வழக்கறிஞர் தொழிலை தேர்வு செய்து, கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். கடந்த 27ஆம் தேதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைவதை வழக்கறிஞராக…

Read More

அடுத்தது திராவிடம் மாடல் ஆட்சி 2.0 தா. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார். முருகனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோவில் திரி சுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை மற்றும் 5 அடி வேல் கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மூலவர், சண்முகர், சத்ரு சம்கார மூர்த்தி, பெருமாள் வள்ளி தெய்வானை ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசினார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 400 கோடி மதிப்பில் மெகா திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஐந்து படை வீடுகளில் உள்ள தெய்வங்களை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளோம். இதனால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் ஐந்து…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-ஐ இன்று நேரில் சந்தித்து மனு வழங்கிய பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில நாட்களாக பல்வேறு தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தமிழக வெற்றி கழகம் தேர்தல் அதிகாரியிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். வரவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவிதமான குளறுபடிகளும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் செயல்முறை நடைபெற வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் சில குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனால் எந்தத் தவறும் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக…

Read More

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட  வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, கட்சித் தலைவர் திருமாவளவன், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்ததாக, இந்து முன்னணி பொதுச் செயலாளர் டி.என்.கண்ணன் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவுசெய்தனர். புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விசிக தலைவர்  திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற…

Read More

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண் – செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஹரஹர மகாதேவா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.

Read More

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்கள் கடந்தும், முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் குறித்து ஆரம்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், முழுமையான எண்ணிக்கைகள் மற்றும் பாலின அடிப்படையிலான விவரங்கள் இன்னும் வெளிவராததால் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் விளக்கம் கேட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் பதற்றம் தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 85.15% என அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மறுபரிசோதனை செய்யப்பட்டபோது அந்த எண்ணிக்கை 85.10% ஆக திருத்தப்பட்டது. அதாவது 0.05 சதவீதம் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இத்தகைய சிறிய திருத்தங்கள் தேர்தல் கணக்கீட்டில் சாதாரணமானவை என்றாலும், இதுவரை…

Read More