Author: Editor TN Talks
சென்னையில் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் தனது ஸ்டுடியோவில் ரகசிய காமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்ததாக பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். தனது வசிகர குரல்மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாதா கிருஷ்ணன், காயல் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அண்மையில் அவர் அளித்திருந்த பேட்டியில், பாலியல் அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் பாடவேண்டும் என்னும் ஆசையுடன் வாய்ப்புகளைத் தேடியபோது சிலர் தவறான எண்ணத்துடன் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தான் அதற்கு உடன்படாமல் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்தபோதுதான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாகவும் அவர் பகீர் தெரிவித்துள்ளார். ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்களை வைத்து அந்த இசையமைப்பாளர் பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களுக்கு ஆன்மீகப் போர்வை போர்த்தி நியாயப்படுத்தியதாகவும் ஸ்வாதா தெரிவித்துள்ளார். மேலும்…
தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 23-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், எப்போதும் இல்லாத அளவு 93.2% வாக்குகள் பதிவாகி இருந்தது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதிக்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்ட தேர்தலில் மொத்தம் 3கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 837 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அவர்களுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்த மாநில போலீசாருடன் இணைந்து 2,321 கம்பெனி மத்திய போலீஸ் படையும் களம் இறங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
வழக்கறிஞர் சங்கங்களின் மிகப் பெரிய சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) தேர்தல் நாளை நடைபெறுகின்றது. தமிழகத்தில் மிகப் பெரிய வழக்கறிஞர் சங்கமாகவும் 150 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சங்கமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (MHAA) உள்ளது. இதில் சுமார் 21 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 5 ஆயிரத்து 800 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் நிலையில், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடக்கிறது. தலைவர் பதவிக்கு எம்.வேல்முருகன், ஆர்.சி.பால் கனகராஜ், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 5 பேரும் துணை தலைவர் பதவிக்கு பாரதி, மகாவீர் சிவாஜி, மோகன்தாஸ், முரளி, சசிக்குமார் உள்ளிட்ட 13 பேரும் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு எஸ்.அறிவழகன், எஸ்.காமராஜ், எஸ் செந்தமிழன் உள்ளிட்ட 9 பேரும் பொருளாளர் பதவிக்கு ஆனந்த், ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். நூலகர் பதவிக்கு…
புதுச்சேரி அருகே தகாத உறவு பிரச்சினை காரணமாக, கெமிக்கல் இன்ஜினியர் ஒருவர் வீட்டிலேயே தாக்கி உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). கெமிக்கல் இன்ஜினியரான மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த ராஜாவுடன் நெருங்கிய நட்பில் இருந்ததால், அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, வசந்தராஜாவின் மனைவியுடன், மணிகண்டனுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வசந்த ராஜா பலமுறை கண்டித்தும், மணிகண்டன் நடத்தையில் மாற்றம் இல்லாததால் இருவரிடையேயும் விரோதம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மணிகண்டனின் இருசக்கரவாகனத்தை வசந்த ராஜா அடமானம் வைத்து பணம் பெற்றது தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மணிகண்டனுக்கும் வசந்தராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது. இதன் உச்சகட்டமாக வசந்தராஜா, அங்கிருந்த கடப்பாரையால் சரமாரியாகத் தாக்கியதில் மணிகண்டன்பலத்த காயம் அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும்,…
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க தெய்வங்களின் ஆசிவேண்டு, தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் நாளை மண்சோறு உண்ணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று முதலமைச்சராக மு க ஸ்டாலின் மீண்டும் பதவி ஏற்க மக்கள் தீர்ப்புடன் தெய்வங்களின் ஆசி வேண்டி நாளை 29.04.2026 புதன்கிழமை காலை 11 to 11.30 மணியளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அங்காளம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக தெய்வீக பக்தர்கள் பேரவையினர் கடந்த மார்ச் 13 -ம் தேதி முதல் 48 நாட்கள் விரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சியையொட்டி, சிதம்பரம் அங்காளம்மன்கோவிலில் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழீழ விடுதலைப் பாடகரும், பாட்டாளி மக்கள் கட்சியுடன் உறவு கொண்டவருமான பாடகர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பிறந்த பாடகர் தேனிசை செல்லப்பா அவரது இளம் வயதில் நடிகவேள் எம்.ஆர். இராதா, நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் ஆகியோருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான பாடல்களை பாடி வந்தார். பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தேனிசை செல்லப்பாவின் எழுச்சிக் குரல் மீது விருப்பம் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவருக்கு பாசறைப் பாணர் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் மேடைகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்காக…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, யோகி பாபு, ஆர்.ஜே. பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். திரைப்படம் மே 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எங்கு நம்பிக்கை இருக்கிறதோ…. அங்கு அற்புதங்கள் நிகழும் விழாவில் பேசிய சூர்யா, “மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை…
தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பா, தனது 85 ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் புகழஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் தேனிசை செல்லப்பாவின் தமிழ்ப் பணிகள் குறித்து தெரிவித்தார். புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியது தேனிசை செல்லப்பாவின் குரல்தான். காசியானந்தன், மரத்தமிழன் ஆகியோரின் பாடல்களையும், தானே சொந்தமாக எழுதியப் பாடல்களையும் பாடியவர் தேனிசை செல்லப்பா. பெயர்தான் தேனிசை செல்லப்பாவே தவிர,இன எழுச்சி முழக்க இசை அவருடையது. கடைக்கோடி மண்ணில் இருந்த பல லட்சக்கணக்கான பிள்ளைகளுக்குஇன உணர்வு, மான உணர்வு, மொழிப்பற்று வரலாற்று பெருமை இவையெல்லாம் கொண்டு வந்து சேர்த்தது அவரது குரல்தான். தமிழையும் தலைவனையும் மட்டுமே பாடிய அந்தக் குரல், அதன்பிறகு எனது கட்சியைப் பாடியுள்ளது. சி.பா.ஆதித்தனா நாம் தமிழர் கட்சியைத் தொடங்கியபோது அதில் இருந்த முதன்மையானவர்களில் ஒருவர் தேனிசை செல்லப்பா. ஆயிரக்கணக்கான பாடல்களை…
இந்தியாவில் விமான சேவைத் துறை கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடி அரசு தலையீடு இல்லையெனில் சில சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. விமான எரிபொருள் விலை (ATF) கடுமையாக உயர்ந்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு ( Federation of Indian Airlines – FIA) அமைப்பு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நிலைமை “மிகுந்த அழுத்தத்தை” உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் ஏர் இந்தியா,இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எரிபொருள் விலை கடும் உயர்வு சமீபத்திய விலை உயர்வால்,விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இந்த அதிகரிப்புக்கு…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். தமிழ்த்தேசிய விடுதலைக் களத்தில் தனது எழுச்சிப் பாடல்களின் மூலம் பெரும்பங்காற்றிய தேனிசை செல்லப்பா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்! திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சிங்கிலிப்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த செல்லப்பா அவர்கள், தொடக்ககாலத்தில் திராவிடர் கழகத்தின் மேடைகளிலும் பின்னர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மேடைகளிலும் பாடிவந்தார். பின்னர் தமிழ்த்தேசியக் களத்தில் ஈடுபாடு கொண்டு தமிழீழ விடுதலைக்கான பாடல்களை இயற்றி பாடினார். அவரது பாடல்கள் எளிய மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர். தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில்…